Divyaprabandham Pasurams 1448 to 2081

Jaya Jaya Sri Sudarsana !

Sri Sudarsana Chakram

Jaya Jaya Sri Sudarsana !

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 1448- 2081)) 


திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 
பெரிய திருமொழி 



ஆறாம் பத்து 

1448 
வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு 
பண்டைநம் வினைகெட வென்று, அடிமேல் 
தொண்டரு மமரும் பணியநின்று 
அங்கண்டமொ டகலிட மளந்தவனே. 
ஆண்டாயுனைக் கான்பதோ 
ரருளெனக் கருளுதியேல், 
வேண்டேன்மனை வாழ்க்கையை 
விண்ணகர் மேயவனே (6.1.1) 

1449 
அண்ணல்செய் தலைகடல் கடைந்ததனுள் 
கண்ணுதல் நஞ்சுணக் கண்டவனே 
விண்ணவ ரமுதுண அமுதில்வரும் 
பெண்ணமு துண்டவெம் பெருமானே . 
ஆண்டாயுனைக் காண்பதோ 
ரருளெனக் கருளுதியேல், 
வேண்டேன்மனை வாழ்க்கையை 
விண்ணகர் மேயவனே (6.1.2) 

1450 
குழல்நிற வண்ண நின் கூறுகொண்ட 
தழல்நிற வண்ணன் நண் ணார்நகரம் 
விழ, நனி மலைசிலை வளைவுசெய்துஅங் 
கழல்நிற அம்பது வானவனே. 
ஆண்டாயுன்னைக் காண்பதோ 
ரருளெனக் கருளுதியேல், 
வேண்டேன்மனை வாழ்க்கையை 
விண்ணகர் மேயவனே (6.1.3) 

1451 
நிலவொடு வெயில்நில விருசுடரும் 
உலகமு முயிர்களு முண்டொருகால், 
கலைதரு குழவியி னுருவினையாய் 
அலைகட லாலிலை வளர்ந்தவனே. 
ஆண்டாயுனைக் காண்பதோ 
ரருளெனக் கருளுதியேல், 
வேண்டேன்மனை வாழ்க்கையை 
விண்ணகர் மேயவனே (6.1.4) 

1452 
பாரெழு கடலெழு மலையெழுமாய்ச் 
சீர்கெழு மிவ்வுல கேழுமெல்லாம், 
ஆர்கெழு வயிற்றினி லடக்கி நின்று அங் 
கோரெழுத் தோருரு வானவனே. 
ஆண்டாயுனைக் காண்பதோ 
ரருளெனக் கருளுதியேல், 
வேண்டேன்மனை வாழ்க்கையை 
விண்ணகர் மேயவனே (6.1.5) 

1453 
கார்கெழு கடல்களும் மலைகளுமாய் 
ஏர்கெழு முலகமு மாகி,முத 
லார்களு மறிவரு நிலையினையாய்ச் 
சீர்கெழு நான்மறை யானவனே. 
ஆண்டாயுனைக் காண்பதோ 
ரருளெனக் கருளுதியேல், 
வேண்டேன்மனை வாழ்க்கையை 
விண்ணகர் மேயவனே (6.1.6) 

1454 
உருக்குறு நறுநெய்கொண் டாரழலில் 
இறுக்குறு மந்தணர் சந்தியின்வாய், 
பெருக்கமொ டமரர்க ளமரநல்கும் 
இருக்கினி லின்னிசை யானவனே. 
ஆண்டாயுனைக் காண்பதோ 
ரருளெனக் கருளுதியேல், 
வேண்டேன்மனை வாழ்க்கையை 
விண்ணகர் மேயவனே (6.1.7) 

1455 
காதல்செய் திளையவர் கலவிதரும் 
வேதனை வினையது வெருவுதலாம், 
ஆதலி னுனதடி யணுகுவன் நான். 
போதலார் நெடுமுடிப் புண்ணியனே. 
ஆண்டாயுனைக் காண்பதோ 
ரருளெனக் கருளுதியேல், 
வேண்டேன்மனை வாழ்க்கையை 
விண்ணகர் மேயவனே (6.1.8) 

1456 
சாதலும் பிறத்தலு மென்றிவற்றைக் 
காதல்செய் யாதுன கழலடைந்தேன், 
ஓதல்செய் நான்மறை யாகியும்பர் 
ஆதல்செய் மூவுரு வானவனே., 
ஆண்டாய் உனைக் காண்பதோ 
ரருளெனக் கருளுதியேல் 
வேண்டேன்மனை வாழ்க்கையை 
விண்ணகர் மேயவனே. (6.1.9) 

1457 
பூமரு பொழிலணி விண்ணகர்மேல், 
காமரு சீர்க்கலி கன்றிசொன்ன, 
பாமரு தமிழிவை பாடவல்லார், 
வாமனன் அடியிணை மருவுவரே 
(6.1.10) 

1458 
பொறுத்தேன் புன்சொல்நெஞ் சில்பொரு 
ளின்ப மெனவிரண்டும் 
இறுத்தேன், ஐம்புலன் கட்கட 
னாயின வாயிலொட்டி 
அறுத்தேன், ஆர்வச்செற் றமவை 
தன்னை மனத்தகற்றி 
வெறுத்தேன், நின்னடைந் தேன்திரு 
விண்ணகர் மேயவனே (6.2.1) 

1459 
மறந்தே னுன்னைமுன்னம fமறந் 
தமதி யின்மனத்தால், 
இறந்தே னெத்த னையுமத 
னாலிடும் பைக்குழியில் 
பிறந்தே யெய்த்தொழிந் 
தேன்பெ ருமானே திருமார்பா 
சிறந்தேன் நின்னடிக் கேதிரு 
விண்ணகர் மேயவனே (6.2.2) 

1460 
மானெய் நோக்கியர் தம்வயிற் 
றுக்குழி யிலுழைக்கும், 
ஊனேராக்கை தன்னை உ<த 
வாமை யுணர்ந்துணர்ந்து, 
வானே மானில மே வந்து 
வந்தென் மனத்திருந்த 
தேனே, நின்னடைந் தேன்திரு 
விண்ண்ணகர் மேயவனே (6.2.3) 

1461 
பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி 
ரென்றிவர் பின்னுதவா 
தறிந்தேன் நீபணித் தவரு 
ளென்னுமொள் வாளுருவி 
எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் 
தீர வெறிந்துவந்து 
செறிந்தேன் நின்னடிக் கேதிரு 
விண்ணகர் மேயவனே (6.2.4) 

1462 
பாண்டேன் வண்டறை யும்குழ 
லார்கள்பல் லாண்டிசைப்ப, 
ஆண்டார் வையமெல் லாம் அர 
சாகி, முன்னாண்டவரே 
மாண்டா ரென்றுவந் தார்அந் 
தோமனை வாழ்க்கைதன்னை 
வேண்டேன், நின்னடைந் தேன்திரு 
விண்ணகர் மேயவனே (6.2.5) 

1463 
கல்லா வைம்புலன் களவை 
கண்டவா செய்யகில்லேன், 
மல்லா, மல்லம ருள்மல் 
லர்மாள மல்லடர்த்த 
மல்லா, மல்லலம் சீர்மதிள் 
நீரிலங் கையழித்த 
வில்லா, நின்னடைந் தேன்திரு 
விண்ணகர் மேயவனே (6.2.6) 

1464 
வேறா யானிரந் தேன்வெகு 
ளாது மனக்கொளந்தாய், 
ஆறா வெந்நர கத்தடி 
யேனை யிடக்கருதி, 
கூறா ஐவர்வந் துகுமைக் 
கக்குடி விட்டவரை, 
தேறா துன்னடைந் தேன்திரு 
விண்ணகர் மேயவனே (6.2.7) 

1465 
தீவாய் வல்வினை யாருட 
னின்று சிறந்தவர்போல், 
மேவா வெந்நர கத்திட 
உற்று விரைந்துவந்தார், 
மூவா வானவர் தம்முதல் 
வா மதி கோள்விடுத்த 
தேவா, நின்னடைந் தேன்திரு 
விண்ணகர் மேயவனே (6.2.8) 

1466 
போதார் தாமரை யாள்புல 
விக்குல வானவர்தம் 
கோதா, கோதில்செங் கோல்குடை 
மன்ன ரிடைநடந்த 
தூதா, தூமொழி யாய்.சுடர் 
போலென் மனத்திருந்த 
வேதா, நின்னடைந் தேன்திரு 
விண்ணகர் மேயவனே (6.2.9) 

1467 
தேனார் பூம்புற வில்திரு 
விண்ணகர் மேயவனை, 
வானா ரும்மதில் சூழ்வயல் 
மங்கையர் கோன், மருவார் 
ஊனார் வேல்கலி யனொலி 
செய்தமிழ் மாலைவல்லார், 
கோனாய் வானவர் தம்கொடி 
மாநகர் கூடுவரே (6.2.10) 

1468 
துறப்பேன் அல்லேனின் பம்துற 
வாது, நின்னுருவம் 
மறப்பே னல்லேனென் றும்மற 
வாது, யானுலகில் 
பிறப்பே னாகவெண் ணேன்பிற 
வாமை பெற்றது, நின் 
திறத்தே னாதன் மையால் 
திருவிண் ணகரானே (6.3.1) 

1469 
துறந்தே னார்வச் செற்றச்சுற் 
றம்து றந்தமையால், 
சிறந்தேன் நின்னடிக்கே 
யடிமை திருமாலே, 
அறந்தா னாய்த்திரி வாய் உன் 
னையென் மனத்தகத்தே, 
திறம்பா மல்கொண் டேன்திரு 
விண்ணகரானே (6.3.2) 

1470 
மானேய் நோக்குநல்லார் 
மதிபோல்முகத்துலவும், 
ஊனேய் கண்வாளிக் குடைந்தோட் 
டந்துன் னடைந்தேன், 
கோனே குறுங்குடியுள் 
குழகா திருநறையூர்த் 
தேனே, வருபுனல்சூழ் 
திருவிண் ணகரானே (6.3.3) 

1471 
சாந்தேந்து மென்முலை யார்தடந் 
தோள்புண ரின்பவெள்ளத் 
தாழ்ந்தேன், அருநகரத் 
தழுந்தும் பயன்படைத்தேன், 
போந்தேன், புண்ணியனே. 
உனையெய்தியென் தீவினைகள் 
தீர்ந்தேன், நின்னடைந்தேன் 
திருவிண் ணகரானே (6.3.4) 

1472 
மற்றோர் தெய்வமெண்ணே 
னுன்னையென் மனத்துவைத்துப் 
பெற்றேன், பெற்றதுவும் 
பிறவாமை யெம்பெருமான், 
வற்றா நீள்கடல்சூ 
ழிலங்கையி ராவணனைச் 
செற்றாய், கொற்றவனே. 
திருவிண் ணகரானே (6.3.5) 

1473 
மையொண் கருங்கடலும் 
நிலனு மணிவரையும், 
செய்ய சுடரிரண்டும் 
இவையாய நின்னை, நெஞ்சில் 
உய்யும் வகையுணர்ந்தே 
_ண்மையாலினி யாது மற்றோர் 
தெய்வம் பிறிதறியேன் 
திருவிண் ணகரானே (6.3.6) 

1474 
வேறே கூறுவதுண் 
டடியேன் விரித்துரைக்கு 
மாறே, நீபணியா 
தடைநின் திருமனத்து, 
கூறேன் நெஞ்சுதன்னால் 
குணங்கொண்டு மற் றோர்தெய்வம் 
தேறே னுன்னையல்லால் 
திருவிண் ணகரானே (6.3.7) 

1475 
முளிதீந்த வேங்கடத்து 
மூரிப்பெ ருங்களிற்றால், 
விளிதீந்த மாமரம்போல் 
வீழ்ந்தாரை நினையாதே 
அளிந்தோர்ந்த சிந்தைநின்பா, 
லடியேற்க்கு, வானுலகம் 
தெளிந்தேயென் றெய்துவது? 
திருவிண் ணகரானே (6.3.8) 

1476 
சொல்லாய் திருமார்வா 
உனக்காகித் தொண்டுபட்ட 
நல்லே னை வினைகள் 
நலியாமை நம்புநம்பீ, 
மல்லாகுடமாடி. 
மதுசூத னே உலகில் 
செல்லா நல்லிசையாய் 
திருவிண் ணகரானே (6.3.9) 

1477 
தாரார் மலர்க்கமலத் 
தடஞ்சூழ்ந்த தண்புறவில், 
சீரார் நெடுமறுகில் 
திருவிண் ணகரானை 
காரார் புயல்தடக்கைக் 
கலிய னொலிமாலை, 
ஆரா ரிவைவல்லார் 
அவர்க்கல்லல் நில்லாவே (6.3.10) 

1478 
கண்ணும் சுழன்று பீளையோ 
டீளைவந் தேங்கினால், 
பண்ணின் மொழியார் பைய 
நடமின் என் னாதமுன், 
விண்ணும் மலையும் வேதமும் 
வேள்வியு மாயினான், 
நண்ணு நறையூர் நாம்தொழு 
தும்மெழு நெஞ்சமே (6.4.1) 

1479 
கொங்குண் குழலார் கூடி 
யிருந்து சிரித்து, நீர் 
இங்கென்னிருமி யெம்பால் 
வந்ததென் றிகழாதமுன், 
திங்க ளெரிகால் செஞ்சுட 
ராயவன் தேசுடை 
நங்கள் நறையூர் நாம்தொழு 
தும்மெழு நெஞ்சமே (6.4.2) 

1480 
கொங்கார் குழலார் கூடி 
யிருந்து, சிரித்து, எம்மை 
எங்கோலம் ஐயா என்னினிக் 
காண்பதென் னாதமுன் 
செங்கோல் வலவன் தான்பணிந் 
தேத்தித் திகழுமூர், 
நங்கோன் நறையூர் நாம்தொழு 
தும்மெழு நெஞ்சமே (6.4.3) 

1481 
கொம்பும் அரவமும் வல்லியும் 
வெண்றனுண் ணேரிடை, 
வம்புண் குழலார் வாச 
லடைத்திக ழாதமுன், 
செம்பொன் கமுகினந் தான்கனி 
யும்செழுஞ் சோலைசூழ் 
நம்பன் நறையூர் நாம்தொழு 
தும்மெழு நெஞ்சமே (6.4.4) 

1482 
விலங்கும் கயலும் வேலுமொண் 
காவியும் வெண்றகண் 
சலம்கொண்ட சொல்லார் தாங்கள் 
சிரித்திக ழாதமுன், 
மலங்கும் வராலும் வாளையும் 
பாய்வயல் சூழ்தரு, 
நலங்கொள் நறையூர் நாம்தொழு 
தும்மெழு நெஞ்சமே (6.4.5) 

1483 
மின்னே ரிடையார் வேட்கையை 
மாற்றி யிருந்து, 
என்னீ ரிருமியெம் பால்வந்த 
தென்றிக ழாதமுன், 
தொன்னீ ரிலங்கை மலங்க 
இலங்கெரி யூட்டினான், 
நன்னீர் நறையூர் நாம்தொழு 
தும்மெழு நெஞ்சமே (6.4.6) 

1484 
வில்லேர் நுதலார் வேட்கையை 
மாற்றிச் சிரித்து, இவன் 
பொல்லான் திரைந்தான் என்னும் 
புறனுரை கேட்பதன்முன், 
சொல்லார் மறைநான் கோதி 
யுலகில் நிலாயவர், 
நல்லார் நறையூர் நாம்தொழு 
தும்மெழு நெஞ்சமே (6.4.7) 

1485 
வாளொண்கண் ணல்லார் தாங்கள் 
மதனனென் றார்தம்மை, 
கேளுமின் களீலையோடு ஏங்கு 
கிழவன் என் னாதமுன், 
வேள்வும் விழவும் வீதியி 
லென்று மறாதவூர், 
நாளு நறையூர் நாம்தொழு 
தும்மெழு நெஞ்சமே (6.4.8) 

1486 
கனிசேர்ந் திலங்குநல் வாயவர் 
காதன்மை விட்டிட, 
குனிசேர்ந் துடலம் கோலில் 
த்ளர்ந்திளை யாதமுன், 
பனிசேர் விசும்பில் பான்மதி 
கோள்விடுத் தானிடம், 
நனிசேர் நறையூர் நாம்தொழு 
தும்மெழு நெஞ்சமே (6.4.9) 

1287 
பிறைசேர் நுதலார் பேனுதல் 
நம்மை யிலாதமுன், 
நறைசேர் பொழில்சூழ் நறையூர் 
தொழுனெஞ்ச மேயென்ற, 
கறையார் நெடுவேல் மங்கையர் 
கோன்கலி கன்றிசொல், 
மறவா துரைப்பவர் வானவர்க் 
கின்னர சாவாரே (6.4.10) 

1488 
கலங்க முந்நீர் கடைந்தமு 
தங்கொண்டு, இமையோர் 
துலங்கல் தீர நல்கு 
சோதிச் சுடராய, 
வலங்கை யாழி யிடங்கைச் 
சங்க முடையானூர், 
நலங்கொள் வாய்மை யந்தணர் 
வாழும் நறையூரே (6.5.1) 

1489 
முனையார் சீய மாகி 
அவுணன் முரண்மார்வம், 
புனைவா ளுகிரால் போழ்பட 
வீர்ந்த புனிதனூர் 
சினையார் தேமாம்f செந்தளிர் 
கோதிக் குயில்கூவும், 
நனையார் சோலை சூழ்ந்தழ 
காய நறையூரே (6.5.2) 

1490 
ஆனைப் புரவி தேரொடு 
காலா ளணிகொண்ட, 
சேனைத் தொகையைச் சாடி 
யிலங்கை செற்றானூர், 
மீனைத் தழுவி வீழ்ந்தெழும் 
மள்ளர்க் கலமந்து, 
நானப் புதலில் ஆமை 
யொளிக்கும் நறையூரே (6.5.3) 

1491 
உறியார் வெண்ணெ யுண்டு உர 
லோடும் கட்டுண்டு, 
வெறியார் கூந்தல் பின்னை 
பொருட்டுஆன் வென்றானூர், 
பொறியார் மஞ்ஞை பூம்பொழில் 
தோறும் நடமாட, 
நறுநாண் மலர்மேல் வண்டிசை 
பாடும் நறையூரே (6.5.4) 

1492 
விடையேழ் வென்று மென்தோ 
ளாய்ச்சிக் கன்பனாய், 
நடையால் நின்ற மருதம் 
சாய்த்த நாதனூர், 
பெடையோ டன்னம் பெய்வளை 
யார்தம் பின்சென்று 
நடையோ டியலி நாணி 
யொளிக்கும் நறையூரே (6.5.5) 

1493 
பகுவாய் வன்பேய் கொங்கை 
சுவைத்தா ருயிருண்டு, 
புகுவாய் நின்ற போதகம் 
வீழப் பொருதானூர், 
நெகுவாய் நெய்தல் பூமது 
மாந்திக் கமலத்தின் 
நகுவாய் மலர்மே லன்ன 
முறங்கும் நறையூரே (6.5.6) 

1494 
முந்து நூலும் முப்புரி 
நூலும் முன்னீந்த, 
அந்த ணாளன் பிள்ளையை 
அந்நான்றளித்தானூர், 
பொந்தில் வாழும் பிள்ளைக் 
காகிப் புள்ளோடி, 
நந்து வாரும் பைம்புனல் 
வாவி நறையூரே (6.5.7) 

1495 
வெள்ளைப் புரவைத் தேர்விச 
யற்காய் விறல்வியூகம் 
விள்ள, சிந்துக் கோன்விழ 
வூர்ந்த விமலனூர், 
கொள்ளைக் கொழுமீ னுண்குரு 
கோடிப் பெடையோடும், 
நள்ளக் கமலத் தேற 
லுகுக்கும் நறையூரே (6.5.8) 

1496 
பாரை யூரும் பாரந் 
தீரப் பார்த்தன்தன் 
தேரை யூரும் தேவ 
தேவன் சேருமூர், 
தாரை யூரும் தண்தளிர் 
வேலிபுடைசூழ, 
நாரை யூரும் நல்வயல் 
சூழ்ந்த நறையூரே (6.5.9) 

1497 
தாமத் துளப நீண்முடி 
மாயன் தான்நின்ற 
நாமத் திரள்மா மாளிகை 
சூழ்ந்த நறையூர்மேல், 
காமக் கதிர்வேல் வல்லான் 
கலிய னொலிமாலை, 
சேமத் துணையாம் செப்பு 
மவர்க்குத் திருமாலே (6.5.10) 

1498 
அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும் 
அலைகடலும் குலவரையும் உண்டகண்டன், 
கொம்பமரும் வடமரத்தி னிலைமேல் பள்ளி 
கூடினான் திருவடியே கூடிகிற்பீர், 
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு 
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல்வைகு, 
செம்பியன்கோச் செங்கணான் சேர்ந்த கோயில் 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.1) 

1499 
கொழுங்கயலாய் நெடுவெள்ளங் கொண்ட காலம் 
குலவரையின் மீதோடி யண்டத்தப்பால், 
எழுந்தினிது விளையாடு மீச னெந்தை 
இணையடிக்கீ ழினிதிருப்பீர் இனவண்டாலும் 
உழும்செறுவில் மணிகொணர்ந்து கரைமேல் சிந்தி 
உலகெல்லாம் சந்தனமு மகிலுங்கொள்ள, 
செழும்பொன்னி வளங்கொடுக்கும் சோழன் சேர்ந்த 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.2) 

1500 
பவ்வநீ ருடையாடை யாகச் சுற்றிப் 
பாரகலம் திருவடியாப் பவனம்மெய்யா 
செவ்விமா திரமெட்டும் தோளா அண்டம் 
திருமுடியா நின்றான்பால் செல்லகிற்பீர் 
கவ்வைமா களிறுந்தி வெண்ணி யேற்றக் 
கழல்மன்னர் மணிமுடிமேல் காகமேற 
தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.3) 

1501 
பைங்கணா ளரியுருவாய் வெருவ நோக்கிப் 
பருவரைத்தோ ளிரணியனைப் பற்றிவாங்கி 
அங்கைவா ளுகிர் நுதியா லவன தாகம் 
அங்குருதி பொங்குவித்தா னடிக்கீழ்நிற்பீர் 
வெங்கண்மா களிறுந்தி வெண்ணியேற்ற 
விறல்மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த 
செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.4) 

1502 
அன்றுலக மூன்றினையு மளந்து வேறோர் 
அரியுருவா யிரணியன தாகங்கீண்டு 
வென்றவனை விண்ணுலகில் செலவுய்த் தாற்கு 
விருந்தாவீர் மேலெழுந்து விலங்கல் பாய்ந்து 
பொன்சிதறி மணிகொணர்ந்து கரைமேல் சிந்திப் 
புல ம்பரந்து நிலம்பரக்கும் பொன்னிநாடன் 
தென்தமிழன் வடபுலக்கோன் சோழன் சேர்ந்த 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.5) 

1503 
தன்னாலே தன்னுருவம் பயந்த தானாய்த் 
தயங்கொளிசேர் மூவுலகும் தானாய்வானாய், 
தன்னாலே தானுருவில் மூர்த்தி மூன்றாய்த் 
தானாய னாயினான் சரணென்றுய்வீர் 
மின்னாடு வேலேந்து விளைந்த வேளை 
விண்ணேறத் தனிவேலுய்த் துலகமாண்ட 
தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.6) 

1504 
முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி 
முதுதுவரைக் குலபதியாக் காலிப்பின்னே 
இலைத்தடத்த குழலூதி யாயர் மாதர் 
இனவளைகொண் டானடிக்கீ ழெய்தகிற்பீர் 
மலைத்தடத்த மணிகொணர்ந்து வைய முய்ய 
வளங்கொடுக்கும் வருபுனலம் பொன்னிநாடன் 
சிலைத்தடக்கைக் குலச்சோழன் சேர்ந்த கோயில் 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.7) 

1505 
முருக்கிலங்கு கனித்துவர்வாய்ப் பின்னை கேள்வன் 
மன்னெல்லாம் முன்னவியச் சென்று,வென்றிச் 
செருக்களத்துத் திறலழியச் செற்ற வேந்தன் 
சிரந்துணிந்தான் திருவடி_ம் சென்னிவைப்பீர் 
இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற்கு 
எழில்மாட மெழுபதுசெய் துலகமாண்ட 
திருக்குலத்து வளச்சோழன் சேர்ந்த கோயில் 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.8) 

1506 
தாராளன் தண்ணரங்க வாளன் பூமேல் 
தனியாளன் முனியாள ரேத்தநின்ற 
பேராளன் ஆயிரம்பே ருடைய வாளன் 
பின்னைக்கு மணவாளன் பெருமைகேட்பீர், 
பாராள ரவரிவரென் றழுந்தை யேற்ற 
படைமன்ன ருடல்துணியப் பரிமா வுய்த்த 
தேராளன் கோச்சோழன் சேர்ந்த கோயில் 
திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (6.6.9) 

1507 
செம்மொழிவாய் நால்வேத வாணர் வாழும் 
திருநறையூர் மணிமாடச் செங்கண்மாலை 
பொய்ம் மொழியொன் றில்லாத மெய்ம்மை யாளன் 
புலமங்கைக் குலவேந்தன் புலமையார்ந்த 
அம்மொழிவாய்க் கலிகன்றி யின்பப் பாடல் 
பாடுவார் வியனுலகில் நமனார்பாடி 
வெம்மொழிகேட் டஞ்சாதே மெய்ம்மை சொல்லில் 
விண்ணவர்க்கு விருந்தாகும் பெருந்தக்கோரே (6.6.10) 

1508 
ஆளும் பணியு மடியேனைக் 
கொண்டான் விண்ட நிசாசரரை 
தோளும் தலையும் துணிவெய்தச் 
சுடுவெஞ் சிலைவாய்ச் சரந்துரந்தான் 
வேளும் சேயு மனையாரும் 
வேற்க ணாரும் பயில்வீதி 
நாளும் விழவி னொலியோவா 
நறையூர் நின்ற நம்பியே (6.7.1) 

1509 
முனியாய் வந்து மூவெழுகால் 
முடிசேர் மன்ன ருடல்துணிய 
தனிவாய் மழுவின் படையாண்ட 
தாரார் தோளான், வார்புறவில் 
பனிசேர் முல்லை பல்லரும்பப் 
பான லொருபால் கண்காட்ட 
நனிசேர் கமலம் முகங்காட்டும் 
நறையூர் நின்ற நம்பியே (6.7.2) 

1510 
தெள்ளார் கடல்வாய் விடவாய 
சினவா ளரவில் துயிலமர்ந்து 
துள்ளா வருமான் விழவாளி 
துரந்தா னிரந்தான் மாவலிமண் 
புள்ளார் புறவில் பூங்காவி 
புலங்கொள் மாதர் கண்காட்ட 
நள்ளார் கமலம் முகங்காட்டும் 
நறையூர் நின்ற நம்பியே (6.7.3) 

1511 
ஓளியா வெண்ணெ யுண்டானென் 
றுரலோ டாய்ச்சி யொண்கயிற்றால் 
விளியா ஆர்க்க ஆப்புண்டு 
விம்மி யழுதான் மென்மலர்மேல் 
களியா வண்டு கள்ளுண்ணக் 
காமர் தென்றல் அலர்தூற்ற 
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும் 
நறையூர் நின்ற நம்பியே (6.7.4) 

1512 
வில்லார் விழவில் வடமதுரை 
விரும்பி விரும்பா மல்லடர்த்து 
கல்லார் திரடோள் கஞ்சனைக் 
காய்ந்தான் பாய்ந்தான் காளியன்மேல் 
சொல்லார் சுருதி முறையோதிச் 
சோமுச் செய்யும் தொழிலினோர் 
நல்லார் மறையோர் பலர்வாழும் 
நறையூர் நின்ற நம்பியே (6.7.5) 

1513 
வள்ளி கொழுநன் முதலாய 
மக்க ளோடு முக்கண்ணான் 
வெள்கி யோட விறல்வாணன் 
வியன்தோள் வனத்தைத் துணித்துகந்தான் 
பள்ளி கமலத் திடைப்பட்ட 
பகுவா யலவன் முகம்நோக்கி 
நள்ளியூடும் வயல்சூழ்ந்த 
நறையூர் நின்ற நம்பியே (6.7.6) 

1514 
மிடையா வந்த வேல்மன்னர் 
வீய விசயன் தேர்கடவி, 
குடையா வரையொன் றெடுத்தாயர் 
கோவாய் நின்றான் கூராழிப் 
படையான் வேதம் நான்கைந்து 
வேள்வி யங்க மாறிசையேழ் 
நடையா வல்ல அந்தணர்வாழ் 
நறையூர் நின்ற நம்பியே (6.7.7) 

1515 
பந்தார் விரலாள் பாஞ்சாலி 
கூந்தல் முடிக்கப் பாரதத்து 
கந்தார் களிற்றுக் கழல்மன்னர் 
கலங்கச் சங்கம் வாய்வைத்தான் 
செந்தா மரைமே லயனோடு 
சிவனு மனைய பெருமையோர் 
நந்தா வண்கை மறையோர் வாழ் 
நறையூர் நின்ற நம்பியே (6.7.8) 

1516 
ஆறும் பிறையும் அரவமும் 
அடம்பும் சடைமே லணிந்து,உடலம் 
நீறும் பூசி யேறூரும் 
இறையோன் சென்று குறையிரப்ப 
மாறொன் றில்லா வாசநீர் 
வரைமார் வகலத் தளித்துகந்தான் 
நாறும் பொழில்சூழ்ந் தழகாய 
நறையூர் நின்ற நம்பியே (6.7.9) 

1517 
நன்மை யுடைய மறையோர்வாழ் 
நறையூர் நின்ற நம்பியை 
கன்னி மதில்சூழ் வயல்மங்கைக் 
கலிய னொலிசெய் தமிழ்மாலை 
பன்னி யுலகில் பாடுவார் 
பாடு சார பழவினைகள் 
மன்னி யுலகம் ஆண்டுபோய் 
வானோர் வணங்க வாழ்வாரே (6.7.10) 

1518 
மான்கொண்ட தோல்மார்வில் மாணியாய், மாவலிமண் 
தான்கொண்டு தாளால் அளந்த பெருமானை 
தேன்கொண்ட சாரல் திருவேங் கடத்தானை 
நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே (6.8.1) 

1519 
முந்நீரை முன்னாள் கடைந்தானை மூழ்த்தநாள் 
அந்நீரை மீனா யமைத்த பெருமானை 
தென்னாலி மேய திருமாலை யெம்மானை 
நன்னீர் வயல்சூழ் நறையூரில் கண்டே னே (6.8.2) 

1520 
தூவாய புள்ளூர்ந்து, வந்து துறைவேழம் 
மூவாமை நல்கி முதலை துணித்தானை 
தேவாதி தேவனைச் செங்கமலக் கண்ணானை 
நாவாயு ளானை நறையூரில் கண்டேனே (6.8.3) 

1521 
ஓடாவரியாய் இரணியனை யூனிடந்த 
சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை 
வாடா மலர்த்துழாய் மாலை முடியானை 
நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே (6.8.4) 

1522 
கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன் 
வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த 
வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக 
நல்லனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.5) 

1523 
உம்பருலகோடு உயிரெல்லாம் உந்தியில் 
வம்பு மலர்மேல் படைத்தானை மாயோனை 
அம்பன்ன கண்ணாள் அசோதைதன் சிங்கத்தை 
நம்பனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.6) 

1524 
கட்டேறு நீள்சோலைக் காண்டவத்தைத் தீமூட்டி 
விட்டானை மெய்யம் அமர்ந்த பெருமானை 
மட்டேறு கற்பகத்தை மாதர்க்காய் வண்துவரை 
நட்டானை நாடி நறையூரில் கண்டேனே (6.8.7) 

1525 
மண்ணின்மீ பாரங் கெடுப்பான் மறமன்னர் 
பண்ணின்மேல் வந்த படையெல்லாம் பாரதத்து 
விண்ணின்மீ தேற விசயன்தே ரூர்ந்தானை 
நண்ணிநான் நாடி நறையூரில் கண்டேனே (6.8.8) 

1526 
பொங்கேறு நீள்சோதிப் பொன்னாழி தன்னோடும் 
சங்கேறு கோலத் தடக்கைப் பெருமானை 
கொங்கேறு சோலைக் குடந்தைக் கிடந்தானை 
நங்கோனை நாடி நறையூரில் கண்டேனே (6.8.9) 

1527 
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை 
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார் 
கன்னவிலும் தோளான் கலிய னொலிவல்லார் 
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளி ராகுவரே (6.8.10) 

1528 
பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம் 
மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர் 
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன் 
இடர்கெடுத்த திருவாள னிணையடியே யடைநெஞ்சே. (6.9.1) 

1529 
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி 
வழியார முத்தீன்று வளங்கொடுக்கும் திருநறையூர் 
பழியாரும் விறலரக்கன் பருமுடிக ளவைசிதற 
அழலாறும் சரந்துரந்தான் அடியிணையே யடைநெஞ்சே. (6.9.2) 

1530 
சுளைகொண்ட பலங்கனிகள் தேன்பாய கதலிகளின் 
திளைகொண்ட பழம்கெழுமு திகழ்சோலைத் திருநறையூர் 
வளைகொண்ட வண்ணத்தன் பின்தோன்றல் மூவுலகோடு 
அளைவெண்ணெ யுண்டான்தன் அடியிணையே யடைநெஞ்சே. (6.9.3) 

1531 
துன்றோளித் துகில்படலம் துன்னியெங்கும் மாளிகைமேல் 
நின்றார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர் 
மன்றாரக் குடமாடி வரையெடுத்து மழைதடுத்த 
குன்றாரும் திரடோளன் குரைகழலே யடைநெஞ்சே. (6.9.4) 

1532 
அகிற்குறடுஞ்சந்தனமும் அம்பொன்னும் மணிமுத்தும் 
மிகக்கொணர்ந்து திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர் 
பகற்fகரந்த சுடராழிப் படையான் இவ்வுலகேழும் 
புகக்கரந்த திருவயிற்றன் பொன்னடியே யடைநெஞ்சே. (6.9.5) 

1533 
பொன்முத்தும் அரியுகிரும் புழைக்கைம்மா கரிக்கோடும் 
மின்னத்தண் திரையுந்தும் வியன்பொன்னித் திருநறையூர் 
மின்னொத்த நுண்மருங்குல் மெல்லியலை திருமார்வில் 
மன்னத்தான் வைத்துகந்தான் மலரடியே யடைநெஞ்சே. (6.9.6) 

1534 
சீர்தழைத்த கதிர்ச்செந்நெல் செங்கமலத் திடையிடையின் 
பார்தழைத்துக் கரும்போங்கிப் பயன்விளைக்கும் திருநறையூர் 
கார்தழைத்த திருவுருவன் கண்ணபிரான் விண்ணவர்கோன் 
தார்தழைத்த துழாய்முடியன் தளிரடியே யடைநெஞ்சே. (6.9.7) 

1535 
குலையார்ந்த பழுக்காயும் பசுங்காயும் பாளைமுத்தும் 
தலையார்ந்த விளங்கமுகின் தடஞ்சோலைத் திருநறையூர் 
மலையார்ந்த கோலஞ்சேர் மணிமாடம் மிகமன்னி 
நிலையார நின்றான்றன் நீள்கழலே யடைநெஞ்சே. (6.9.8) 

1536 
மறையாரும் பெருவேள்விக் கொழும்புகைபோய் வளர்ந்து, எங்கும் 
நிறையார வான்மூடும் நீள்செல்வத் திருநறையூர் 
பிறையாரும் சடையானும் பிரமனுமுன் தொழுதேத்த 
இறையாகி நின்றான்றன் இணையடியே யடைநெஞ்சே. (6.9.9) 

1537 
திண்கனக மதிள்புடைசூழ் திருநறையூர் நின்றானை 
வண்களக நிலவெறிக்கும் வயல்மங்கை நகராளன் 
பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும்வல்லார் 
விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே (6.9.10) 

1538 
கிடந்த நம்பி குடந்தை மேவிக் 
கேழ லாயுலகை 
இடந்த நம்பி, எங்கள் நம்பி 
எறிஞர் அரணழிய 
கடந்த நம்பி கடியா ரிலங்கை 
உலகை யீரடியால் 
நடந்த நம்பி நாமம் சொல்லில் 
நமோநா ராயணமே (6.10.1) 

1539 
விடந்தா னுடைய அரவம் வெருவச் 
செருவில் முனநாள்,முன் 
தடந்தா மரைநீர்ப் பொய்கை புக்கு 
மிக்க தாடாளன் 
இடந்தான் வையம் கேழ லாகி 
உலகை யீரடியால் 
நடந்தா னுடைய நாமம் சொல்லில் 
நமோநா ராயணமே (6.10.2) 

1540 
பூணா தனலும் தறுகண் வேழம் 
மறுக வளைமருப்பைப் 
பேணான் வாங்கி யமுதம் கொண்ட 
பெருமான் திருமார்வன் 
பாணா வண்டு முரலும் கூந்தல் 
ஆய்ச்சி தயிர்வெண்ணெய் 
நாணா துண்டான் நாமம் சொல்லில் 
நமோநா ராயணமே (6.10.3) 

1541 
கல்லார் மதிள்சூழ் கச்சி நகருள் 
நச்சிப் பாடகத்துள், 
எல்லா வுலகும் வணங்க விருந்த 
அம்மான், இலங்கைக்கோன் 
வல்லா ளாகம் வில்லால் முனிந்த 
எந்தை, விபீடணற்கு 
நல்லா னுடைய நாமம் சொல்லில் 
நமோநா ராயணமே (6.10.4) 

1542 
குடையா வரையால் நிரைமுன் காத்த 
பெருமான் மருவாத 
விடைதா னேழும் வென்றான் கோவல் 
நின்றான் தென்னிலங்கை 
அடையா அரக்கர் வீயப் பொருது 
ே மவி வெங்கூற்றம் 
நடையா வுண்ணக் கண்டான் நாமம் 
நமோநா ராயணமே (6.10.5) 

1543 
கான எண்கும் குரங்கும் முசுவும் 
படையா அடலரக்கர் 
மான மழித்து நின்ற வென்றி 
அம்மான் எனக்கென்றும் 
தேனும் பாலும் அமுது மாய 
திருமால் திருநாமம் 
நானும் சொன்னேன் நமரு முரைமின் 
நமோநா ராயணமே (6.10.6) 

1544 
நின்ற வரையும் கிடந்த கடலும் 
திசையு மிருநிலனும் 
ஒன்று மொழியா வண்ண மெண்ணி 
நின்ற அம்மானார் 
குன்று குடையா வெடுத்த அடிக 
ளுடைய திருநாமம் 
நன்று காண்மின் தொண்டீர் சொன்னேன் 
நமோநா ராயணமே (6.10.7) 

1545 
கடுங்கால் மாரி கல்லே பொழிய 
அல்லே யெமக்கென்று 
படுங்கால் நீயே சரணென் றாயர் 
அஞ்ச அஞ்சாமுன் 
நெடுங்கால் குன்றம் குடையொன் றேந்தி 
நிரையைச் சிரமத்தால் 
நடுங்கா வண்ணம் காத்தான் நாமம் 
நமோநா ராயணமே (6.10.8) 

1546 
பொங்கு புணரிக் கடல்சூ ழாடை 
நிலமா மகள்மலர்மா 
மங்கை பிரமன் சிவனிந் திரன்வா 
னவர்நா யகராய் 
எங்க ளடிக ளிமையோர் தலைவ 
ருடைய திருநாமம் 
நங்கள் வினைகள் தவிர வுரைமின் 
நமோநா ராயணமே (6.10.9) 

1547 
வாவித் தடஞ்சூழ் மணிமுத் தாற்று 
நறையூர் நெடுமாலை 
நாவில் பரவி நெஞ்சில் கொண்டு 
நம்பி நாமத்தை 
காவித் தடங்கண் மடவார் கேள்வன் 
கலிய னொலிமாலை 
மேவிச் சொல்ல வல்லார் பாவம் 
நில்லா வீயுமே (6.10.10) 
பெரிய தொருமொழி ஏழாம் பத்து 

1548 
கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல், 
மறவா தடியே னுன்னையே யழைக்கின்றேன், 
நறவார் பொழில்சூழ் நறையூர் நின்ற நம்பி, 
பிறவாமை யெனைப்பணி யெந்தை பிரானே. (2) 7.1.1 

1549 
வற்றா முதுநீரொடு மால்வரை யேழும், 
துற்றா முன்துற்றிய தொல்புக ழோனே, 
அற்றே னடியே னுன்னையே யழைக்கின்றேன், 
பெற்றே னருள்தந்திடு என் எந்தை பிரானே. 7.1.2 

1550 
தாரேன் பிறர்க்குன் னருளென் னிடைவைத்தாய், 
ஆரே னதுவே பருகிக் களிக்கின்றேன், 
காரேய் கடலே மலையே திருக்கோட்டி 
யூரே, உகந்தா யையுகந் தடியேனே 7.1.3 

1551 
புள்வாய் பிளந்த புனிதா என் றழைக்க, 
உள்ளேநின் றென்னுள்ளங் குளிரு மொருவா, 
கள்வா கடன்மல்லைக் கிடந்த கரும்பே, 
வள்ளால் உன்னை யெங்ஙனம்நான் மறக்கேனே 7.1.4 

1552 
வில்லேர் நுதல்வேல் நெடுங்கண் ணியும்நீயும், 
கல்லார் கடுங்கானம் திரிந்த களிறே, 
நல்லாய் நரநா ரணனே எங்கள்நம்பி, 
சொல்லா யுன்னையான் வணங்கித் தொழுமாறே 7.1.5 

1553 
பணியேய் பரங்குன்றின் பவளத் திரளே, 
முனியே திருமூழிக் களத்து விளக்கே, 
இனியாய் தொண்டரோம் பருகின் னமுதாய 
கனியே உன்னைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.6 

1554 
கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு, 
நிதியே. திருநீர் மலைநித் திலத்தொத்தே, 
பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக் 
கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே 7.1.7 

1555 
அத்தா அரியே என்றுன் னையழைக்க, 
பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை, 
முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற 
வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே. 7.1.8 

1556 
தூயாய். சுடர்மா மதிபோ லுயிர்க்கெல்லாம், 
தாயாய் அளிக்கின்ற தண்டா மரைக்கண்ணா, 
ஆயா அலைநீ ருலகேழும் முன்னுண்ட 
வாயா உனையெங் ஙனம்நான் மறக்கேனே 7.1.9 

1557 
வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,என்றும் 
தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை, 
தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட, 
உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே (2) 7.1.10 

1558 
புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட 
கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால், 
உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால், 
நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. (2) 7.2.1 

1559 
ஓடாவாளரியி ன் உருவாய் மருவி என்றன் 
மாடே வந்தடியேன் மனங்கொள்ள வல்லமைந்தா, 
பாடேன் தொண்டர்தம்மைக் கவிதைப் பனுவல் கொண்டு, 
நாடே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ. 7.2.2 

1560 
எம்மானு மெம்மனையும் எனைப்பெற் றொழிந்ததற்பின், 
அம்மானு மம்மனையும் அடியேனுக் காகிநின்ற, 
நன்மான வொண்சுடரே நறையூர்நின்ற நம்பீ உன் 
மைம்மான வண்ணமல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே 7.2.3 

1561 
சிறியாயோர் பிள்ளையுமா யுலகுண்டோ ராலிலைமேல் 
உறைவாய், என்நெஞ்சினுள் உறைவாய் உறைந்ததுதான் 
அறியா திருந்தறியே னடியேன் அணி வண்டுகிண்டும் 
நறைவா ரும்பொழில்சூழ் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.4 

1562 
நீண்டாயை வானவர்கள் நினைந்தேத்திக் காண்பரிதால், 
ஆண்டாயென் றாதரிக்கப் படுவாய்க்கு நானடிமை, 
பூண்டேன் என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன், 
நாணதா னுனக்கொழிந்தேன் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.5 

1563 
எந்தாதை தாதையப்பால் எழுவர் பழவடிமை 
வந்தார் என் நெஞ்சினுள்ளே வந்தாயைப் போகலொட்டேன், 
அந்தோ.என் னாருயிரே. அரசே அருளெனக்கு 
நந்தாமல் தந்தவெந்தாய் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.6 

1564 
மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா, 
என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர், 
வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன், 
நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.7 

1565 
எப்போதும் பொன்மலரிட் டிமையோர்தொ ழுது தங்கள், 
கைப்போது கொண்டிறைஞ்சிக் கழல்மேல் வணங்க நி ன்றாய், 
இப்போதென் னெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் 
நற்போது வண்டுகிண்டும் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.8 

1566 
ஊனே ராக்கைதன்னை உழந்தோம்பி வைத்தமையால், 
யானா யென்றனக்கா யடியேன் மனம்புகுந்த 
தேனே தீங்கரும்பின் தெளிவே என் சிந்தைதன்னால், 
நானே யெய்தப்பெற்றேன் நறையூர்நின்ற நம்பீயோ 7.2.9 

1567 
நன்னீர் வயல்புடைசூழ் நறையூர்நின்ற நம்பியை 
கன்னீர மால்வரைத்தோள் கலிகன்றி மங்கையர்கோன், 
சொன்னீர சொல்மாலை சொல்வார்கள், சூழ்விசும்பில் 
நன்னீர்மை யால்மகிழ்ந்து நெடுந்காலம் வாழ்வாரே (2) 7.2.10 

1568 
சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச் 
செற்ற வில்லியென்று கற்றவர் தந்தம் 
மனவுட் கொண்டு,என்று மெப்போதும் நின்றேத்தும் 
மாமுனி யைமர மேழெய்த மைந்தனை, 
நனவில் சென்றார்க்கும் நண்ணற் கரியானை 
நானடி யேன்நறை யூர்நின்ற நம்பியை, 
கனவில் கண்டே னின்றுகண் டமையாலென் 
கண்ணி ணைகள் களிப்பக் களித்தேனே. (2) 7.3.1 

1569 
தாய்நி னைந்தகன் றேயொக்க வென்னையும் 
தன்னை யேநினைக் கச்செய்து,தானெனக் 
காய்நி னைந்தருள் செய்யு மப்பனை 
அன்றிவ் வையக முண்டுமிழ்ந் திட்ட 
வாய னை,மக ரக்குழைக் காதனை 
மைந்த னைமதிள் கோவ லிடைகழி 
யாயனை,அம ரர்க்கரி யேற்றையென் 
அன்ப னையன்றி யாதரி யேனே 7.3.2 

1570 
வந்த நாள்வந்தென் நெஞ்சிடங் கொண்டான் 
மற்றோர் நெஞ்சறி யான்,அடி யேனுடைச் 
சிந்தை யாய்வந்து தென்புலர்க் கென்னைச் 
சேர்கொ டானிது சிக்கெனப் பெற்றேன், 
கொந்து லாம்பொழில் சூழ்குடந் தைத்தலைக் 
கோவி னைக்குட மாடிய கூத்தனை, 
எந்தை யையெந்தை தந்தைதம் மானை 
எம்பி ரானையெத் தால்மறக் கேனே? 7.3.3 

1571 
உரங்க ளாலியன் றமன்னர் மாளப் 
பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று, 
இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும் 
எம்பி ரானைவம் பார்புனல் காவிரி, 
அரங்க மாளியென் னாளிவிண் ணாளி 
ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று, 
சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் 
கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே 7.3.4 

1572 
ஆங்கு வெந்நர கத்தழுந் தும்போ 
தஞ்சே லென்றடி யேனையங் கேவந்து 
தாங்கு,தாமரை யன்னபொன் னாரடி 
எம்பி ரானை உம் பர்க்கணி யாய்நின்ற, 
வேங்கடத்தரி யைப்பரி கீறியை 
வெண்ணெ யுண்டுர லினிடை யாப்புண்ட 
தீங்க ரும்பினை, தேனைநன் பாலினை 
அன்றி யென்மனம் சிந்தைசெய் யாதே 7.3.5 

1573 
எட்ட னைப்பொழு தாகிலு மென்றும் 
என்ம னத்தக லாதிருக் கும்புகழ், 
தட்ட லர்த்தபொன் னை அலர் கோங்கின் 
தாழ்பொ ழில்திரு மாலிருஞ் சோலையங் 
கட்டி யை,கரும் பீன்றவின் சாற்றைக் 
காத லால்மறை நான்குமுன் னோதிய 
பட்ட னை,பர வைத்துயி லேற்றையென் 
பண்ப னையன்றிப் பாடல்செய் யேனே 7.3.6 

1574 
பண்ணி னின்மொழி யாம்நரம் பில்பெற்ற 
பாலை யாகி யிங்கே புகுந்து,என் 
கண்ணும் நெஞ்சும் வாயுமி டங்கொண்டான் 
கொண்ட பின்மறை யோர்மனம் தன்னுள், 
விண்ணு ளார்பெரு மானையெம் மானை 
வீங்கு நீர்மக ரம்திளைக் கும்கடல் 
வண்ணன் மாமணி வண்ணனெம் மண்ணல் 
வண்ண மேயன்றி வாயுரை யாதே 7.3.7 

1575 
இனியெப் பாவம்வந் தெய்தும்சொல் லீர் எமக் 
கிம்மை யேயருள் பெற்றமை யால்,அடும் 
துனியைத் தீர்த்தின்ப மேதரு கின்றதோர் 
தோற்றத் தொன்னெறி யை,வையம் தொழப்படும் 
முனியை வானவ ரால்வணங் கப்படும் 
முத்தி னைப்பத்தர் தாம்நுகர் கின்றதோர் 
கனியை, காதல்செய் தென்னுள்ளங் கொண்ட 
கள்வ னையின்று கண்டுகொண் டேனே 7.3.8 

1576 
என்செய் கேனடி னேனுரை யீர் இதற் 
கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ், 
தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன் 
நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை 
மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச் 
சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும், 
பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை 
அன்றி யென்மனம் போற்றியென் னாதே 7.3.9 

1577 
தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் 
தோன்றல் வாள்கலி யன்திரு வாலி 
நாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன் 
நல்ல மாமலர் சேவடி, சென்னியில் 
சூடி யும்தொழு துமெழுந் தாடியும் 
தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை, 
பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர். 
பாட நும்மிடைப் பாவம்நில் லாவே. (2) 7.3.10 

1578 
கண்சோர வெங்குருதி வந்திழிய 
வெந்தழல்போல் கூந்த லாளை, 
மண்சேர முலையுண்ட மாமதலாய். 
வானவர்தம் கோவே. என்று, 
விண்சேரும் இளந்திங்கள் அகடுரிஞ்சு 
மணிமாட மல்கு, செல்வத் 
தண்சேறை யெம்பெருமான் தாள்தொழுவார் 
காண்மினென் தலைமே லாரே. (2) 7.4.1 

1579 
அம்புருவ வரிநெடுங்கண், அலர்மகளை 
வரையகலத் தமர்ந்து, மல்லல் 
கொம்புருவ விளங்கினமே லிளங்கன்று 
கொண்டெறிந்த கூத்தர் போலாம், 
வம்பலரும் தண்சோலை வண்சேறை 
வானுந்து கோயில் மேய, 
எம்பெருமான் தாள்தொழுவா ரெப்பொழுதும் 
என்மனத்தே யிருக்கின் றாரே 7.4.2 

1580 
மீதோடி வாளெயிறு மின்னிலக 
முன்விலகு முருவி னாளை 
காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த 
கைத்தலத்தா. என்று நின்று, 
தாதோடு வண்டலம்பும் தண்சேறை 
எம்பெருமான் தாளை யேத்தி, 
போதோடு புனல்தூவும் புண்ணியரே 
விண்ணவரில் பொலிகின் றாரே 7.4.3 

1581 
தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை 
வெஞ்சமத்துப் பொன்றி வீழ, 
போராளும் சிலையதனால் பொருகணைகள் 
போக்குவித்தாய் என்று, நாளும் 
தாராளும் வரைமார்பன் தண்சேறை 
எம்பெருமா னும்ப ராளும், < br> பேராளன் பேரோதும் பெரியோரை 
ஒருகாலும் பிரிகி லேனே 7.4.4 

1582 
வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின் 
வல்லமணர் தமக்கு மல்லேன், 
முந்திசென் றரியுருவா யிரணியனை 
முரணழித்த முதல்வர்க் கல்லால், 
சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை 
எம்பெருமான் தாளை, நாளும் 
சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி 
எப்பொழுதும் தித்திக் கும்மே 7.4.5 

1583 
பண்டேன மாயுலகை யன்றிடந்த 
பண்பாளா. என்று நின்று, 
தொண்டானேன் திருவடியே துணையல்லால் 
துணையில்லேன் சொல்லு கின்றேன், 
வண்டேந்தும் மலர்ப்புறவில் வண்சேறை 
எம்பெருமா னடியார் தம்மை, 
கண்டேனுக் கிதுகாணீ ரென்நெஞ்சம் 
கண்ணிணையும் களிக்கு மாறே 7.4.6 

1584 
பைவிரியும் வரியரவில் படுகடலுள் 
துயிலமர்ந்த பண்பா. என்றும், 
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே. 
என்றென்றும், வண்டார் நீலம் 
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான் 
திருவடியை சிந்தித் தேற்கு,என் 
ஐயறிவும் கொண்டானுக் காளானார்க் 
காளாமென் அன்பு தானே 7.4.7 

1585 
உண்ணாது வெங்கூற்றம் ஓவாது 
பாவங்கள் சேரா, மேலை 
விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும் 
மென்தளிர்போ லடியி னானை, 
பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ் 
தண்சேறை யம்மான் றன்னை, 
கண்ணாரக் கண்டுருகிக் கையாரத் 
தொழுவாரைக் கருதுங் காலே 7.4.8 

1586 
கள்ளத்தேன் பொய்யகத்தே னாதலால் 
போதொருகால் கவலை யென்னும், 
வெள்ளத்தேற் கென்கொலோ விளைவயலுள் 
கருநீலம் களைஞர் தாளால் 
தள்ளத்தேன் மணநாறும் தண்சேறை 
எம்பெருமான் தாளை, நாளும் 
உள்ளத்தே வைப்பாருக் கிதுகாணீர் 
என்னுள்ள முருகு மாறே 7.4.9 

1587 
பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து 
வயல்நின்ற பெடையோடு, அன்னம் 
தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும் 
தண்சேறை யம்மான் றன்னை, 
வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி 
ஒலிமாலை கொண்டு தொண்டீர், 
தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும் 
துணைக்கையால் தொழுது நின்றே. (2) 7.4.10 

1588 
தந்தை காலில் பெருவி 
லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் 
வந்த எந்தை பெருமானார் 
மருவி நின்ற வூர்போலும், 
முந்தி வானம் மழைபொழியும் 
மூவா வுருவில் மறையாளர் 
அந்தி மூன்று மனலோம்பும் 
அணியார் வீதி அழுந்தூரே. (2) 7.5.1 

1589 
பாரித் தெழுந்த படைமன்னர் 
தம்மை யாள, பாரதத்துத் 
தேரில் பாக னாயூர்ந்த 
தேவ தேவ னூர்போலும், 
நீரில் பணைத்த நெடுவாளைக் 
கஞ்சிப் போன குருகினங்கள், 
ஆரல் கவுளோ டருகணையும் 
அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.2 

1590 
செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக் 
கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும், 
உம்பர் வாளிக் கிலக்காக 
உதிர்த்த வுரவோ னூர்போலும், 
கொம்பி லார்ந்த மாதவிமேல் 
கோதி மேய்ந்த வண்டினங்கள், 
அம்ப ராவும் கண்மடவார் 
ஐம்பா லணையும் அழுந்தூரே 7.5.3 

1591 
வெள்ளத் துள்ளோ ராலிலைமேல் 
மேவி யடியேன் மனம்புகுந்து,என் 
உள்ளத் துள்ளும் கண்ணுள்ளும் 
நின்றார் நின்ற வூர்போலும், 
புள்ளுப் பிள்ளைக் கிரைதேடிப் 
போன காதல் பெடையோடும், 
அள்ளல் செறுவில் கயல்நாடும் 
அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.4 

1592 
பகலு மிரவும் தானேயாய்ப் 
பாரும் விண்ணும் தானேயாய், 
நிகரில் சுடரா யிருளாகி 
நின்றார் நின்ற வூர்போலும், 
துகிலின் கொடியும் தேர்த்துகளும் 
துன்னி மாதர் கூந்தல்வாய், 
அகிலின் புகையால் முகிலேய்க்கும் 
அணியார் வீதி அழுந்தூரே 7.5.5 

1593 
ஏடி லங்கு தாமரைபோல் 
செவ்வாய் முறுவல் செய்தருளி, 
மாடு வந்தென் மனம்புகுந்து 
நின்றார் நின்றா வூர்போலும், 
நீடு மாடத் தனிச்சூலம் 
போழக் கொண்டல் துளிதூவ, 
ஆட லரவத் தார்ப்போவா 
அணியார் வீதி அழுந்தூரே 7.5.6 

1594 
மாலைப் புகுந்து மலரணைமேல் 
வைகி யடியேன் மனம்புகுந்து,என் 
நீலக் கண்கள் பனிமல்க 
நின்றார் நின்ற வூர்போலும் 
வேலைக் கடல்போல் நெடுவீதி 
விண்தோய் சுதைவெண் மணிமாடத்து, 
ஆலைப் புகையால் அழல்கதிரை 
மறைக்கும் வீதி அழுந்தூரே 7.5.7 

1595 
வஞ்சி மருங்கு லிடைநோவ 
மணந்து நின்ற கனவகத்து,என் 
நெஞ்சு நிறையக் கைகூப்பி 
நின்றார் நின்ற வூர்போலும், 
பஞ்சி யன்ன மெல்லடிநற் 
பாவை மார்கள், ஆடகத்தின் 
அஞ்சி லம்பி னார்ப்போவா 
அணியார் வீதி அழுந்தூரே 7.5.8 

1596 
என்னைம் புலனு மெழிலுங்கொண் 
டிங்கே நெருந லெழுந்தருளி 
பொன்னங் கலைகள் மெலிவெய்தப் 
போன புனித ரூர்போலும், 
மன்னு முதுநீ ரரவிந்த 
மலர்மேல் வரிவண் டிசைபாட 
அன்னம் பெடையோ டுடனாடும் 
அணியார் வயல்சூழ் அழுந்தூரே 7.5.9 

1597 
நெல்லில் குவளை கண்காட்ட 
நீரில் குமுதம் வாய்காட்ட, 
அல்லிக் கமலம் முகங்காட்டும் 
கழனி யழுந்தூர் நின்றானை, 
வல்லிப் பொதும்பில் குயில்கூவும் 
மங்கை வேந்தன் பரகாலன், 
சொல்லில் பொலிந்த தமிழ்மாலை 
சொல்லப் பாவம் நில்லாவே. (2) 7.5.10 

1598 
சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த, 
சங்கமி டத்தானைத் தழலாழி வலத்தானை, 
செங்கமலத் தயனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற, 
அங்கம லக்கண்ணனை அடியேன்கண்டு கொண்டேனே. (2) 7.6.1 

1599 
கோவா னார்மடியக் கொலையார்மழுக் கொண்டருளும், 
மூவா வானவனை முழுநீர்வண் ணனை,அடியார்க்கு, 
ஆவா என்றிரங்கித் தென்னழுந்தையில் மன்னிநின்ற, 
தேவாதி தேவனையான் கண்டுகொண்டு திளைத்தேனே 7.6.2 
1600 
உடையா னையொலிநீ ருலகங்கள் படைத்தானை, 
விடையா னோடவன்று விறலாழி விசைத்தானை, 
அடையார் தென்னிலங்கை யழித்தானை அணியழுந்தூர் 
உடையானை, அடியே னடைந்துய்ந்து போனேனே 7.6.3 

1601 
குன்றால் மாரிதடுத் தவனைக்குல வேழமன்று 
பொன்றா மை,அதனுக் கருள்செய்த போரேற்றை, 
அன்றா வின்நறுநெய் யமர்ந்துண்ண அணியழுந்தூர் 
நின்றா னை,அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே 7.6.4 

1602 
கஞ்சனைக் காய்ந்தானைக் கண்ணமங்கையுள் நின்றானை, 
வஞ்சனப் பேய்முலையூ டுயிர்வாய்மடுத் துண்டானை, 
செஞ்சொல் நான்மறையோர் தென்னழுந்தையில் மன்னிநின்ற 
அஞ்சனக் குன்றந்தன்னை யடியேன்கண்டு கொண்டேனே 7.6.5 

1603 
பெரியானை யமரர் தலைவற்கும் பிரமனுக்கும், 
உரியானை யுகந்தா னவனுக்கு முணர்வதனுக் 
கரியானை, அழுந்தூர் மறையோர்க ளடிபணியும் 
கரியானை, அடியேன் கண்டுகொண்டு களித்தேனே 7.6.6 

1604 
திருவாழ் மார்வன்றன்னைத் திசைமண்ணீ ரெரிமுதலா, 
உருவாய் நின்றவனை யொலிசேரும் மாருதத்தை, 
அருவாய் நின்றவனைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற 
கருவார் கற்பகத்தைக் கண்டுகொண்டு களித்தேனே 7.6.7 

1605 
நிலையா ளாகவென்னை யுகந்தானை, நிலமகள்தன் 
முலையாள் வித்தகனை முதுநான்மறை வீதிதொறும், 
அலையா ரும்கடல்போல் முழங்கழுந்தையில் மன்னிநின்ற 
கலையார் சொற்பொருளைக் கண்டுகொண்டு களித்தேனே 7.6.8 

1606 
பேரா னைக்குடந்தைப் பெருமானை, இலங்கொளிசேர் 
வாரார் வனமுலையாள் மலர்மங்கை நாயகனை, 
ஆரா வின்னமுதைத் தென்னழுந்தையில் மன்னிநின்ற, 
காரார் கருமுகிலைக் கண்டுகொண்டு களித்தேனே. (2) 7.6.9 

1607 
திறல்முரு கனனையார் தென்னழுந்தையில் மன்னிநின்ற 
அறமுதல் வனவனை அணியாலியர் கோன்,மருவார் 
கறைநெடு வேல்வலவன் கலிகன்றிசொல் ஐயிரண்டும், 
முறைவழு வாமைவல்லார் முழுதாள்வர் வானுலகே. (2) 7.6.10 

1608 
திருவுக் கும்திரு வாகிய செல்வா. 
தெய்வத் துக்கர சே.செய்ய கண்ணா, 
உருவச் செஞ்சுட ராழிவல் லானே. 
உலகுண் டவொரு வா.திரு மார்பா, 
ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் 
உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா 
தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. (2) 7.7.1 

1609 
பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி 
பாவை பூமகள் தன்னொடு முடனே 
வந்தாய், என்மனத் தேமன்னி நின்றாய் 
மால்வண் ணா.மழை போலொளி வண்ணா, 
சந்தோ கா.பௌழி யா.தைத் திரியா. 
சாம வேதிய னே.நெடு மாலே, 
அந்தோ. நின்னடி யன்றிமற் றறியேன் 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.2 

1610 
நெய்யா ராழியும் சங்கமு மேந்தும் 
நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச் 
செய்யா தவுல கத்திடைச் செய்தாய் 
சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து, 
பொய்யா லைவரென் மெய்குடி யேறிப் 
போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன் 
ஐயா. நின்னடி யன்றிமற் றறியேன் 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.3 

1611 
பரனே. பஞ்சவன் பௌழியன் சோழன் 
பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும் 
வரனே, மாதவ னே.மது சூதா. 
மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண் 
நரனே. நாரண னே.திரு நறையூர் 
நம்பீ. எம்பெரு மான்.உம்ப ராளும் 
அரனே, ஆதிவ ராகமுன் னானாய். 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.4 

1612 
விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப் 
பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து, 
பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும் 
பண்பா ளா.பர னே.பவித் திரனே, 
கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை 
கரும மாவது மென்றனக் கறிந்தேன், 
அண்டா. நின்னடி யன்றிமற் றறியேன் 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.5 

1613 
தோயா வின்தயிர் நெய்யமு துண்ணச் 
சொன்னார் சொல்லி நகும்பரி சே,பெற்ற 
தாயா லாப்புண்டி ருந்தழு தேங்கும் 
தாடா ளா.தரை யோர்க்கும்விண் ணோர்க்கும் 
சேயாய், கிரேத திரேத துவாபர 
கலியு கமிவை நான்குமு னானாய், 
ஆயா. நின்னடி யன்றிமற் றறியேன் 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.6 

1614 
கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய். 
கார்வண் ணா.கடல் போல் ஒளி வண்ணா 
இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய் 
எந்தாய். அந்தர மேழுமு னானாய், 
பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப் 
போக மேநுகர் வான்புகுந்து, ஐவர் 
அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.7 

1615 
நெடியா னே.கடி ஆர்கலி நம்பீ. 
நின்னை யேநினைந் திங்கிருப் பேனை, 
கடியார் காளைய ரைவர் புகுந்து 
காவல் செய்தவக் காவலைப் பிழைத்து 
குடிபோந் துன்னடிக் கீழ்வந்து புகுந்தேன் 
கூறை சோறிவை தந்தெனக் கருளி, 
அடியே னைப்பணி யாண்டுகொ ளெந்தாய். 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.8 

1616 
கோவாய் ஐவரென் மெய்குடி யேறிக் 
கூறை சோறிவை தா என்று குமைத்துப் 
போகார், நானவ ரைப்பொறுக் ககிலேன் 
புனிதா. புட்கொடி யாய்.நெடு மாலே, 
தீவாய் நாகணை யில்துயில் வானே. 
திருமா லே.இனிச் செய்வதொன் றறியேன், 
ஆவா வென்றடி யேற்கிறை யிரங்காய் 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே. 7.7.9 

1617 
அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த 
அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை, 
கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி 
ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன், 
சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை 
தூய மாலை யிவைபத்தும் வல்லார், 
மன்னி மன்னவ ராயுல காண்டு 
மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே. (2) 7.7.10 

1618 
செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் 
திருவடியி னிணைவருட முனிவ ரேத்த, 
வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும் 
வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின், 
எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து 
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை 
அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத் 
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. (2) 7.8.1 

1619 
முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண 
முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து 
பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம் 
பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின், 
செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம் 
அவைமுரலச் செங்கமல மலரை யேறி, 
அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத் 
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.2 

1620 
குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக் 
கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று, 
நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ. என்ன 
நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின், 
மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு 
வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய, 
அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத் 
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.3 

1621 
சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம் 
திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி, 
இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி 
எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின், 
புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க 
பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால 
அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத் 
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.4 

1622 
சினமேவும் அடலரியி னுருவ மாகித் 
திறல்மேவு மிரணியன் தாகம் கீண்டு, 
மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி 
மாளவுயிர் வவ்வியவெம் மாயோன் காண்மின், 
இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை 
ஏய்வாய மரகதம்போல் கிளியி னின்சொல், 
அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத் 
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.5 

1623 
வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி 
மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி, 
தானமர வேழுலகு மளந்த வென்றித் 
தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின், 
தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச் 
செழுமாட மாளிகைகள் கூடந் தோறும், 
ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத் 
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.6 

1624 
பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப் 
பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன், 
அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ 
அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின், 
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் 
திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க, 
அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத் 
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.7 

1625 
கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு 
பறித்துமழ விடையடர்த்துக் குரவை கோத்து, 
வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த 
தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின், 
செம்பவள மரகதநன் முத்தம் காட்டத் 
திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும், 
அம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத் 
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.8 

1626 
ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும் 
ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற, 
நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி 
நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின், 
சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித் 
திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும் 
ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத் 
தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.9 

1627 
பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப் 
படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை, 
அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும் 
அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை, 
கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன் 
கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல், 
ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார் 
ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே. (2) 7.8. 10 

1628 
கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர் 
வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும் 
தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத் 
துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே (2) 7.9.1 

1629 
தெருவில்திரி சிறுநோன்பியர் செஞ்சோற்றொடு கஞ்சி 
மருவி,பிரிந் தவர்வாய்மொழி மதியாதுவந் தடைவீர், 
திருவில்பொலி மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்து, 
உருவக்குற ளடிகளடி யுணர்மின்னுணர் வீரே 7.9.2 

1630 
பறையும்வினை தொழுதுய்மின்நீர் பணியும்சிறு தொண்டீர். 
அறையும்புன லொருபால்வய லொருபால்பொழி லொருபால் 
சிறைவண்டின மறையும்சிறு புலியூர்ச்சல சயனத் 
துறையும்,இறை யடியல்லதொன் றிறையும்மறி யேனே 7.9.3 

1631 
வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால், 
தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம் 
தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத் 
தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே 7.9.4 

1632 
நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும் 
எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச் 
செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து 
அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே 7.9.5 

1633 
முழுநீலமும் அலராம்பலும் அரவிந்தமும் விரவி, 
கழுநீரொடு மடவாரவர் கண்வாய்முகம் மலரும், 
செழுநீர்வயல் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனம், 
தொழுநீர்மைய துடையாரடி தொழுவார்துய ரிலரே 7.9.6 

1634 
சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுை றயும் 
மாயா,எனக் குரையாயிது மறைநான்கினு ளாயோ, 
தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத் 
தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே (2) 7.9.7 

1635 
மையார்வரி நீலம்மலர்க் கண்ணார்மனம் விட்டிட்டு, 
உய்வானுன கழலேதொழு தெழுவேன்,கிளி மடவார் 
செவ்வாய்மொழி பயிலும்சிறு புலியூர்ச்சல சயனத்து, 
ஐவாய் அர வணைமேலுறை அமலா.அரு ளாயே 7.9.8 

1636 
கருமாமுகி லுருவா.கன லுருவா.புன லுருவா, 
பெருமால்வரை யுருவா.பிற வுருவா.நின துருவா, 
திருமாமகள் மருவும்சிறு புலியூர்ச்சல சயனத்து, 
அருமாகட லமுதே.உன தடியேசர ணாமே. (2) 7.9.9 

1637 
சீரார்நெடு மறுகில்சிறு புலியூர்ச்சல சயனத்து, 
ஏரார்முகில் வண்ணன்றனை யிமையோர்பெரு மானை, 
காரார்வயல் மங்கைக்கிறை கலியன்னொலி மாலை, 
பாராரிவை பரவித்தொழப் பாவம்பயி லாவே (2) 7.9.10 

1638 
பெரும்பு றக்கட லையட லேற்றினைப் 
பெண்ணை யாணை,எண் ணில்முனி வர்க்கருள் 
தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப் 
பத்த ராவியை நித்திலத் தொத்தினை, 
அரும்பி னையல ரையடி யேன்மனத் 
தாசை யை அமு தம்பொதி யின்சுவைக் 
கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக் 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே. (2) 7.10.1 

1639 
மெய்ந்ந லத்தவத் தைத்திவத் தைத்தரும் 
மெய்யைப் பொய்யினைக் கையிலோர் சங்குடை, 
மைந்நி றக்கட லைக்கடல் வண்ணனை 
மாலை ஆலிலைப் பள்ளிகொள் மாயனை, 
நென்ன லைப்பக லையிற்றை நாளினை 
நாளை யாய்வரும் திங்களை யாண்டினை, 
கன்ன லைக்கரும் பினிடைத் தேறலைக் 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.2 

1640 
எங்க ளுக்கருள் செய்கின்ற ஈசனை 
வாச வார்குழ லாள்மலை மங்கைதன் 
பங்க னை,பங்கில் வைத்துகந் தான்றன்னைப் 
பான்மை யைப்பனி மாமதி யம்தவழ் 
மங்கு லைச்,சுட ரைவட மாமலை 
உச்சி யை,நச்சி நாம்வணங் கப்படும் 
கங்கு லை,பக லைச்சென்று நாடிக் 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.3 

1641 
பேய்மு லைத்தலை நஞ்சுண்ட பிள்ளையத் 
தெள்ளி யார்வணங் கப்படுந் தேவனை, 
மாய னைமதிள் கோவலி டைகழி 
மைந்த னையன்றி யந்தணர் சிந்தையுள் 
ஈச னை,இலங் கும்சுடர்ச் சோதியை 
எந்தை யையெனக் கெய்ப்பினில் வைப்பினை 
காசி னைமணி யைச்சென்று நாடிக் 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.4 

1642 
ஏற்றி னையிம யத்துளெம் மீசனை 
இம்மை யைமறு மைக்கு மருந்தினை, 
ஆற்ற லை அண்டத் தப்புறத் துய்த்திடும் 
ஐய னைக்கையி லாழியொன் றேந்திய 
கூற்றி னை,குரு மாமணிக் குன்றினை 
நின்ற வூர்நின்ற நித்திலத் தொத்தினை, 
காற்றி னைப்புன லைச்சென்று நாடிக் 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.5 

1643 
துப்ப னைத்துரங் கம்படச் சீறிய 
தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர் 
செப்பி னை,திரு மங்கைம ணாளனைத் 
தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி 
ஒப்ப னை,உல கேழினை யூழியை 
ஆழி யேந்திய கையனை அந்தணர் 
கற்பி னை,கழு நீர்மல ரும்வயல் 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.6 

1644 
திருத்த னைத்திசை நான்முகன் தந்தையைத் 
தேவ தேவனை மூவரில் முன்னிய 
விருத்த னை,விளங் கும்சுடர்ச் சோதியை 
விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய 
அருத்த னை,அரி யைப்பரி கீறிய 
அப்ப னை அப்பி லாரழ லாய்நின்ற 
கருத்த னை,களி வண்டறை யும்பொழில் 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.7 

1645 
வெஞ்சி னக்களிற் றைவிளங் காய்விழக் 
கன்று வீசிய ஈசனை, பேய்மகள் 
துஞ்ச நஞ்சுசு வைத்துண்ட தோன்றலைத் 
தோன்றல் வாளரக் கன்கெடத் தோன்றிய 
நஞ்சி னை,அமு தத்தினை நாதனை 
நச்சு வாருச்சி மேல்நிற்கும் நம்பியை, 
கஞ்ச னைத்துஞ்ச வஞ்சித்த வஞ்சனைக், 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.8 

1646 
பண்ணி னைப்பண்ணில் நின்றதோர் பான்மையைப் 
பாலுள் நெய்யினை மாலுரு வாய்நின்ற 
விண்ணி னை,விளங் கும்சுடர்ச் சோதியை 
வேள்வி யைவிளக் கினொளி தன்னை, 
மண்ணி னைமலை யையலை நீரினை 
மாலை மாமதி யைமறை யோர்தங்கள் 
கண்ணி னை,கண்க ளாரள வும்நின்று 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே 7.10.9 

1647 
கண்ண மங்கையுள் கண்டுகொண் டேன் என்று 
காத லால்கலி கன்றியு ரைசெய்த, 
வண்ண வொண்டமி ழொன்பதோ டொன்றிவை 
வல்ல ராயுரைப் பார்மதி யம்தவழ் 
விண்ணில் விண்ணவ ராய்மகிழ் வெய்துவர் 
மெய்ம்மை சொல்லில்வெண் சங்கமொன் றேந்திய 
கண்ண, நின்றனக் கும்குறிப் பாகில் 
கற்க லாம்கவி யின்பொருள் தானே. (2) 7.10.10 
பெரிய திருமொழி எட்டாம் பத்து 

1648 
சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் 
டொண்சங்கம் என்கின் றாளால், 
மலையிலங்கு தோள்நான்கே மற்றவனுக் 
கெற்றேகாண் என்கின் றாளால், 
முலையிலங்கு பூம்பயலை முன்போட 
அன்போடி யிருக்கின் றாளால், 
கலையிலங்கு மொழியாளர் கண்ணபுரத் 
தம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.1 

1649 
செருவரைமுன் னாசறுத்த சிலையன்றோ 
கைத்தலத்த தென்கின் றாளால், 
பொருவரைமுன் போர்தொலைத்த பொன்னாழி 
மற்றொருகை என்கின் றாளால், 
ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலர் 
என்னப்பா என்கின் றாளால், 
கருவரைபோல் நின்றானைக் கண்ணபுரத் 
தம்மானைக் கண்டாள் கொல்லோ. (2) 8.1.2 

1650 
துன்னுமா மணிமுடிமேல் துழாயலங்கல் 
தோன்றுமால் என்கின் றாளால், 
மின்னுமா மணிமகர குண்டலங்கள் 
வில்வீசும் என்கின் றாளால், 
பொன்னின்மா மணியாரம் அணியாகத் 
திலங்குமால் என்கின் றாளால், கன்னிமா மதிள்புடைசூழ் கண்ணபுரத் 
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.3 

1651 
தாராய தண்டுளப வண்டுழுத 
வரைமார்பன் என்கின் றாளால், 
போரானைக் கொம்பொசித்த புட்பாகன் 
என்னம்மான் என்கின் றாளால், 
ஆரானும் காண்மின்கள் அம்பவளம் 
வாயவனுக் கென்கின் றாளால், 
கார்வானம் நின்றதிருக் கண்ணபுரத் 
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.4 

1652 
அடித்தலமும் தாமரையே அங்கையும் 
பங்கயமே என்கின் றாளால், 
முடித்தலமும் பொற்பூணு மென்நெஞ்சத் 
துள்ளகலா என்கின் றாளால், 
வடித்தடங்கண் மலரவளோ வரையாகத் 
துள்ளிருப்பாள் என்கின் றாளால், 
கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரத் 
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.5 

1653 
பேரா யிரமுடைய பேராளன் 
பேராளன் என்கின் றாளால், 
ஏரார் கனமகர குண்டலத்தன் 
எண்தோளன் என்கின் றாளால், 
நீரார் மழைமுகிலே நீள்வரையே 
ஒக்குமால் என்கின் றாளால், 
காரார் வயலமரும் கண்ணபுரத் 
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.6 

1654 
செவ்வரத்த வுடையாடை யதன்மேலோர் 
சிவளிகைக்கச் சென்கின் றாளால், 
அவ்வரத்த வடியிணையு மங்கைகளும் 
பங்கயமே என்கின் றாளால், 
மைவளர்க்கும் மணியுருவம் மரகதமோ 
மழைமுகிலோ என்கின் றாளால், 
கைவளர்க்கு மழலாளர் கண்ணபுரத் 
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.7 

1655 
கொற்றப்புள் ளொன்றேறி மன்னூடே 
வருகின்றான் என்கின் றாளால், 
வெற்றிப்போ ரிந்திரற்கு மிந்திரனே 
ஒக்குமால் என்கின் றாளால், 
பெற்றக்கா லவனாகம் பெண்பிறந்தோம் 
உய்யோமோ என்கின் றாளால், 
கற்றநூல் மறையாளர் கண்ணபுரத் 
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.8 

1656 
வண்டமரும் வனமாலை மணிமுடிமேல் 
மணநாறும் என்கின் றாளால், 
உண்டிவர்பா லன்பெனக்கென் றொருகாலும் 
பிரிகிலேன் என்கின் றாளால், 
பண்டிவரைக் கண்டறிவ தெவ்வூரில் 
யாம் என்றே பயில்கின் றாளால், 
கண்டவர்தம் மனம்வழங்கும் கண்ணபுரத் 
தம்மானைக் கண்டாள் கொல்லோ. 8.1.9 

1657 
மாவளரு மென்னோக்கி மாதராள் 
மாயவனைக் கண்டாள் என்று, 
காவளரும் கடிபொழில்சூழ் கண்ணபுரத் 
தம்மானைக் கலியன் சொன்ன, 
பாவளரும் தமிழ்மாலை பன்னியநூல் 
இவையைந்து மைந்தும் வல்லார், 
பூவளரும் கற்பகம்சேர் பொன்னுலகில் 
மன்னவராய்ப் புகழ்தக் கோரே. (2) 8.1.10 

1658 
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் 
வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ 
துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் 
கள்வியோ, கைவளை கொள்வது தக்கதே? (2) 8.2.1 

1659 
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள், 
காணுமோ கண்ண புரமென்று காட்டினாள், 
பாணனார் திண்ண மிருக்க இனியிவள் 
நாணுமோ, நன்றுநன் றுநறை யூரர்க்கே. 8.2.2 

1660 
அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய் 
வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள், 
பெருகுசீர்க் கண்ண புரம் என்று பேசினாள் 
உருகினாள், உள்மெலிந் தாள் இது வென்கொலோ. (2) 8.2.3 

1661 
உண்ணும்நா ளில்லை உறக்கமுந் தானில்லை, 
பெண்மையும் சால நிறைந்திலள் பேதைதான், 
கண்ணனூர் கண்ண புரம்தொழும் கார்க்கடல் 
வண்ணர்மேல், எண்ண மிவட்கிது வென்கொலோ. 8.2.4 

1662 
கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை, 
பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள், 
வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள், 
வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே. 8.2.5 

1663 
வடவரை நின்றும்வந்து இன்று கணபுரம், 
இடவகை கொள்வது யாம் என்று பேசினாள், 
மடவரல் மாதரென் பேதை யிவர்க்கிவள் 
கடவதென், கண்டுயி லின்றிவர் கொள்ளவே. 8.2.6 

1664 
தரங்கநீர் பேசினும் தண்மதி காயினும், 
இரங்குமோ எத்தனை நாளிருந் தெள்கினாள் 
துரங்கம்வாய் கீண்டுகந் தானது தொன்மை ஊர் 
அரங்கமே என்ப திவள்தனக் காசையே. 8.2.7 

1665 
தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா 
கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள் 
வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம் 
கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே? 8.2.8 

1666 
முள்ளெயி றேய்ந்தில, கூழை முடிகொடா, 
தெள்ளிய ளென்பதோர் தேசிலள் என்செய்கேன், 
கள்ளவிழ் சோலைக் கணபுரம் கைதொழும் 
பிள்ளையை, பிள்ளையென் றெண்ணப் பெறுவரே? 8.2.9 

1667 
கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை, 
பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல், 
சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர், 
நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே. (2) 8.2.10 

1668 
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும், 
திரையெடுத்து வருபுனல்சூழ் திருக்கண்ண புரத்துறையும், 
விரையெடுத்த துழாயலங்கல் விறல்வரைத்தோள் புடைபெயர 
வரையெடுத்த பெருமானுக் கிழந்தேனென் வரிவளையே. (2) 8.3.1 

1669 
அரிவிரவு முகிற்fகணத்தா னகில்புகையால் வரையோடும் 
தெரிவரிய மணிமாடத் திருக்கண்ண புரத்துறையும், 
வரியரவி னணைத்துயின்று மழைமதத்த சிறுதறுகண், 
கரிவெருவ மருப்பொசித்தாற் கிழந்தேனென் கனவளையே. 8.3.2 

1670 
துங்கமா மணிமாட நெடுமுகட்டின் சூலிகைபோம் 
திங்கள்மா முகில்துணிக்கும் திருக்கண்ண புரத்துறையும் 
பைங்கண்மால் விடையடர்த்துப் பனிமதிகோள் விடுத்துகந்த 
செங்கண்மா லம்மானுக் கிழந்தேனென் செறிவளையே. 8.3.3 

1671 
கணமருவு மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில், 
திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும், 
மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய் உரலோடும் 
புணர்மருத மிறநடந்தாற் கிழந்தேனெ ன் பொன்வளையே. 8.3.4 

1672 
வாயெடுத்த மந்திரத்தா லந்தணர்தம் செய்தொழில்கள் 
தீயெடுத்து மறைவளர்க்கும் திருக்கண்ண புரத்துறையும் 
தாயெடுத்த சிறுகோலுக் குளைந்தோடித் தயிருண்ட, 
வாய்துடைத்த மைந்தனுக் கிழந்தேனென் வரிவளையே. 8.3.5 

1673 
மடலெடுத்த நெடுந்தாழை மருங்கெல்லாம் வளர்பவளம், 
திடலெடுத்துச் சுடரிமைக்கும் திருக்கண்ண புரத்துறையும், 
அடலடர்த்தன் றிரணியனை முரணழிய அணியுகிரால், 
உடலெடுத்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 8.3.6 

1674 
வண்டமரும் மலர்ப்புன்னை வரிநீழ லணிமுத்தம், 
தெண்டிரைகள் வரத்திரட்டும் திருக்கண்ண புரத்துறையும், 
எண்டிசையு மெழுசுடரு மிருநிலனும் பெருவிசும்பும், 
உண்டுமிழ்ந்த பெருமானுக் கிழந்தேனென் ஒளிவளையே. 8.3.7 

1675 
கொங்குமலி கருங்குவளை கண்ணாக தெண்கயங்கள் 
செங்கமல முகமலர்த்தும் திருக்கண்ண புரத்துறையும், 
வங்கமலி தடங்கடலுள் வரியரவி னணைத்துயின்றா, 
செங்கமல நாபனுக் கிழந்தேனென் செறிவளையே. 8.3.8 

1676 
வாராளு மிளங்கொங்கை நெடும்பணைத்தோள் மடப்பாவை, 
சீராளும் வரைமார்வன் திருக்கண்ண புரத்துறையும், 
பேராள னாயிரம்பே ராயிரவா யரவணைமேல் 
பேராளர் பெருமானுக் கிழந்தேனென் பெய்வளையே. 8.3.9 

1677 
தேமருவு பொழில்புடைசூழ் திருக்கண்ண புரத்துறையும் 
வாமனனை, மறிகடல்சூழ் வயலாலி வளநாடன், 
காமருசீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ்மாலை, 
நாமருவி யிவைபாட வினையாய நண்ணாவே. (2) 8.3.10 

1678 
விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன், 
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலிபுகழ்சேர், 
கண்ண புரத்தெம் பெருமான் கதிர்முடிமேல், 
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.1 

1679 
வேத முதல்வன் விளங்கு புரிநூலன், 
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி, 
காதன்மை செய்யும் கண்ணபுரத் தெம்பெருமான், 
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.2 

1680 
விண்டமல ரெல்லா மூதிநீ யென்பெறுதி, 
அண்ட முதல்வ னமரர்க ளெல்லாரும், 
கண்டு வணங்கும் கண்ணபுரத் தெம்பெருமான் 
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ. 8.4.3 

1681 
நீர்மலி கின்றதோர் மீனாயோ ராமையுமாய், 
சீர்மலி கின்றதோர் சிங்க வுருவாகி, 
கார்மலி வண்ணன் கண்ணபுரத் தெம்பெருமான், 
தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.4 

1682 
ஏரார் மலரெல்லா மூதிநீ யென்பெறுதி, 
பாரா ருலகம் பரவப் பெருங்கடலுள், 
காராமை யான கண்ணபுரத் தெம்பெருமான், 
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.5 

1683 
மார்வில் திருவன் வலனேந்து சக்கரத்தன், 
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி, 
காரில் திகழ்காயா வண்ணன் கதிர்முடிமேல், 
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.6 

1684 
வாமனன் கற்கி மதுசூதன் மாதவன் 
தார்மன்னு தாச ரதியாய தடமார்வன், 
காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான், 
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ. 8.4.7 

1685 
நீல மலர்கள் நெடுநீர் வயல்மருங்கில், 
சால மலரெல்லா மூதாதே, வாளரக்கர் 
காலன் கண்ணபுரத் தெம்பெருமான் கதிர்முடிமேல், 
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.8 

1686 
நந்தன் மதலை நிலமங்கை நல்துணைவன், 
அந்த முதல்வன் அமரர்கள் தம்பெருமான், 
கந்தம் கமழ்காயா வண்ணன் கதிர்முடிமேல், 
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோல்தும்பீ. 8.4.9 

1687 
வண்டமருஞ் சோலை வயலாலி நன்னாடன், 
கண்டசீர் வென்றிக் கலிய னொலிமாலை, 
கொண்டல் நிறவண்ணன் கண்ண புரத்தானை, 
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ. (2) 8.4.10 

1688 
தந்தை காலில் விலங்கறவந்து 
தோன்றிய தோன்றல்பின், தமியேன்றன் 
சிந்தை போயிற்றுத் திருவருள் 
அவனிடைப் பெறுமள விருந்தேனை, 
அந்தி காவலனமுதுறு 
பசுங்கதி ரவைசுட அதனோடும், 
மந்த மாருதம் வனமுலை 
தடவந்து வலிசெய்வ தொழியாதே. (2) 8.5.1 

1689 
மாரி மாக்கடல் வளைவணற் 
கிளையவன் வரைபுரை திருமார்பில், 
தாரி னாசையில் போயின 
நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணைகாணேன், 
ஊரும் துஞ்சிற்றுலகமும் 
துயின்றது ஒளியவன் விசும்பியங்கும், 
தேரும் போயிற்றுத் திசைகளும் 
மறைந்தன செய்வதொன் றறியேனே. 8.5.2 

1690 
ஆயன் மாயமே யன்றிமற் 
றென்கையில் வளைகளும் இறைநில்லா, 
பேயின் ஆருயி ருண்டிடும் 
பிள்ளைநம் பெண்ணுயிர்க் கிரங்குமோ, 
தூய மாமதிக் கதிர்ச்சுடத் 
துணையில்லை இணைமுலை வேகின்றதால், 
ஆயன் வேயினுக் கழிகின்ற 
துள்ளமும் அஞ்சேலென் பாரிலையே. 8.5.3 

1691 
கயங்கொள் புண்தலைக் களிறுந்து 
வெந்திறல் கழல்மன்னர் பெரும்போரில், 
மயஙகவெண்சங்கம் வாய்வைத்த 
மைந்தனும் வந்திலன், மறிகடல்நீர் 
தயங்கு வெண்திரைத் திவலைநுண் 
பனியென்னும் தழல்முகந் திளமுலைமேல், 
இயங்கு மாருதம் விலங்கிலென் 
ஆவியை எனக்கெனப் பெறலாமே. 8.5.4 

1692 
ஏழு மாமரம் துளைபடச் 
சிலைவளைத் திலங்கையை மலங்குவித்த 
ஆழி யான்,நமக் கருளிய 
அருளொடும் பகலெல்லை கழிகின்றதால், 
தோழி. நாமிதற் கென்செய்தும் 
துணையில்லை சுடர்படு முதுநீரில், 
ஆழ ஆழ்கின்ற ஆவியை 
அடுவதோர் அந்திவந் தடைகின்றதே. 8.5.5 

1693 
முரியும் வெண்டிரை முதுகயம் 
தீப்பட முழங்கழ லெரியம்பின், 
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த 
மைந்தனும் வந்திலன் என்செய்கேன், 
எரியும் வெங்கதிர் துயின்றது 
பாவியேன் இணைநெடுங் கண்துயிலா, 
கரிய நாழிகை ஊ ழியில் 
பெரியன கழியுமா றறியேனே. 8.5.6 

1694 
கலங்க மாக்கடல் கடைந்தடைத் 
திலங்கையர் கோனது வரையாகம், 
மலங்க வெஞ்சமத் தடுசரம் 
துரந்தவெம் மடிகளும் வாரானால், 
இலங்கு வெங்கதி ரிளமதி 
யதனொடும் விடைமணி யடும்,ஆயன் 
விலங்கல் வேயின தோசையு 
மாயினி விளைவதொன் றறியேனே. 8.5.7 

1695 
முழுதிவ் வையகம் முறைகெட 
மறைதலும் முனிவனும் முனிவெய்தி, 
மழுவி னால்மன்னர் ஆருயிர் 
வவ்விய மைந்தனும் வாரானால், 
ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய 
பேடையை யடங்கவஞ் சிறைகோலி, 
தழுவு நள்ளிருள் தனிமையிற் 
கடியதோர் கொடுவினை யறியேனே. 8.5.8 

1696 
கனஞ்செய் மாமதிள் கணபுரத் 
தவனொடும் கனவினி லவன்தந்த, 
மனஞ்செ யின்பம்வந் துள்புக 
வெள்கியென் வளைநெக இருந்தேனை, 
சினஞ்செய் மால்விடைச் சிறுமணி 
ஓசையென் சிந்தையைச் சிந்துவிக்கும், 
அனந்த லன்றிலின் அரிகுரல் 
பாவியே னாவியை யடுகின்றதே. 8.5.9 

1697 
வார்கொள் மென்முலை மடந்தையர் 
தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து, 
ஆர்வத் தாலவர் புலம்பிய 
புலம்பலை அறிந்துமுன் உரைசெய்த, 
கார்கொள் பைம்பொழில் மங்கையர் 
காவலன் கலிகன்றி யொலிவல்லார், 
ஏர்கொள் வைகுந்த மாநகர் 
புக்கிமை யவரொடும் கூடுவரே. (2) 8.5.10 

1698 
தொண்டீர். உய்யும் வகைகண்டேன் 
துளங்கா அரக்கர் துளங்க முன் 
திண்டோள் நிமிரச் சிலைவளையச் 
சிறிதே முனிந்த திருமார்பன், 
வண்டார் கூந்தல் மலர்மங்கை 
வடிக்கண் மடந்தை மாநோக்கம் 
கண்டாள், கண்டு கொண்டுகந்த 
கண்ண புரம்நாம் தொழுதுமே. (2) 8.6.1 

1699 
பொருந்தா அரக்கர் வெஞ்சமத்துப் 
பொன்ற அன்று புள்ளூர்ந்து, 
பெருந்தோள் மாலி தலைபுரளப் 
பேர்ந்த அரக்கர் தென்னிலங்கை, 
இருந்தார் தம்மை யுடன்கொண்டங் 
கெழிலார் பிலத்துப் புக்கொளிப்ப, 
கருந்தாள் சிலைகைக் கொண்டானூர் 
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.2 

1700 
வல்லி யிடையாள் பொருட்டாக 
மதிள்நீ ரிலங்கை யார்கோவை, 
அல்லல் செய்து வெஞ்சமத்துள் 
ஆற்றல் மிகுந்த ஆற்றலான், 
வல்லாள் அரக்கர் குலப்பாவை 
வாட முனிதன் வேள்வியை, 
கல்விச் சிலையால் காத்தானூர் 
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.3 

1701 
மல்லை முந்நீ ரதர்பட 
வரிவெஞ் சிலைகால் வளைவித்து, 
கொல்லை விலங்கு பணிசெய்யக் 
கொடியோன் இலங்கை புகலுற்று, 
தொல்லை மரங்கள் புகப்பெய்து 
துவலை நிமிர்ந்து வானணவ, 
கல்லால் கடலை யடைத்தானூர் 
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.4 

1702 
ஆமை யாகி அரியாகி 
அன்ன மாகி அந்தணர்தம் 
ஓம மாகி ஊழியாய் 
உலகு சூழ்ந்த நெடும்புணரி 
சேம மதிள்சூழிலங்கைக்கோன் 
சிரமுங்கரமும் துணித்து முன் 
காமற் பயந்தான் கருதுமூர் 
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.5 

1703 
வருந்தா திருநீ மடநெஞ்சே 
நம்மேல் வினைகள் வாரா முன் 
திருந்தா அரக்கர் தென்னிலங்கை 
செந்தீ யுண்ணச் சிவந்தொருநாள், 
பெருந்தோள் வாணற் கருள்புரிந்து 
பின்னை மணாள னாகி முன் 
கருந்தாள் களிறொன் றொசித்தானூர் 
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.6 

1704 
இலையார் மலர்ப்பூம் பொய்கைவாய் 
முதலை தன்னால் அடர்ப்புண்டு, 
கொலையார் வேழம் நடுக்குற்றுக் 
குலைய அதனுக் கருள்புரிந்தான், 
அலைநீ ரிலங்கைத் தசக்கிரீவற்கு 
இளையோற் கரசை யருளி,முன் 
கலைமாச் சிலையால் எய்தானூர் 
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.7 

1705 
மாலாய் மனமேயருந்துயரில் 
வருந்தா திருநீ வலிமிக்க 
காலார் மருதும் காய்சினத்த 
கழுதும் கதமாக் கழுதையும், 
மாலார் விடையும் மதகரியும் 
மல்லர் உயிரும் மடிவித்து, 
காலால் சகடம் பாய்ந்தானூர் 
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.8 

1706 
குன்றால் மாரி பழுதாக்கிக் 
கொடியே ரிடையாள் பொருட்டாக, 
வன்றாள் விடையே ழன்றடர்த்த 
வானோர் பெருமான் மாமாயன், 
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் 
திரிகாற்f சகடம் சினமழித்து, 
கன்றால் விளங்கா யெறிந்தானூர் 
கண்ண புரம்நாம் தொழுதுமே. 8.6.9 

1707 
கருமா முகில்தோய் நெடுமாடக் 
கண்ண புரத்தெம் அடிகளை, 
திருமா மகளா லருள்மாரி 
செழுநீ ராலி வளநாடன், 
மருவார் புயல்கைக் கலிகன்றி 
மங்கை வேந்த னொலிவல்லார் 
இருமா நிலத்துக் கரசாகி 
இமையோர் இறைஞ்ச வாழ்வாரே. (2) 8.6.10 

1708 
வியமுடை விடையினம் உடைதர மடமகள், 
குயமிடை தடவரை யகலம துடையவர், 
நயமுடை நடையனம் இளையவர் நடைபயில், 
கயமிடை கணபுரம் அடிகள்தமிடமே. (2) 8.7.1 

1709 
இணைமலி மருதினொ டெருதிற இகல்செய்து 
துணைமலி முலையவள் மணமிகு கலவியுள், 
மணமலி விழவினொ டடியவர் அளவிய, 
கணமலி கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.2 

1710 
புயலுறு வரைமழை பொழிதர மணிநிரை, 
மயலுற வரைகுடை யெடுவிய நெடியவர், 
முயல்துளர் மிளைமுயல் துளவள விளைவயல், 
கயல்துளு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.3 

1711 
ஏதலர் நகைசெய இளையவர் அளைவெணெய் 
போதுசெய் தமரிய புனிதர்நல் விரைமலர் 
கோதிய மதுகரம் குலவிய மலர்மகள் 
காதல்செய் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.4 

1712 
தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுதெழ 
அண்டமொ டகலிடம் அளந்தவர் அமர்ச்செய்து 
விண்டவர் படமதி ளிலங்கைமுன் னெரியெழ 
கண்டவர் கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.5 

1713 
மழுவியல் படையுடை யவனிடம் மழைமுகில், 
தழுவிய உருவினர் திருமகள் மருவிய 
கொழுவிய செழுமலர் முழுசிய பறவைபண் 
எழுவிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.6 

1714 
பரிதியொ டணிமதி பனிவரை திசைநிலம் 
எரிதியொ டெனவின இயல்வினர் செலவினர் 
சுருதியொ டருமறை முறைசொலு மடியவர் 
கருதிய கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.7 

1715 
படிபுல்கு மடியிணை பலர்தொழ மலர்வைகு 
கொடிபுல்கு தடவரை அகலம துடையவர் 
முடிபுல்கு நெடுவயல் படைசெல அடிமலர் 
கடிபுல்கு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.8 

1716 
புலமனு மலர்மிசை மலர்மகள் புணரிய 
நிலமக ளெனவின மகளிர்க ளிவரொடும் 
வலமனு படையுடை மணிவணர் நிதிகுவை 
கலமனு கணபுரம் அடிகள்தம் இடமே. 8.7.9 

1717 
மலிபுகழ் கணபுர முடையவெம் அடிகளை 
வலிகெழு மதிளயல் வயலணி மங்கையர் 
கலியன தமிழிவை விழுமிய இசையினொடு 
ஒலிசொலும் அடியவர் உறுதுய ரிலரே. (2) 8.7.10 

1718 
வானோ ரளவும் முதுமுந்நீர் 
வளர்ந்த காலம், வலியுருவில் 
மீனாய் வந்து வியந்துய்யக் 
கொண்ட தண்டா மரைக்கண்ணன், 
ஆனா வுருவி லானாயன் 
அவனை யம்மா விளைவயலுள், 
கானார் புறவில் கண்ணபுரத் 
தடியேன் கண்டு கொண்டேனே. (2) 8.8.1 

1719 
மலங்கு விலங்கு நெடுவெள்ளம் 
மறுக அங்கோர் வரைநட்டு 
இலங்கு சோதி யாரமுதம் 
எய்து மளவோர் ஆமையாய், 
விலங்கல் திரியத் தடங்கடலுள் 
சுமந்து கிடந்த வித்தகனை, 
கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத் 
தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.2 

1720 
பாரார் அளவும் முதுமுந்நீர் 
பரந்த காலம், வளைமருப்பில் 
ஏரார் உருவத் தேனமாய் 
எடுத்த ஆற்ற லம்மானை, 
கூரார் ஆரல் இரைகருதிக் 
குருகு பாயக் கயலிரியும், 
காரார் புறவில் கண்ணபுரத் 
தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.3 

1721 
உளைந்த அரியும் மானிடமும் 
உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து, 
விளைந்த சீற்றம் விண்வெதும்ப 
வேற்றோன் அகலம் வெஞ்சமத்து, 
பிளந்து வளைந்த வுகிரானைப் 
பெருந்தண் செந்நெற் குலைதடிந்து, 
களஞ்செய் புறவில் கண்ணபுரத் 
தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.4 

1722 
தொழுநீர் வடிவில் குறளுருவாய் 
வந்து தோன்றி மாவலிபால், 
முழுநீர் வையம் முன்கொண்ட 
மூவா வுருவி னம்மானை 
உழுநீர் வயலுள் பொன்கிளைப்ப 
ஒருபால் முல்லை முகையோடும் 
கழுநீர் மலரும் கண்ணபுரத் 
தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.5 

1723 
வடிவாய் மழுவே படையாக 
வந்து தோன்றி மூவெழுகால், 
படியார் அரசு களைகட்ட 
பாழி யானை யம்மானை, 
குடியா வண்டு கொண்டுண்ணக் 
கோல நீலம் மட்டுகுக்கும், 
கடியார் புறவில் கண்ணபுரத் 
தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.6 

1724 
வைய மெல்லா முடன்வணங்க 
வணங்கா மன்ன னாய்த்தோன்றி, 
வெய்ய சீற்றக் கடியிலங்கை 
குடிகொண் டோட வெஞ்சமத்து, 
செய்த வெம்போர் நம்பரனைச் 
செழுந்தண் கானல் மணநாறும், 
கைதை வேலிக் கண்ணபுரத் 
தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.7 

1725 
ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் 
ஒருபால் தோன்றத் தான்தோன்றி, 
வெற்றித் தொழிலார் வேல்வேந்தர் 
விண்பாற்f செல்ல வெஞ்சமத்து, 
செற்ற கொற்றத் தொழிலானைச் 
செந்தீ மூன்றும் மில்லிருப்ப, 
கற்ற மறையோர் கண்ணபுரத் 
தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.8 

1726 
துவரிக் கனிவாய் நிலமங்கை 
துயர்தீர்ந் துய்யப் பாரதத்துள், 
இவரித் தரசர் தடுமாற 
இருள்நாள் பிறந்த அம்மானை, 
உவரி யோதம் முத்துந்த 
ஒருபா லொருபா லொண்செந்நெல், 
கவரி வீசும் கண்ணபுரத் 
தடியேன் கண்டு கொண்டேனே. 8.8.9 

1727 
மீனோ டாமை கேழலரி 
குறளாய் முன்னு மிராமனாய்த் 
தானாய் பின்னு மிராமனாய்த் 
தாமோ தரனாய்க் கற்கியும் 
ஆனான் றன்னை கண்ணபுரத் 
தடியேன் கலிய னொலிசெய்த 
தேனா ரின்சொல் தமிழ்மாலை 
செப்பப் பாவம் நில்லாவே. (2) 8.8.10 

1728 
கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை 
மைம்மான மணியை அணிகொள் மரகதத்தை, 
எம்மானை யெம்பிரானை யீசனை யென்மனத்துள் 
அம்மானை, அடியே னடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.1 

1729 
தருமான மழைமுகிலைப் பிரியாது தன்னடைந்தார், 
வருமானம் தவிர்க்கும் மணியையணியுருவில், 
திருமாலை யம்மானை அமுதத்தைக் கடற்கிடந்த 
பெருமானை அடியே னடைந்துய்ந்து பிழைத்தேனே. 8.9.2 

1730 
விடையேழன் றடர்த்து வெகுண்டு விலங்கலுற 
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி, 
மடையார் நீலம்மல்கும் வயல்சூழ் கண்ணபுரமொன் 
றுடையானுக்கு அடியேன் ஒருவர்க் குரியேனோ? (2) 8.9.3 

1731 
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் 
புக்கானைப் புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை 
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த 
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே. (2) 8.9.4 

1732 
வந்தாயென் மனத்தே வந்துநீ புகுந்தபின்னை, 
எந்தாய். போயறியாய் இதுவே யமையாதோ 
கொந்தார் பைம்பொழில்சூழ் குடந்தைக் கிடந்துகந்த 
மைந்தா உன்னையென்றும் மறவாமைப் பெற்றேனே. 8.9.5 

1733 
எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு, 
அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை, 
நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய், 
மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே. 8.9.6 

1734 
பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும்நின் றடியேனுக்கு, 
உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை, 
முற்றா மாமதிகோள் விடுத்தானை யெம்மானை 
எத்தால் யான்மறக்கேன் இதுசொல்லெனனேழைநெஞ்சே. 8.9.7 

1735 
கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே 
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்தபின்னை 
வற்றா நீர்வயல்சூழ் வயலாலி யம்மானைப் 
பெற்றேன் பெற்றதும் பிறவாமை பெற்றேனே. 8.9.8 

1736 
கண்ணார் கண்ணபுரம் கடிகை கடிகமழும் 
தண்ணார் தாமரைசூழ் தலைச்சங்க மேல்திசையுள் 
விண்ணோர் நாண்மதியை விரிகின்ற வெஞ்சுடரை 
கண்ணாரக் கண்டுகொண்டு களிக்கின்றதிங் கென்றுகொலோ. (2) 8.9.9 

1737 
செருநீர வேல்வலவன் கலிகன்றி மங்கையர்கோன் 
கருநீர் முகில்வண்ணன் கண்ண புரத்தானை 
இருநீ ரின்தமிழ் இன்னிசை மாலைகள் கொண்டுதொண்டீர், 
வருநீர் வையமுய்ய இவைபாடி யாடுமினே. (2) 8.9.10 

1738 
வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம் 
உண்டானே உன்னை யுகந்துகந் துன்றனக்கே 
தொண்டானேற்கு என்செய்கின் றாய்சொல்லு நால்வேதம் 
கண்டானே கண்ண புறத்துறை யம்மானே. (2) 8.10.1 

1739 
பெருநீரும் விண்ணும் மலையு முலகேழும் 
ஒருதாரா நின்னு ளொடுக்கிய நின்னையல்லால் 
வருதேவர் மற்றுளரென் றென்மனத் திறையும் 
கருதேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.2 

1740 
மற்றுமோர் தெய்வ முளதென் றிருப்பாரோ 
டுற்றிலேன் உற்றது முன்னடி யார்க்கடிமை 
மற்றெல்லம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும் 
கற்று நான் கண்ண புரத்துறை யம்மானே. (2) 8.10.3 

1741 
பெண்ணானாள் பேரிளங் கொங்கையி னாரழல்போல் 
உண்ணாநஞ் சுண்டுகந் தாயை யுகந்தேன்நான் 
மண்ணாளா. வாள்நெடுங் கண்ணி மதுமலராள் 
கண்ணாளா கண்ண புரத்துறை யம்மானே. 8.10.4 

1742 
பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான் 
மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன் 
உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய் 
கற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.5 

1743 
ஏத்தியுன் சேவடி யெண்ணி யிருப்பாரை, 
பார்த்திருந் தங்கு நமன்றமர் பற்றாது 
சோத்தம்நாம் அஞ்சுது மென்று தொடாமை நீ 
காத்திபோல் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.6 

1744 
வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல் 
துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே 
வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர் 
கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.7 

1745 
மாணாகி வைய மளந்ததுவும் வாளவுணன் 
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்திருந்தேன் 
பேணாத வல்வினை யேனிட ரெத்தனையும் 
காணேன்நான் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.8 

1746 
நாட்டினா யென்னை யுனக்குமுன் தொண்டாக 
மாட்டினே னத்தனையே கொண்டென் வல்வினையை 
பாட்டினா லுன்னையென் நெஞ்சத் திருந்தமை 
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே. 8.10.9 

1747 
கண்டசீர்க் கண்ண புரத்துறை யம்மானை 
கொண்டசீர்த் தொண்டன் கலிய னொலிமாலை 
பண்டமாய்ப் பாடு மடியவர்க் கெஞ்ஞான்றும் 
அண்டம்போ யாட்சி யவர்க்க தறிந்தோமே. (2) 8.10.10 
பெரிய திருமொழி ஒன்பதாம் பத்து 

1748 
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய 
வாளர வினணை மேவி 
சங்கமா ரங்கைத் தடமல ருந்திச் 
சாமமா மேனியென் தலைவன் 
அங்கமா றைந்து வேள்விநால் வேதம் 
அருங்கலை பயின்று எரி மூன்றும் 
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் 
திருக்கண்ணங் குடியுள்நின் றானே. (2) 9.1.1 

1749 
கவளமா கதத்த கரியுய்யப் பொய்கைக் 
கராம்கொளக் கலங்கியுள் நினைந்து 
துவளமேல் வந்து தோன்றிவன் முதலை 
துணிபடச் சுடுபடை துரந்தோன் 
குவளைநீள் முளரி குமுதமொண் கழுநீர் 
கொய்ம்மலர் நெய்தலொண் கழனி 
திவளும்மா ளிகசூழ் செழுமணிப் புரிசைத் 
திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.2 

1750 
வாதைவந் தடர வானமும் நிலனும் 
மலைகளும் அலைகடல் குளிப்ப 
மீதுகொண் டுகளும் மீனுரு வாகி 
விரிபுனல் வரியகட் டொளித்தோன் 
போதலர் புன்னை மல்லிகை மௌவல் 
புதுவிரை மதுமல ரணைந்து 
சீதவொண் தென்றல் திசைதொறும் கமழும் 
திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.3 

1751 
வென்றிசேர் திண்மை விலங்கல்மா மேனி 
வெள்ளெயிற் றொள்ளெரித் தறுகண் 
பன்றியாய் அன்று பார்மகள் பயலை 
தீர்த்தவன் பஞ்சவர் பாகன் 
ஒன்றலா வுருவத் துலப்பில்பல் காலத் 
து உயர்கொடி யொளிவளர் மதியம், 
சென்றுசேர் சென்னிச் சிகரநன் மாடத் 
திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.4 

1752 
மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் 
மூவடி நீரொடும் கொண்டு 
பின்னுமே ழுலகும் ஈரடி யாகப் 
பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன் 
அன்னமென் கமலத் தணிமலர்ப் பீடத் 
தலைபுன லிலைக்குடை நீழல் 
செந்நெலொண் கவரி யசையவீற் றிருக்கும் 
திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.5 

1753 
மழுவினால் அவனி அரசைமூ வெழுகால் 
மணிமுடி பொடிபடுத்து உதிரக் 
குழுவுவார் புனலுள் குளித்துவெங் கோபம் 
தவிர்ந்தவன் , குலைமலி கதலிக் 
குழுவும்வார் கமுகும் குரவும்நற் பலவும் 
குளிர்தரு சூதம்மா தவியும் 
செழுமையார் பொழில்கள் தழுவுநன் மாடத் 
திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.6 

1754 
வானுளா ரவரை வலிமையால் நலியும் 
மலிகடல் இலங்கையார் கோனை 
பானுசேர் சரத்தால் பனங்கனி போலப் 
பருமுடி யுதிரவில் வளைத்தோன் 
கானுலா மயிலின் கணங்கள்நின் றாடக் 
கணமுகில் முரசநின் றதிர 
தேனுலா வரிவண் டின்னிசை முரலும் 
திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.7 

1755 
அரவுநீள் கொடியோன் அவையுளா சனத்தை 
அஞ்சிடா தேயிட, அதற்குப் 
பெரியமா மேனி யண்டமூ டுருவப் 
பெருந்திசை யடங்கிட நிமிர்ந்தோன் 
வரையின்மா மணியும் மரகதத் திரளும் 
வயிரமும் வெதிருதிர் முத்தும் 
திரைகொணர்ந் துந்தி வயல்தொறும் குவிக்கும் 
திருக்கண்ணங் குடியுள் நின் றானே. 9.1.8 

1756 
பன்னிய பாரம் பார்மகட் கொழியப் 
பாரத மாபெரும் போரில் 
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்டேர் 
மைத்துனர்க் குய்த்தமா மாயன் 
துன்னுமா தவியும் சுரபுனைப் பொழிலும் 
சூழ்ந்தெழு செண்பக மலர்வாய் 
தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும் 
திருக்கண்ணங் குடியுள்நின் றானே. 9.1.9 

1757 
கலையுலாவல்குல் காரிகை திறத்துக் 
கடல்பெரும் படையொடும் சென்று 
சிலையினால் இலங்கை தீயெழச் செற்ற 
திருக்கண்ணங் குடியுள்நின் றானை 
மலைகுலா மாட மங்கையர் தலைவன் 
மானவேல் கலியன்வா யொலிகள் 
உலவுசொல் மாலை யொன்பதோ டொன்றும் 
வல்லவர்க் கில்லைநல் குரவே. (2) 9.1.10 

1758 
பொன்னிவர் மேனி மரக தத்தின் 
பொங்கிளஞ் சோதி யகலத்தாரம் 
மின் இவர் வாயில்நல் வேத மோதும் 
வேதியர் வானவ ராவர்தோழீ, 
என்னையும் நோக்கியென் னல்குலும் நோக்கி 
ஏந்திளங் கொங்கையும் நோக்குகின்றார் 
அன்னையென் னோக்குமென் றஞ்சு கின்றேன் 
அச்சோ ஒருவர் அழகியவா. (2) 9.2.1 

1759 
தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் 
சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த 
சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் 
செஞ்சுட ராழியும் சங்குமேந்தி 
பாடக மெல்லடி யார்வ ணங்கப் 
பன்மணி முத்தொடி லங்குசோதி 
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் 
அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.2 

1760 
வேயிருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த 
மெய்ய மணாளர் இவ் வையமெல்லாம் 
தாயின நாயக ராவர் தோழீ. 
தாமரைக் கண்கள் இருந்தவாறு, 
சேயிருங் குன்றம் திகழ்ந்த தொப்பச் 
செவ்விய வாகி மலர்ந்தசோதி 
ஆயிரம் தோளொ டிலங்கு பூணும் 
அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.3 

1761 
வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல் 
கையன ஆழியும் சங்கும் ஏந்தி, 
நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார் 
நாகரி கர்பெரி துமிளையர் 
செம்பவ ளமிவர் வாயின் வண்ணம் 
தேவ ரிவர துருவம்சொல்லில் 
அம்பவ ளத்திர ளேயு மொப்பர் 
அச்சோ ஒருவர் அழகியவா. 9.2.4 

1762 
கோழியும் கூடலும் கோயில் கொண்ட 
கோவல ரேயொப்பர் குன்றமன்ன 
பாழியும் தோளுமோர் நான்கு டையர் 
பண்டிவர் தம்மையும் கண்டறியோம் 
வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில் 
மாகடல் போன்றுளர் கையில்வெய்ய, 
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி 
அச்சோவொருவரழகியவா. 9.2.5 

1763 
வெஞ்சின வேழம் மருப்பொ சித்த 
வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை 
தஞ்சுடை யாளர்கொல் யான றியேன் 
தாமரைக் கண்க ளிருந்தவாறு 
கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த 
காளையா ரவர்கண் டார்வணங்கும் 
அஞ்சன மாமலை யேயு மொப்பர் 
அச்சோவொருவரழகியவா. 9.2.6 

1764 
பிணியவிழ் தாமரை மொட்ட லர்த்தும் 
பேரரு ளாளர்கொல்? யானறியேன், 
பணியுமென் நெஞ்சமி தென்கொல் தோழீ. 
பண்டிவர் தம்மையும் கண்டறியோம் 
அணிகெழு தாமரை யன்ன கண்ணும் 
அங்கையும் பங்கய மேனிவானத்து, 
அணிகெழு மாமுகி லேயு மொப்பர் 
அச்சோவொருவரழகியவா. 9.2.7 

1765 
மஞ்சுயர் மாமதி தீண்ட நீண்ட 
மாலிருஞ் சோலைம ணாளர்வந்து என் 
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் 
நீர்மலை யார்கொல்? நினைக்கமாட்டேன்? 
மஞ்சுயர் பொன்மலை மேலெ ழுந்த 
மாமுகில் போன்றுளர் வந்துகாணீர் 
அஞ்சிறைப் புள்ளுமொன் றேறி வந்தார் 
அச்சோவொருவரழகியவா. 9.2.8 

1766 
எண்டிசை யுமெறி நீர்க்க டலும் 
ஏழுல குமுட னேவிழுங்கி 
மண்டியோ ராலிலைப் பள்ளி கொள்ளும் 
மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன் 
கொண்டல்நன் மால்வரை யேயு மொப்பர் 
கொங்கலர் தாமரைக் கண்ணும்வாயும் 
அண்டத் தமரர் பணிய நின்றார் 
அச்சோவொருவரழகியவா. 9.2.9 

1767 
அன்னமும் கேழலும் மீனு மாய 
ஆதியை நாகை யழகியாரை 
கன்னிநன் மாமதிள் மங்கை வேந்தன் 
காமரு சீர்க்கலி கன்றி குன்றா 
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல் மாலை 
ஏழு மிரண்டுமொ ரொன்றும்வல்லார், 
மன்னவ ராயுல காண்டு மீண்டும் 
வானவ ராய்மகிழ் வெய்துவரே. (2) 9.2.10 

1768 
தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன் தொழுதுமெழு 
பொன்னை நைவிக்கும் அப்பூஞ் செருந்தி மணிநீழல்வாய் 
என்னைநை வித்தெழல் கொண்டகன் றபெரு மானிடம், 
புன்னைமுத் தம்பொழில் சூழ்ந்தழ காய புல்லாணியே. (2) 9.3.1 

1769 
உருகி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு 
முருகுவண் டுண்மலர்க் கைதையின் நீழலில் முன்னொருநாள், 
பெருகுகா தன்மை யென்னுள்ள மெய்தப் பிரிந்தானிடம் 
பொருதுமுந் நீர்க்கரைக் கேமணி யுந்து புல்லாணியே. 9.3.2 

1770 
ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதுமெழு 
தாது மல்கு தடஞ்சூழ் பொழில்தாழ்வர் தொடர்ந்து பின் 
பேதை நினைப் பிரியே னினியென் றகன்றானிடம் 
போது நாளுங் கமழும் பொழில்சூழ்ந்த புல்லாணியே. 9.3.3 

1771 
கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் 
நங்க ளீசன் நமக்கே பணித்த மொழிசெய்திலன் 
மங்கை நல்லாய் தொழுது மெழுபோ யவன் மன்னுமூர் 
பொங்கு முந்நீர்க் கரைக்கே மணியுந்து புல்லாணியே. 9.3.4 

1772 
உணரி லுள்ளம் சுடுமால் வினையேன் தொழுதுமெழு 
துணரி நாழல் நறும்போது நம்சூழ் குழல்பெய்து பின் 
தணரி லாவி தளருமென அன்பு தந்தானிடம், 
புணரி யோதம் பணிலம் மணியுந்து புல்லாணியே. 9.3.5 

1773 
எள்கி நெஞ்சே நினைந்திங் கிருந்தென் தொழுதுமெழு 
வள்ளல் மாயன் மணிவண்ண னெம்மான் மருவுமிடம் 
கள்ள விழும்மலர்க் காவியும் தூமடற்கைதையும், 
புள்ளு மள்ளல் பழனங் களும்சூழ்ந்த புல்லாணியே. 9.3.6 

1774 
பரவி நெஞ்சே தொழுதும் எழுபோ யவன்பாலமாய் 
இரவும் நாளும் இனிக்கண் துயிலா திருந்தென்பயன்? 
விரவி முத்தம் நெடுவெண் மணல்மேல் கொண்டு வெண்திரை 
புரவி யென்னப் புதஞ்செய்து வந்துந்து புல்லாணியே. 9.3.7 

1775 
அலமு மாழிப் படையு முடையார் நமக்கன்பராய், 
சலம தாகித் தகவொன் றிலர்நாம் தொழுதுமெழு, 
உலவு கால்நல் கழியோங்கு தண்பைம் பொழிலூடு இசை 
புலவு கானல் களிவண் டினம்பாடு புல்லாணியே. 9.3.8 

1776 
ஓதி நாமம் குளித்துச்சி தன்னால் ஒளிமாமலர்ப் 
பாதம் நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் 
ஆது தாரா னெனிலும் தரும் அன்றியுமன்பராய்ப் 
போதும் மாதே தொழுதும் அவன்மன்னு புல்லாணியே. 9.3.9 

1777 
இலங்கு முத்தும் பவளக் கொழுந்து மெழில்தாமரை 
புலங்கள் முற்றும் பொழில்சூழ்ந் தழகாய புல்லாணிமேல் 
கலங்க லில்லாப் புகழான் கலிய னொலிமாலை 
வலங்கொள் தொண்டர்க் கிடமா வதுபாடில் வைகுந்தமே. (2) 9.3.10 

1778 
காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும் 
ஏவாயி னூடியங்கும் எஃகில் கொடிதாலோ 
பூவார் மணம்கமழும் புல்லாணி கைதொழுதேன் 
பாவாய் இதுநமக்கோர் பான்மையே யாகாதே. (2) 9.4.1 

1779 
முன்னம் குறளுருவாய் மூவடிமண் கொண்டளந்த, 
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன்பயந்தேன் 
பொன்னம் கழிக்கானல் புள்ளினங்காள் புல்லாணி 
அன்னமாய் நூல்பயந்தாற் காங்கிதனைச் செப்புமினே. 9.4.2 

1780 
வவ்வித் துழாயதன்மேல் சென்ற தனிநெஞ்சம் 
செவ்வி யறியாது நிற்குங்கொல் நித்திலங்கள் 
பவ்வத் திரையுலவு புல்லாணி கைதொழுதேன் 
தெய்வச் சிலையாற்கென் சிந்தைநோய் செப்புமினே. 9.4.3 

1781 
பரிய இரணியன் தாகம் அணியுகிரால் 
அரியுருவாய்க் கீண்டான் அருள்தந்த வாநமக்கு 
பொருதிரைகள் போந்துலவு புல்லாணி கைதொழுதேன் 
அரிமலர்க்கண் ணீர்ததும்ப அந்துகிலும் நில்லாவே. 9.4.4 

1782 
வில்லால் இலங்கை மலங்கச் சரந்fதுரந்த 
வல்லாளன் பின்போன நெஞ்சம் வருமளவும், 
எல்லாரு மென்றன்னை யேசிலும் பேசிடினும், 
புல்லாணி யெம்பெருமான் பொய்கேட் டிருந்தேனே. 9.4.5 

1783 
சுழன்றிலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய்மறைந்தான் 
அழன்று கொடிதாகி அஞ்சுடரில் தானடுமால் 
செழுந்தடம்பூஞ் சோலைசூழ் புல்லாணி கைதொழுதேன் 
இழந்திருந்தே னென்றன் எழில்நிறமும் சங்குமே. 9.4.6 

1784 
கனையார் இடிகுரலின் கார்மணியின் நாவாடல் 
தினையேனும் நில்லாது தீயிற் கொடிதாலோ 
புனையார் மணிமாடப் புல்லாணி கைதொழுதேன் 
வினையேன்மேல் வேலையும் வெந்தழலே வீசுமே. 9.4.7 

1785 
தூம்புடைக்கை வேழம் வெருவ மருப்பொசித்த 
பாம்பி னணையான் அருள்தந்த வாநமக்கு 
பூஞ்செருந்தி பொன்சொரியும் புல்லாணி கைதொழுதேன் 
தேம்பலிளம்பிறையும் என்றனக்கோர் வெந்தழலே. 9.4.8 

1786 
வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும், 
ஆதியு மானான் அருள்தந்த வாநமக்கு, 
போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன், 
ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே. 9.4.9 

1787 
பொன்னலரும் புன்னைசூழ் புல்லாணி யம்மானை 
மின்னிடையார் வேட்கைநோய் கூர விருந்ததனை 
கன்னவிலும் திண்டோள் கலிய னொலிவல்லார் 
மன்னவராய் மண்ணாண்டு வானாடு முன்னுவரே. (2) 9.4.10 

1788 
தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் 
தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித் 
துவள என் னெஞ்சகம் சோரவீரும் 
சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன் 
இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார் 
என்னல மைந்துமுன் கொண்டுபோன 
குவளை மலர்நிற வண்ணர்மன்னு 
குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின். (2) 9.5.1 

1789 
தாதவிழ் மல்லிகை புல்லிவந்த 
தண்மதி யினிள வாடையின்னே 
ஊதை திரிதந் துழறியுண்ண 
ஓரிர வுமுறங் கேன் உறங்கும் 
பேதையர் பேதைமை யாலிருந்து 
பேசிலும் பேசுக பெய்வளையார் 
கோதை நறுமலர் மங்கைமார்வன் 
குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின். 9.5.2 

1790 
காலையும் மாலையொத் துண்டுகங்குல் 
நாழிகை யூழியின்f நீண்டுலாவும், 
போல்வதோர் தன்மை புகுந்துநிற்கும் 
பொங்கழ லேயொக்கும் வாடைசொல்லி 
மாலவன் மாமணி வண்ணன்மாயம் 
மற்று முளவவை வந்திடாமுன் 
கோல மயில்பயி லும்புறவில் 
குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின். 9.5.3 

1791 
கருமணி பூண்டுவெண் ணாகணைந்து 
காரிமி லேற்றணர் தாழ்ந்துலாவும் 
ஒருமணி யோசையென் னுள்ளந்தள்ள 
ஓரிர வுமுறங் காதிருப்பேன் 
பெருமணி வானவ ருச்சிவைத்த 
பேரரு ளாளன் பெருமைபேசி 
குருமணி நீர்கொழிக் கும்புறவில் 
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.4 

1792 
திண்டிமி லேற்றின் மணியும் ஆயன் 
தீங்குழ லோசையும் தென்றலோடு 
கொண்டதோர் மாலையும் அந்தியீன்ற 
கோல இளம்பிறை யோடுகூடி 
பண்டையவல்லவிவைநமக்குப் 
பாவியே னாவியை வாட்டஞ்செய்யும் 
கொண்டல் மணிநிற வண்ணர்மன்னு 
குறுங்யுஉடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.5 

1793 
எல்லியும் நன்பக லுமிருந்தே 
ஏசிலும் ஏசுக ஏந்திழையார் 
நல்லர் அவர்திறம் நாமறியோம் 
நாண்மடம் அச்சம் நமக்கிங்கில்லை 
வல்லன சொல்லி மகிழ்வரேனும் 
மாமணி வண்ணரை நாம்மறவோம் 
கொல்லை வளரிள முல்லைபுல்கு 
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.6 

1794 
செங்க ணெடிய கரியமேனித் 
தேவ ரொருவரிங் கேபுகுந்து என் 
அங்கம் மெலிய வளைக ழல 
ஆதுகொ லோ என்று சொன்னபின்னை 
ஐங்கணை வில்லிதன் ஆண்மையென்னோ 
டாடு மதனை யறியமாட்டேன் 
கொங்கலர் தண்பணை சூழ்புறவில் 
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.7 

1795 
கேவல மன்று கடலினோசை 
கேண்மின்கள் ஆயன்கை ஆம்பல்வந்து என் 
ஆவி யளவும் அணைந்துநிற்கும் 
அன்றியும் ஐந்து கணைதெரிந்திட்டு 
ஏவலங் காட்டி இவனொருவன் 
இப்படி யேபுகுந் தெய்திடாமுன் 
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து 
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.8 

1796 
சோத்தென நின்று தொழவிரங்கான் 
தொன்னலங் கொண்டெனக்கு இன்றுகாறும் 
போர்ப்பதோர் பொற்படம் தந்துபோனான் 
போயின வூரறி யேன் என்கொங்கை 
மூத்திடு கின்றன மற்றவன்றன் 
மொய்யக லம் அணை யாதுவாளா 
கூத்த னிமையவர் கோன்விரும்பும் 
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். 9.5.9 

1797 
செற்றவன் தென்னிலங் கைமலங்கத் 
தேவர்பி ரான்திரு மாமகளைப் 
பெற்றும் என் நெஞ்சகம் கோயில்கொண்ட 
பேரரு ளாளன் பெருமைபேசக் 
கற்றவன் காமரு சீர்க்கலியன் 
கண்ணகத் தும்மனத் துமகலாக் 
கொற்றவன் முற்றுல காளிநின்ற 
குறுங்குடிக் கேயென்னை உய்த்திடுமின். (2) 9.5.10 

1798 
அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர், 
பக்கம் நிற்க நின்ற பண்பர் ஊர்போலும் 
தக்க மரத்தின் தாழ்சினையேறி, தாய்வாயில் 
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே. (2) 9.6.1 

1799 
துங்காராரவத்திரைவந் துலவத் தொடுகடலுள், 
பொங்காராரவில் துயிலும் புனிதர் ஊர்போலும், 
செங்கா லன்னம் திகழ்தண் பணையில் பெடையோடும், 
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே. 9.6.2 

1800 
வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள், 
கேழல் செங்கண் மாமுகில் வண்ணர் மருவுமூர், 
ஏழைச் செங்கால் இன்துணை நாரைக் கிரைதேடி, 
கூழைப் பார்வைக் கார்வயல் மேயும் குறுங்குடியே. 9.6.3 

1801 
சிரமுந்னைந்துமைந்தும் சிந்தச் சென்று, அரக்கன் 
உரமும் கரமும் துணித்த வுரவோன் ஊர்போலும், 
இரவும் பகலும் ஈன்தேன் முரல, மன்றெல்லாம் 
குரவின் பூவே தான்மணம் நாறுங் குறுங்குடியே. 9.6.4 

1802 
கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலிமான்தேர் 
ஐவர்க் காய்,அன் றமரில் உய்த்தான் ஊர்போலும், 
மைவைத் திலங்கு கண்ணார் தங்கள் மொழியொப்பான், 
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்யுஉடியே. 9.6.5 

1803 
தீநீர் வண்ண மாமலர் கொண்டு விரையேந்தி, 
தூநீர் பரவித் தொழுமி னெழுமின் தொண்டீர்காள், 
மாநீர் வண்ணன் மருவி யுறையும் இடம் வானில் 
கூனீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே. 9.6.6 

1804 
வல்லிச் சிறு_ண் ணிடையா ரிடைநீர் வைக்கின்ற, 
அல்லல் சிந்தை தவிர அடைமினடியீர்காள் 
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறொப்பான், 
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குறுங்குடியே. 9.6.7 

1805 
நாரார் இண்டை நாண்மலர் கொண்டு நம்தமர்காள், 
ஆரா அன்போ டெம்பெருமானூர் அடைமின்கள், 
தாராவாரும் வார்புனல் மேய்ந்து வயல்வாழும் 
கூர்வாய் நாரை பேடையொ டாடும் குறுங்குடியே. 9.6.8 

1806 
நின்ற வினையும் துயரும் கெடமா மலரேந்தி, 
சென்று பணிமி னெழுமின் தொழுமின் தொண்டீர்காள், 
என்றும் மிரவும் பகலும் வரிவண் டிசைபாட, 
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே. 9.6.9 

1807 
சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம், 
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடிமேல், 
கலையார் பனுவல் வல்லான் கலிய னொலிமாலை 
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே. (2) 9.6.10 

1808 
தந்தைதாய் மக்களே சுற்றமென் 
றுற்றுவர் பற்றி நின்ற 
பந்தமார் வாழ்க்கையை நொந்துநீ 
பழியெனக் கருதி னாயேல் 
அந்தமா யாதியாய் ஆதிக்கும் 
ஆதியாய் ஆய னாய 
மைந்தனார் வல்லவாழ் சொல்லுமா 
வல்லையாய் மருவு நெஞ்சே. (2) 9.7.1 

1809 
மின்னுமா வல்லியும் வஞ்சியும் 
வென்ற_ண் ணிடைநுடங்கும், 
அன்னமென் னடையினார் கலவியை 
அருவருத் தஞ்சி னாயேல், 
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க் 
காகிமுன் தூது சென்ற 
மன்னனார் வல்லவாழ் சொல்லுமா 
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.2 

1810 
பூணுலா மென்முலைப் பாவைமார் 
பொய்யினை மெய்யி தெ ன்று, 
பேணுவார் பேசுமப் பேச்சைநீ 
பிழையெனக் கருதி னாயேல் 
நீணிலா வெண்குடை வாணனார் 
வேள்வியில் மண்ணி ரந்த 
மாணியார் வல்லவாழ் சொல்லுமா 
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.3 

1811 
பண்ணுலாம் மென்மொழிப் பாவைமார் 
பணைமுலை அணைதும் நாம் என்று, 
எண்ணுவார் எண்ணம தொழித்துநீ 
பிழைத்துய்யக் கருதி னாயேல், 
விண்ணுளார் விண்ணின்மீ தியன்றவேங் 
கடத்துளார் வளங்கொள் முந்நீர் 
வண்ணனார் வல்லவாழ் சொல்லுமா 
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.4 

1812 
மஞ்சுதோய் வெண்குடை மன்னராய் 
வாரணம் சூழ வாழ்ந்தார் 
துஞ்சினா ரென்பதோர் சொல்லைநீ 
துயரெனக் கருதி னாயேல் 
நஞ்சுதோய் கொங்கைமேல் அங்கைவாய் 
வைத்தவள் நாளை யுண்ட 
மஞ்சனார் வல்லவாழ் சொல்லுமா 
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.5 

1813 
உருவினார் பிறவிசேர் ஊன்பொதி 
நரம்புதோல் குரம்பை யுள்புக்கு 
அருவிநோய் செய்துநின் றைவர்தாம் 
வாழ்வதற் கஞ்சி னாயேல் 
திருவினார் வேதநான் கைந்துதீ 
வேள்வியோ டங்க மாறும் 
மருவினார் வல்லவாழ் சொல்லுமா 
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.6 

1814 
நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை 
மெய்யெனக் கொண்டு வாளா 
பேயர்தாம் பேசுமப் பேச்சைநீ 
பிழையெனக் கருதி னாயேல், 
தீயலா வெங்கதிர்த் திங்களாய் 
மங்குல்வா னாகி நின்ற 
மாயனார் வல்லவாழ் சொல்லுமா 
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.7 

1815 
மஞ்சுசேர் வானெரி நீர்நிலம் 
காலிவை மயங்கி நின்ற 
அஞ்சுசேராக்கையை அரணமன் 
றென்றுய்யக் கருதி னாயேல், 
சந்துசேர் மென்முலைப் பொன்மலர்ப் 
பாவையும் தாமும் நாளும் 
வந்துசேர் வல்லவாழ் சொல்லுமா 
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.8 

1816 
வெள்ளியார் பிண்டியார் போதியார் 
என்றிவர் ஓது கின்ற 
கள்ளநூல் தன்னையும் கருமமன் 
றென்றுய்யக் கருதி னாயேல், 
தெள்ளியார் கைதொழும் தேவனார் 
மாமுநீர் அமுது தந்த, 
வள்ளலார் வல்லவாழ் சொல்லுமா 
வல்லையாய் மருவு நெஞ்சே. 9.7.9 

1817 
மறைவலார் குறைவிலார் உறையுமூர் 
வல்லவாழடிகள் தம்மை, 
சிறைகுலா வண்டறை சோலைசூழ் 
கோலநீள் ஆலி நாடன் 
கறையுலா வேல்வல்ல கலியன்வாய் 
ஒலியிவை கற்று வல்லார் 
இறைவராய் இருநிலம் காவல்பூண் 
டின்பநன் கெய்து வாரே. (2) 9.7.10 

1818 
முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார் 
கலவியை விடுதடு மாறல் 
அந்தர மேழும் அலைகட லேழும் 
ஆயவெம் மடிகள்தம் கோயில், 
சந்தொடு மணியும் அணிமயில் தழையும் 
தழுவிவந் தருவிகள் நிரந்து, 
வந்திழி சாரல் மாலிருஞ் சோலை 
வணங்குதும் வாமட நெஞ்சே. (2) 9.8.1 

1819 
இண்டையும் புனலும் கொண்டிடை யின்றி 
எழுமினோ தொழுதும் என்று இமையோர் 
அண்டரும் பரவ அரவணைத் துயின்ற 
சுடர்முடிக் கடவுள்தம் கோயில் 
விண்டலர் தூளி வேய்வளர் புறவில் 
விரைமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் 
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை 
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.2 

1820 
பிணிவளர் ஆக்கை நீங்க நின் றேத்தப் 
பெருநிலம் அருளின்முன் அருளி 
அணிவளர் குறளாய் அகலிடம் முழுதும் 
அளந்தவெம் மடிகள்தம் கோயில் 
கணிவளர் வேங்கை நெடுநில மதனில் 
குறவர்தம் கவணிடைத் துரந்த 
மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை 
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.3 

1821 
சூர்மயி லாய பேய்முலை சுவைத்துச் 
சுடுசரம் அடுசிலைத் துரந்து 
நீர்மையி லாத தாடகை மாள 
நினைந்தவர் மனம்கொண்ட கோயில் 
கார்மலி வேங்கை கோங்கலர் புறவில் 
கடிமலர் குறிஞ்சியின் நறுந்தேன் 
வார்புனல் சூழ்தண் மாலிருஞ் சோலை 
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.4 

1822 
வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய 
மணிமுடி ஒருபதும் புரள 
அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட 
அமர்ச்செய்த அடிகள்தம் கோயில் 
பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப் 
பிரசம்வந் திழிதர பெருந்தேன் 
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை 
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.5 

1823 
விடங்கலந் தமர்ந்த அரவணைத் துயின்று 
விளங்கனிக் கிளங்கன்று விசிறி, 
குடங்கலந் தாடிக் குரவைமுன் கோத்த 
கூத்தவெம் மடிகள்தம் கோயில் 
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் 
தடவரைக் களிறென்று முனிந்து 
மடங்கல்நின் றதிரும் மாலிருஞ் சோலை 
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.6 

1824 
தேனுகன் ஆவி போயுக அங்கோர் 
செழுந்திரள் பனங்கனி யுதிர 
தானுகந் தெறிந்த தடங்கடல் வண்ணர் 
எண்ணிமுன் இடங்கொண்ட கோயில், 
வானகச் சோலை மரகதச் சாயல் 
மாமணிக் கல்லதர் நிறைந்து, 
மானுகர் சாரல் மாலிருஞ் சோலை 
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.7 

1825 
புதமிகு விசும்பில் புணரிசென் றணவப் 
பொருகடல் அரவணைத் துயின்று, 
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த 
பனிமுகில் வண்ணர்தம் கோயில், 
கதமிகு சினத்த கடதடக் களிற்றின் 
கவுள்வழிக் களிவண்டு பருக, 
மதமிகு சாரல் மாலிருஞ் சோலை 
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.8 

1826 
புந்தியில் சமணர் புத்தரென் றிவர்கள் 
ஒத்தன பேசவும் உகந்திட்டு, 
எந்தைபெம் மானார் இமையவர் தலைவர் 
எண்ணிமுன் இடங்கொண்ட கோயில், 
சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல் 
தாழ்வரை மகளிர்கள் நாளும், 
மந்திரத் திறைஞ்சும் மாலிருஞ் சோலை 
வணங்குதும் வாமட நெஞ்சே. 9.8.9 

1827 
வண்டமர் சாரல் மாலிருஞ் சோலை 
மாமணி வண்ணரை வணங்கும், 
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடுவேல் 
சூழ்வயல் ஆலிநன் னாடன் 
கண்டல்நல் வேலி மங்கையர் தலைவன் 
கலியன்வா யொலிசெய்த பனுவல், 
கொண்டிவை பாடும் தவமுடை யார்கள் 
ஆள்வரிக் குரைகட லுலகே. (2)9.8.10 

1828 
மூவரில் முன்முதல் வன்முழங் கார்கட லுள்கிடந்து, 
பூவுல ருந்திதன் னுள்புவ னம்படைத் துண்டுமிழ்ந்த, 
தேவர்கள் நாயக னைத்திரு மாலிருஞ் சோலைநின்ற, 
கோவலர் கோவிந் தனைக்கொடி யேரிடை கூடுங்கொலோ. (2)9.9.1 

1829 
புனைவளர் பூம்பொழி லார்பொன்னி சூழரங் கநகருள் 
முனைவனை, மூவுல கும்படைத் தமுதல் மூர்த்திதன்னை, 
சினைவளர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்றான் 
கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே. (2)9.9.2 

1830 
உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல், 
கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை, 
திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற, 
அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே.9.9.3 

1831 
சிங்கம தாயவு ணன்திற லாகம்முன் கீண்டுகந்த, 
பங்கய மாமலர்க் கண்பர னையெம் பரஞ்சுடரை, 
திங்கள்நன் மாமுகில் சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற, 
நங்கள்பி ரானையின் றுநணு குங்கொலென் நன்னுதலே.9.9.40 

1832 
தானவன் வேள்விதன் னில்தனி யேகு ற ளாய்நிமிர்ந்து, 
வானமும் மண்ணக மும் அளந் ததிரி விக்கிரமன், 
தேனமர் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற, 
வானவர் கோனையின் றுவணங் கித்தொழ வல்லள் கொலோ.9.9.5 

1833 
நேசமி லாதவர்க் கும்நினை யாதவர்க் கும்மரியான், 
வாசம லர்ப்பொழில் சூழ்வட மாமது ரைப்பிறந்தான், 
தேசமெல் லாம்வணங் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற, 
கேசவ நம்பிதன் னைக்கெண்டை யொண்கண்ணி காணுங்கொலோ. (2)9.9.6 

1834 
புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து, 
கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை, 
தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற, 
வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ.9.9.7 

1835 
பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று, 
காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை, 
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற, 
மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே. (2)9.9.8 

1836 
வலம்புரி யாழி யனைவரை யார்திரள் தோளன்றன்னை, 
புலம்புரி நூலவ னைப்பொழில் வேங்கட வேதியனை, 
சிலம்பிய லாறுடை யதிரு மாலிருஞ் சோலைநின்ற, 
நலந்திகழ் நாரண னைநணு குங்கொலென் நன்னுதலே. (2)9.9.9 

1837 
தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற, 
ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று, 
மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன 
பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே. (2)9.9.10 

1838 
எங்க ளெம்மிறை யெம்பிரா னிமையோர்க்கு 
நாயகன், ஏத் தடியவர் 
தங்கள் தம்மனத்துப் பிரியா தருள்புரிவான், 
பொங்குதண் ணருவி புதம்செய்யப் 
பொன்களே சிதறு மிலங்கொளி, 
செங்கமல மலரும் திருக்கோட்டி யூரானே. (2)9.10.1 

1839 
எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை 
இன்னகைத் துவர்வாய், நிலமகள் 
செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான், 
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை 
மாலையொடு மணந்து, மாருதம் 
தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே.9.10.2 

1840 
வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் 
விண்ணவர் தமக்கிறை, எமக்கு 
ஒள்ளியா னுயர்ந்தா னுலகேழு முண்டுமிழ்ந்தான், 
துள்ளுநீர் மொண்டு கொண்டு சாமரைக் 
கற்றைச் சந்தன முந்தி வந்தசை, 
தெள்ளுநீர்ப் புறவில் திருக்கோட்டி யூரானே.9.10.3 

1841 
ஏறு மேறி இலங்குமொண் மழுப்பற்றும் 
ஈசற் கிசைந்து, உடம்பிலோர் 
கூறுதான் கொடுத்தான் குலமாமகட் கினியான், 
நாறு சண்பக மல்லிகை மலர்புல்கி 
இன்னிள வண்டு, நன்னறுந் 
தேறல்வாய் மடுக்கும் திருக்கோட்டி யூரானே.9.10.4 

1842 
வங்க மாகடல் வண்ணன் மாமணி வண்ணன் 
விண்ணவர் கோன்ம துமலர்த் 
தொங்கல் நீண்முடி யான்நெடி யான்படி கடந்தான், 
மங்குல் தோய்மணி மாட வெண்கொடி 
மாக மீதுயர்ந் தேறி, வானுயர் 
திங்கள் தானணவும் திருக்கோட்டி யூரானே.9.10.5 

1843 
காவல னிலங்கைக் கிறைகலங் கச்சரம் 
செலவுய்த்து, மற்றவன் 
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான், 
நாவ லம்புவி மன்னர் வந்து வணங்க 
மாலுறை கின்றதிங்கென, 
தேவர் வந்திறைஞ்சும் திருக்கோட்டி யூரானே.9.10.6 

1844 
கன்று கொண்டு விளங்கனி யெறிந்து ஆநிரைக் 
கழிவென்று, மாமழை 
நின்று காத்துகந் தான்நில மாமகட் கினியான், 
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்மல்லிகை 
மணமும் அளைந்து,இளந் 
தென்றல் வந்துலவும் திருக்கோட்டி யூரானே.9.10.7 

1845 
பூங்கு ருந்தொசித் தானைகாய்ந் தரிமாச் செகுத்து, 
அடியேனை யாளுகந்து 
ஈங்கென் னுள்புகுந் தானிமை யோர்கள்தம் பெருமான், 
தூங்கு தண்பல வின்கனி தொகுவாழையின் 
கனியொடு மாங்கனி 
தேங்கு தண்புனல்சூழ் திருக்கோட்டி யூரானே. 9.10.8 

1846 
கோவை யின்தமிழ் பாடு வார்குடம் 
ஆடு வார்தட மாமலர்மிசை, 
மேவு நான்முகனில் விளங்கு புரிநூலர், 
மேவு நான்மறை வாணர் ஐவகை வேள்வி 
ஆறங்கம் வல்லவர் தொழும், 
தேவ தேவபிரான் திருக்கோட்டி யூரானே. 9.10.9 

1847 
ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் 
தலைவன் அணிபொழில் 
சேல்கள் பாய்கழனித் திருக்கோட்டி யூரானை, 
நீல மாமுகில் வண்ணனை நெடுமாலை 
இன்தமி ழால்நி னைந்த,இந் 
நாலு மாறும்வல் லார்க்கிட மாகும் வானுலகே. (2) 9.10.10 
திருமங்கைஆழ்வார் அருளிச்செய்த 
பெரிய திருமொழி 
பத்தாம் பத்து 
கலி விருத்தம் 

1848 
ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள் 
வருநல் தொல்கதி யாகிய மைந்தனை 
நெருநல் கண்டது நீர்மலை யின்றுபோய் 
கருநெல் சுழ்கண்ண மங்கையுள் காண்டுமே (2) 10.1.1 

1849 
பொன்னை மாமணி யையணி யார்ந்ததோர் 
மின்னை வேங்கடத் துச்சியிற் கண்டுபோய் 
என்னை யாளுடை யீசனை யெம்பிரான் 
றன்னை யாம்சென்று காண்டும்தண் காவிலே 10.1.2 

1850 
வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய 
பாலை ஆரமு தத்தினைப் பைந்துழாய் 
மாலை ஆலியில் கண்டு மகிழ்ந்து போய் 
ஞால முன்னியைக் காண்டும்நாங் கூரிலே 10.1.3 

1851 
துளக்க மில்சுட ரை,அவு ணனுடல் 
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப்போய் 
அளப்பி லாரமு தையம ரர்க்கருள் 
விளக்கினை சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4 

1852 
சுடலை யில்சுடு நீறன் அமர்ந்ததுஓர் 
நடலை தீர்த்தவ னைநறை யூர்கண்டு,என் 
உடலை யுள்புகுந் துள்ள முருக்கியுண் 
விடலை யைச்சென்று காண்டும்மெய் யத்துளே 10.1.5 

1853 
வானை ஆரமு தம்தந்த வள்ளலை 
தேனை நீள்வயல் சேறையில் கண்டுபோய் 
ஆை ன வாட்டி யருளும் அமரர்த்தம் 
கோனை, யாம்குடந் தைச்சென்று காண்டுமே 10.1.6 

1854 
கூந்த லார்மகிழ் கோவல னாய் வெண்ணெய் 
மாந்த ழுந்தையில் கண்டு மகிழ்ந்துபோய் 
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய 
வேந்த னைச்சென்று காண்டும்வெஃ காவுளே 10.1.7 

1855 
பத்த ராவியைப் பான்மதி யை,அணித் 
தொத்தை மாலிருஞ் சோலைத் தொழுதுபோய் 
முத்தி னைமணி யைமணி மாணிக்க 
வித்தி னை,சென்று விண்ணகர்க் காண்டுமே 10.1.8 

1856 
கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர் 
கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை 
கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய் 
நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே 10.1.9 

1857 
பெற்றம் ஆளியை பேரில் மணாளனை 
கற்ற _ல்கலி கன்றி யுரைசெய்த 
சொற்றி றமிவை சொல்லிய தொண்டர்கட்கு 
அற்ற மில்லையண் டம்அவர்க் காட்சியே 10.1.10 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1858 
இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை 
இம்மை யேயெமக் கெய்திற்றுக் காணீர் 
பரக்க யாமின் றுரைத்தென் இரவணன் 
பட்ட னனினி யவர்க்கு ரைக்கோம் 
குரக்கு நாயகர் காள்.இளங் கோவே 
கோல வல்வி லிராம பிரானே 
அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள் 
அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.1 

1859 
பத்து நீள்முடி யுமவற் றிரட்டிப் 
பாழித் தோளும் படைத்தவன் செல்வம், 
சித்தம் மங்கையர் பால்வைத்துக் கெட்டான் 
செய்வ தொன்றறி யாவடி யோங்கள் 
ஒத்த தோளிரண் டுமொரு முடியும் 
ஒருவர் தம்திறத் தோமன்றி வாழ்ந்தோம் 
அத்த. எம்பெரு மான்.எம்மைக் கொல்லேல் 
அஞ்சி னேம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.2 

1860 
தண்ட காரணி யம்புகுந் தன்று 
தைய லைத்தக விலியெங் கோமான் 
கொண்டு போந்துகெட் டான்எமக் கிங்கோர் 
குற்ற மில்லைகொல் லேல்குல வேந்தே 
பெண்டி ரால்கெடு மிக்குடி தன்னைப் 
பேசு கின்றதென்? தாசர தீ,உன் 
அண்ட வணர் உகப்பதே செய்தாய் 
அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.3 

1861 
எஞ்ச லில்இல்ங் கைக்கிறை யெங்கோன் 
றன்னை முன்பணிந்து எங்கள்கண் முகப்பே 
நஞ்சு தானரக் கர்குடிக் கென்று 
நங்கை யையவன் தம்பியே சொன்னான் 
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் 
வேரி வார்பொழில் மாமயி லன்ன 
அஞ்சி லோதியைக் கொண்டு நடமின் 
அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.4 

1862 
செம்பொன் நீள்முடி எங்கள் இரவணன் 
சீதை யென்பதோர் தெய்வம் கொணர்ந்து 
வம்பு லாம்கடி காவில் சிறையா 
வைத்த தேகுற்ற மாயிற்றுக் காணீர் 
கும்ப னோடு நிகும்பனும் பட்டான் 
கூற்றம் மனிட மாய்வந்து தோன்றி 
அம்பி னாலெம்மைக் கொன்றிடு கின்றது 
அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.5 

1863 
ஓத மாகட லைக்கடந் தேறி 
உயர்க்கொள் மாக்கடி காவை யிறுத்து 
காதல் மக்களும் சுற்றமுங் கொன்று 
கடியி லங்கை மலங்க எரித்துத் 
தூது வந்த குரங்குக்கே உங்கள் 
தோன்றல் தேவியை விட்டு கொடாதே 
ஆதர் நின்று படுகின்ற தந்தோ. 
அஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.6 

1864 
தழ மின்றிமுந் நீரையஞ் ஞான்று 
தகைந்த தேகண்டு வஞ்சி_ண் மருங்குல் 
மாழை மான்மட நோக்கியை விட்டு 
வாழ்கி லாமதி யில்மனத் தானை 
ஏழை யையிலங் கைக்கிறை தன்னை 
எங்க ளையொழி யக்கொலை யவனை 
சூழ மாநினை மாமணி வண்ணா. 
சொல்லி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.7 

1865 
மனங்கொண் டேறும்மண் டோதரி முதலா 
அங்க யற்கண்ணி னார்கள் இருப்ப 
தனங்கொள் மென்முலை நோக்க மொழிந்து 
தஞ்ச மேசில தாபத ரென்று 
புனங்கொள் மென்மயி லைச்சிறை வைத்த 
புன்மை யாளன் நெஞ் சில்புக எய்த 
அனங்க னன்னதிண் டோளெம்மி ராமற் 
கஞ்சி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.8 

1866 
புரங்கள் மூன்றுமோர் மாத்திரைப் போதில் 
பொங்கெ ரிக்கிரை கண்டவன் அம்பின் 
சரங்க ளேகொடி தாயடு கின்ற 
சாம்ப வானுடன் நிற்கத் தொழுதோம் 
இரங்கு நீயெமக் கெந்தைபி ரானே. 
இலங்கு வெங்கதி ரோன்றன் சிறுவா 
குரங்கு கட்கர சே.எம்மைக் கொல்லேல். 
கூறி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ 10.2.9 

1867 
அங்கவ் வானவர்க் காகுலம் தீர 
அணியி லங்கை அழித்தவன் றன்னை 
பொங்கு மாவல வன்கலி கன்றி 
புகன்ற பொங்கத்தங் கொண்டு,இவ் வுலகில் 
எங்கும் பாடிநின் றாடுமின் தொண்டீர். 
இம்மை யேயிட ரில்லை, இறந்தால் 
தங்கு மூர்அண்ட மேகண்டு கொண்மின் 
சாற்றி னோம்தடம் பொங்கத்தம் பொங்கோ. 10.2.10 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1868 
ஏத்து கின்றோம் நாத்த 
ழும்ப இராமன் திருநாமம் 
சோத்தம் நம்பீ. சுக்கி 
ரீவா. உம்மைத் தொழுகின்றோம் 
வார்த்தை பேசீர் எம்மை 
யுங்கள் வானரம் கொல்லாமே 
கூத்தர் போல ஆடு 
கின்றோம் குழமணி தூரமே 10.3.1 

1869 
எம்பி ரானே. என்னை 
யாள்வாய் என்றென் றலற்றாதே 
அம்பின் வாய்ப்பட் டாற்ற 
கில்லா திந்திர சித்தழிந்தான் 
நம்பி அனுமா. சுக்கி 
ரீவ. அங்கத னே.நளனே 
கும்ப கர்ணன் பட்டுப் 
போனான் குழமணி தூரமே 10.3.2 

1870 
ஞால மாளு முங்கள் 
கோமான் எங்கள் இரவணற்குக் 
கால னாகி வந்த 
வாகண் டஞ்சிக் கருமுகில்போல் 
நீலன் வாழ்கசு டேணன் 
வாழ்க அங்கதன் வாழ்கவென்று 
கோல மாக ஆடு 
கின்றோம் குழமணி தூரமே 10.3.3 

1871 
மணங்கள் நாறும் வார்குழ 
லார்கள் மாதர்க ளாதரத்தை 
புணர்ந்த ச ிந்தைப் புன்மை 
யாளன் பொன்ற வரிசிலையால் 
கணங்க ளுண்ண வாளி 
யாண்ட காவல னுக்கிளையோன் 
குணங்கள் பாடி யாடு 
கின்றோம் குழமணி தூரமே 10.3.4 

1872 
வென்றி தந்தோம் மானம் 
வேண்டோம் தானம் எமக்காக 
இன்று தம்மி னெங்கள் 
வாணாள் எம்பெரு மான்தமர்காள் 
நின்று காணீர் கண்க 
ளார நீரெமைக் கொல்லாதே 
குன்று போல ஆடு 
கின்றோம் குழமணி தூரமே 10.3.5 

1873 
கல்லின் முந்நீர் மாற்றி 
வந்து காவல் கடந்து,இலங்கை 
அல்லல் செய்தா னுங்கள் 
கோமான் எம்மை அமர்க்களத்து 
வெல்ல கில்லா தஞ்சி 
னோங்காண் வெங்கதி ரோன்சிறுவா, 
கொல்ல வேண்டா ஆடு 
கின்றோம் குழமணி தூரமே 10.3.6 

1874 
மாற்ற மாவ தித்த 
னையே வம்மின் அரக்கருளீர் 
சீற்றம் _ம்மேல் தீர 
வேண்டில் சேவகம் பேசாதே 
ஆற்றல் சான்ற தொல்பி 
றப்பில் அனுமனை வாழ்கவென்று 
கூற்ற மன்னார் காண 
ஆடீர் குழமணி தூரமே 10.3.7 

1875 
கவள யானை பாய்புர 
வித்தே ரோட ரக்கரெல்லாம் 
துவள, வென்ற வென்றி 
யாளன் றன்தமர் கொல்லாமே 
தவள மாடம் நீட 
யோத்தி காவலன் றன்சிறுவன் 
குவளை வண்ணன் காண 
ஆடீர் குழமணி தூரமே 10.3.8 

1876 
ஏடொத் தேந்தும் நீளி 
லைவேல் எங்கள் இரவணனார் 
ஓடிப் போனார், நாங்கள் 
எய்த்தோம் உய்வதோர் காரணத்தால் 
சூடிப் போந்தோம் உங்கள் 
கோம னாணை தொடரேன்மின் 
கூடி கூடி யாடு 
கின்றோம் குழமணி தூரமே 10.3.9 

1877 
வென்ற தொல்சீர்த் தென்னி 
லங்கை வெஞ்சமத்து அன்றரக்கர் 
குன்ற மன்னா ராடி 
உய்ந்த குழமணி தூரத்தை 
கன்றி நெய்ந்நீர் நின்ற 
வேற்கைக் கலிய னொலிமாலை 
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் 
மூன்றும் படிநின் றாடுமினே 10.3.10 
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1878 
சந்த மலர்க்குழல் தாழத் 
தானுகந் தோடித் தனியே 
வந்து,என் முலைத்தடந் தன்னை 
வாங்கிநின் வாயில் மடுத்து, 
நந்தன் பெறப்பெற்ற நம்பீ. 
நானுகந் துண்ணும் அமுதே, 
எந்தை பெருமனே. உண்ணாய் 
என்னம்மம் சேமமுண் ணாயே 10.4.1 

1879 
வங்க மறிகடல் வண்ணா. 
மாமுகி லேயொக்கும் நம்பீ 
செங்க ணெடிய திருவே 
செங்கம லம்புரை வாயா, 
கொங்கை சுரந்திட வுன்னைக் 
கூவியும் காணாதி ருந்தேன் 
எங்கிருந் தாயர்க ளோடும் 
என்விளை யாடுகின் றாயே 10.4.2 

1880 
திருவில் பொலிந்த எழிலார் 
ஆயர்தம் பிள்ளைக ளோடு 
தெருவில் திளைக்கின்ற நம்பீ 
செய்கின்ற தீமைகள் கண்டிட்டு, 
உருகியென் கொங்கையின் தீம்பால் 
ஓட்டந்து பாய்ந்திடு கின்ற, 
மருவிக் குடங்கா லிருந்து 
வாய்முலை யுண்ணநீ வாராய் 10.4.3 

1881 
மக்கள் பெறுதவம் போலும் 
வையத்து வாழும் மடவார் 
மக்கள் பிறர்கண்ணுக் கொக்கும் 
முதல்வா மதக்களி றன்னாய் 
செக்கர் இளம்பிறை தன்னை 
வாங்கிநின் கையில் தருவன் 
ஒக்கலை மேலிருந் தம்மம் 
உகந்தினி துண்ணநீ வாராய் 10.4.4 

1882 
மைத்த கருங்குஞ்சி மைந்தா. 
மாமரு தூடு நடந்தாய், 
வித்தக னேவிரை யாதே 
வெண்ணெய் விழுங்கும் விகிர்தா, 
இத்தனை போதன்றி யென்றன் 
கொங்கை சுரந்திருக்க கில்லா, 
உத்தம னே.அம்மம் உண்ணாய் 
உலகளந் தாய்.அம்மம் உண்ணாய் 10.4.5 

1883 
பிள்ளய்கள் செய்வன செய்யாய் 
பேசின் பெரிதும் வலியை 
கள்ளம் மனத்தி லுடையை 
காணவே தீமைகள் செய்தி 
உள்ள முருகியென் கொங்கை 
ஓட்டந்து பாய்ந்திடு கின்ற 
பள்ளிக் குறிப்புச்செய் யாதே 
பாலமு துண்ணநீ வாராய் 10.4.6 

1884 
தன்மக னாகவன் பேய்ச்சி 
தான்முலை யுண்ணக் கொடுக்க 
வன்மக னாயவள் ஆவி 
வாங்கி முலையுண்ட நம்பி 
நன்மகள் ஆய்மக ளோடு 
நானில மங்கை மணாளா 
என்மக னே.அம்ம முண்ணாய் 
என்னம்மம் சேமமுண் ணாயே 10.4.7 

1885 
உந்தம் அடிகள் முனிவர் 
உன்னைநான் என்கையிற் கோலால் 
நொந்திட மோதவுங் கில்லேன் 
_ங்கள்தம் ஆநிரை யெல்லாம் 
வந்து புகுதரும் போது 
வானிடைத் தெய்வங்கள் காண 
அந்தியம் போதங்கு நில்லேல் 
ஆழியங் கையனே. வாராய் 10.4.8 

1886 
பெற்றத் தலைவனெங் கோமான் 
பேரரு ளாளன் மதலாய், 
சுற்றக் குழாத்திளங் கோவே. 
தோன்றிய தொல்புக ழாளா, 
கற்றினந் தோறும் மறித்துக் 
கானம் திரிந்த களிறே 
எற்றுக்கென் அம்மமுண் ணாதே 
எம்பெரு மானிருந் தாயே 10.4.9 

1887 
இம்மை யிடர்க்கெட வேண்டி 
ஏந்தெழில் தோள்கலி கன்றி 
செம்மைப் பனுவல்_ல் கொண்டு 
செங்க ணெடியவன் றன்னை 
அம்மமுண் என்றுரைக் கின்ற 
பாட லிவையைந்து மைந்தும் 
மெய்ம்மை மனத்துவைத் தேத்த 
வினவ ராகலு மாமே 10.4.10 
கலித்தாழிசை 

1888 
பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண, 
ஆங்கவ ளார்த்துப் புடைக்கப் புடையுண்டு 
ஏங்கி யிருந்து சிணுங்கி விளையாடும் 
ஓங்கோத வண்ணனே. சப்பாணி 
ஒளிமணி வண்ணனே. சப்பாணி (2). 10.5.1 

1889 
தாயர் மனங்கள் தடிப்பத் தயிர்நெய்யுண் 
டேயெம் பிராக்கள் இருநிலத் தெங்கள்தம் 
ஆயர் அழக அடிகள் அரவிந்த 
வாயவ னே. கொட்டாய் சப்பாணி 
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.2 

1890 
தாம்மோர் உருட்டித் தயிர்நெய் விழுங்கிட்டு 
தாமோ தவழ்வரென் றாய்ச்சியர் தாம்பினால் 
தாமோ திரக்கையா லார்க்கத் தழும்பிருந்த 
தாமோ தரா. கொட்டாய் சப்பாணி 
தமரைக் கண்ணனே. சப்பாணி 10. 5.3 

1891 
பெற்றார் தளைகழலப் பேர்ந்தங் கயலிடத்து 
உற்றா ரொருவரு மின்றி யுலகினில், 
மற்றரு மஞ்சப்போய் வஞ்சப்பெண் நஞ்சுண்ட 
கற்றாய னே.கொட்டாய் சப்பாணி 
கார்வண்ண னே.கொட்டாய் சப்பாணி 10.5.4 

1892 
சோத்தென நின்னைத் தொழுவன் வரந்தர, 
பேய்ச்சி முலையுண்ட பிள்ளாய், பெரியன 
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச் 
சாற்றியோ ராயிரம் சப்பாணி 
தடங்கைக ளால்கொட்டாய் சப்பாணி 10.5.5 

1893 
கேவல மன்றுன் வயிறு, வயிற்றுக்கு 
நானவல் அப்பம் தருவன் கருவிளைப் 
பூவலர் நீள்முடி நந்தன்றன் போரேறே, 
கோவல னே. கொட்டாய் சப்பாணி 
குடமா டீ.கொட்டாய் சப்பாணி. 10.5.6 

1894 
புள்ளினை வாய்பிளந்து பூங்குருந்தம் சாய்த்து, 
துள்ளி விளயாடித் தூங்குறி வெண்ணெயை, 
அள்ளிய கையா லடியேன் முலைநெருடும் 
பிள்ளைப்பி ரான். கொட்டாய் சப்பாணி 
பேய்முலை யுண்டானே. சப்பாணி. 10.5.7 

1895 
யாயும் பிறரும் அறியாத யாமத்து, 
மாய வலவைப்பெண் வந்து முலைதர, 
பேயென் றவளைப் பிடித்துயி ரையுண்ட, 
வாயவ னே.கொட்டாய் சப்பாணி 
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.8 

1896 
கள்ளக் குழவியாய்க் காலால் சகடத்தை 
தள்ளி யுதைத்திட்டுத் தாயாய் வருவாளை, 
மெள்ளத் தொடர்ந்து பிடித்தா ருயிருண்ட, 
வள்ளலே. கொட்டாய் சப்பாணி 
மால்வண்ண னே.கொட்டாய் சப்பாணி. 10.5.9 

1897 
காரார் புயல்கைக் கலிகன்றி மங்கையர்கோன், 
பேராளன் நெஞ்சில் பிரியா திடங்கொண்ட 
சீராளா, செந்தா மரைக்கண்ணா. தண்டுழாய்த் 
தாராளா, கொட்டாய் சப்பாணி 
தடமார்வா கொட்டாய் சப்பாணி. 10.5.10 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1898 
எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே? 
நரநா ரணனா யுலகத் தற_ல் 
சிங்கா மைவிரித் தவனெம் பெருமான் 
அதுவன் றியும்செஞ் சுடரும் நிலனும், 
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் 
நெருக்கிப் புகபொன் மிடறத் தனைபோது, 
அங்காந் தவன்காண்மின் இன்றாய்ச் சியரால் 
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே (2) 10.6.1 

1899 
குன்றொன்று மத்தா அரவம் அளவிக் 
குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால் 
நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர 
நினைத்த பெருமான் அதுவன் றியும்முன், 
நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ் 
மலையே ழுலகே ழொழியா மைநம்பி, 
அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் 
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே 10.6.2 

1900 
உளைந்திட் டெழுந்த மதுகை டவர்கள் 
உலப்பில் வலியால் அவர்பால், வயிரம் 
விளைந்திட்ட தென்றெண்ணி விண்ணோர் பரவ 
அவர்நா ளொழித்த பெருமான் முனநாள், 
வளைந்திட்ட வில்லாளி வல்வா ளெயிற்று 
மலைபோ லவுண னுடல்வள் ளுகிரால், 
அளைந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் 
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.3 

1901 
தளர்ந்திட் டிமையோர் சரண்தா வெனத்தான் 
சரணாய் முரணா யவனை உகிரால் 
பியள்ந்திட் டமரர்க் கருள்செய் துகந்த 
பெருமான் திருமால் விரிநீ ருலகை, 
வளர்ந்திட்ட தொல்சீர் விறல்மா வலியை 
மண்கொள்ள வஞ்சித் தொருமாண் குறளாய் 
அளந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் 
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே 10.6.4 

1902 
நீண்டான் குறளாய் நெடுவா னளவும் 
அடியார் படுமாழ் துயராய வெல்லாம், 
தீண்டா மைநினைந் திமையோ ரளவும் 
செலவைத் தபிரான் அதுவன் றியும்முன், 
வேண்டா மைநமன் றமரென் தமரை 
வினவப் பெறுவார் அலர்,என்று, உலகேழ் 
ஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால் 
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.5 

1903 
பழித்திட்ட இன்பப் பயன்பற் றறுத்துப் 
பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம், 
ஒழித்திட் டவரைத் தனக்காக்க வல்ல 
பெருமான் திருமா லதுவன் றியும்முன், 
தெழித்திட் டெழுந்தே எதிர்நின்று மன்னன் 
சினத்தோள் அவையா யிரமும் மழுவால் 
அழித்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் 
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.6 

1904 
படைத்திட்ட திவ்வைய முய்ய முனநாள் 
பணிந்தேத்த வல்லார் துயராய வெல்லாம், 
துடைத்திட் டவரைத் தனக்காக்க வென்னத் 
தெளியா அரக்கர் திறலபோய் அவிய, 
மிடைத்திட் டெழுந்த குரங்கைப் படையா 
விலங்கல் புகப்பாய்ச்சி விம்ம, கடலை 
அடைத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் 
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.7 

1905 
நெறித்திட்ட மென்கூழை நன்னே ரிழையோ 
டுடனாய வில்லென்ன வல்லே யதனை, 
இறுத்திட் டவளின்ப மன்போ டணைந்திட 
டிளங்கொற் றவனாய்த் துளங்காத முந்நீர், 
செறித்திட் டிலங்கை மலங்க அரக்கன் 
செழுநீண் முடிதோ ளொடுதாள் துணிய, 
அறுத்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் 
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.8 

1906 
சுரிந்திட்ட செங்கேழ் உளைப்பொங் கரிமாத் 
தொலையப் பிரியாது சென்றெய்தி, எய்தா 
திரிந்திட் டிடங்கொண் டடங்காத தன்வாய் 
இருகூறு செய்த பெருமான் முனநாள் 
வரிந்திட்ட வில்லால் மரமேழு மெய்து 
மலைபோ லுருவத் தொரிராக் கதிமூக்கு, 
அரிந்திட் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் 
அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே 10.6.9 

1907 
நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் 
வயிற்றை நிறைப்பா னுறிப்பால் தயிர்நெய், 
அன்றாய்ச் சியர்வெண்ணெய் விழுங்கி யுரலோ 
டாப்புண் டிருந்த பெருமான் அடிமேல், 
நன்றாய தொல்சீர் வயல்மங் கையர்கோன் 
கலிய னொலிசெய் தமிழ்மாலை வல்லார், 
என்றானும் எய்தா ரிடரின்ப மெய்தி 
இை மயோர்க்கு மப்பால் செலவெய் துவாரே 10.6.10 
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1908 
மான முடைத்துங்க ளாயர் குலமத 
னால்பிறர் மக்கள் தம்மை 
ஊன முடையன செய்யப் பெறாயென் 
றிரப்ப னுரப்ப கில்லேன் 
நானு முரைத்திலேன் நந்தன் பணித்திலன் 
நங்கைகாள். நானென் செய்கேன்? 
தானுமோர் கன்னியும் கீழை யகத்துத் 
தயிர்கடை கின்றான் போலும். 10.7.1 

1909 
காலை யெழுந்து கடைந்தவிம் மோர்விற்கப் 
போகின்றேன் கண்டே போனேன், 
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால் 
மற்றுவந் தாரு மில்லை, 
மேலை யகத்துநங் காய். வந்து காண்மின்கள் 
வெண்ணெ யேயன்று, இருந்த 
பாலும் பதின்குடம் கண்டிலேன் பாவியேன் 
என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.2 

1910 
தெள்ளிய வாய்ச்சிறி யான்நங்கை காள். உறி 
மேலைத் தடாநி றைந்த, 
வெள்ளி மலையிருந் தாலொத்த வெண்ணெயை 
வாரி விழுங்கி யிட்டு, 
கள்வ னுறங்குகின் றான்வந்து காண்மின்கள் 
கையெல் லாம்நெய், வயிறு 
பிள்ளை பரமன்றுஇவ் வேழுல கும்கொள்ளும் 
பேதையேன் என்செய் கேனோ. 10.7.3 

1911 
மைந்நம்பு வேல்கண்நல் லாள்முன்னம் பெற்ற 
வளைவண்ண நன்மா மேனி, 
தன்நம்பி நம்பியு மிங்கு வளர்ந்தது 
அவனி வைசெய் தறியான் 
பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம் பொதியறை 
போகின்ற வாதவழ்ந் திட்டு, 
இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க் குய்வில்லை 
என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.4 

1912 
தந்தை புகுந்திலன் நானிங்கி ருந்திலேன் 
தோழிமா ராரு மில்லை, 
சந்த மலர்க்குழ லாள்தனி யேவிளை 
யாடு மிடம்கு றுகி, 
பந்து பறித்துத் துகில்பற்றிக் கீறிப் 
படிறன் படிறு செய்யும், 
நந்தன் மதலைக்கிங் கென்கட வோம்?நங்காய். 
என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.5 

1913 
மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன் 
நந்தன் பெற்ற மதலை, 
அண்ணல் இலைக்குழ லூதிநம் சேரிக்கே 
அல்லிற் றான்வந்த பின்னை, 
கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மிக் 
கமலச் செவ்வாய்வெ ளுப்ப, 
என்மகள் வண்ண மிருக்கின்ற வாநங்காய். 
என்செய்கேன் என்செய் கேனோ. 10.7.6 

1914 
ஆயிரம் கண்ணுடை இந்திர னாருக்கென் 
றாயர் விழவெ டுப்ப, 
பாசனம் நல்லன பண்டிக ளால்புகப் 
பெய்த அதனை யெல்லாம், 
போயிருந் தங்கொரு பூத வடிவுகொண் 
டுன்மக னின்று நங்காய், 
மாயன் அதனையெல் லாம்முற்ற வாரி 
வளைத்துண் டிருந்தான் போலும். 10.7.7 

1915 
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலுமோர் 
ஓர்க்குடன் துற்றிடு மென்று, 
ஆய்ச்சியர் கூடி யழைக்கவும் நானிதற் 
கெள்கி யிவனை நங்காய் 
சோத்தம் பிரான். இவை செய்யப் பெறாய். என் 
றிரப்பன் உரப்ப கில்லேன், 
பேய்ச்சி முலையுண்ட பின்னையிப் பிள்ளையைப் 
பேசுவ தஞ்சு வேனே. 10.7.8 

1916 
ஈடும் வலியும் உடையவிந் நம்பி 
பிறந்த ஏழு திங்களில், 
ஆடலர் கண்ணியி னானை வளர்த்தி 
யமுனை நீராடப் போனேன், 
சேடன் திருமறு மார்வன் கிடந்து 
திருவடி யால்,மலை போல 
ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை 
உரப்புவ தஞ்சு வேனே. 10.7.9 

1917 
அஞ்சுவன் சொல்லி யழைத்திட நங்கைகாள். 
ஆயிர நாழி நெய்யைப், 
பஞ்சியல் மெல்லடிப் பிள்ளைக ளுண்கின்ற 
பாகந் தான்வை யார்களே, 
கஞ்சன் கடியன் கறவெட்டு நாளில் 
என்கை வலத்தாது மில்லை, 
நெஞ்சத் திருப்பன செய்துவைத் தாய்நம்பீ . 
என்செய்கே னென்செய் கேனோ . 10.7.10 

1918 
அங்ஙனம் தீமைகள் செய்வர்க ளோநம்பீ. 
ஆயர் மடமக் களைப், 
பங்கய நீர்குடைந் தாடுகின் றார்கள் 
பின்னே சென்றொளித் திருந்து, 
அங்கவர் பூந்துகில் வாரிக்கொண் டிட்டர 
வேரி டையா ரிரப்ப, 
மங்கைநல் லீர்.வந்து கொண்மின் என்றுமரம் 
ஏறி யிருந்தாய் போலும் 10.7.11 

1919 
அச்சம் தினைத்தனை யில்லையிப் பிள்ளைக் 
காண்மை யும்சே வகமும், 
உச்சியில் முத்தி வளர்த்தெடுத் தேனுக் 
குரைத்திலன் தானின் றுபோய், 
பச்சிலைப் பூங்கடம் பேறி விசைகொண்டு 
பாய்ந்து புக்கு,ஆ யிரவாய் 
நச்சழல் பொய்கையில் நாகத்தி னோடு 
பிணங்கிநீ வந்தாய் போலும். 10.7.12 

1920 
தம்பர மல்லன் ஆண்மைக ளைத்தனி 
யேநின்று தாம்செய் வாரோ?, 
எம்பெரு மான். உன்னைப் பெற்ற வயிறுடை 
யேனினி யானென் செய்கேன்?, 
அம்பர மேழும் அதிரும் இடிகுரல் 
அங்கனற் செங்க ணுடை, 
வம்பவிழ் கானத்து மால்விடை யோடு 
பிணங்கிநீ வந்தாய் போலும். 10.7.13 

1921 
அன்ன நடைமட ஆய்ச்சி வயிறடித் 
தஞ்ச அருவரை போல, 
மன்னு கருங்களிற் றாருயிர் வவ்விய 
மைந்தனை மாக டல்சூழு, 
கன்னிநன் மாமதிள் மங்கையர் காவலன் 
காமரு சீர்க்கலி கன்றி 
இன்னிசை மாலைக ளீரேழும் வல்லவர்க் 
கேது மிடரில் லையே. (2) 10.7.14 
கலிவிருத்தம் 

1922 
காதில் கடிப்பிடுக் கலிங்க முடுத்து, 
தாதுநல் லதண்ணந் துழாய்கொ டணிந்து, 
போது மறுத்துப் புறமேவந் துநின்றீர், 
ஏதுக்கிது என்னிது என்னிது என்னோ. (2) 10.8.1 

1923 
துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி, 
கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி, 
சுவரார் கதவின் புறமேவந்து நின்றீர், 
இவரா ரிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.2 

1924 
கருளக் கொடியொன் றுடையீர். தனிப்பாகீர், 
உருளச் சகடம துறக்கில் நிமிர்த்தீர், 
மருளைக் கொடுபாடி வந்தில்லம் புகுந்தீர், 
இருளத் திதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.3 

1925 
நாமம் பலவு முடைநா ரணநம்பீ, 
தாமத் துளவம் மிகநா றிடுகின்றீர், 
காம னெனப்பாடி வெந்தில்லம் புகுந்தீர், 
ஏமத் திது வென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.4 

1926 
சுற்றும் குழல்தாழச் சுரிகை யணைத்து, 
மற்றும் பலமாமணி பொன்கொ டணிந்து, 
முற்றம் புகுந்து முறுவல்செய்து நின்றீர், 
எற்றுக் கிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.5 

1927 
ஆனா யரும்ஆ னிரையுமங் கொழியக், 
கூனாய தோர்கொற்ற வில்லொன்று கையேந்திப், 
போனா ரிருந்தா ரையும்பார்த்துப் புகுதீர், 
ஏனோர்கள் முன்னென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.6 

1928 
மல்லே பொருத திரள்தோல் மணவாளீர், 
அல்லே யறிந்தோம்_ம் மனத்தின் கருத்தை, 
சொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரீர் 
எல்லே யிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.7 

1929 
புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர், 
இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம், 
தக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர், 
எக்கே. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.8 

1930 
ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க் 
கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய், 
தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப, 
ஏடி. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.9 

1931 
அல்லிக் கமலக் கண்ணனை அங்கொராய்ச்சி 
எல்லிப் பொழுதூ டியவூடல் திறத்தை, 
கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை, 
சொல்லித் துதிப்பா ரவர்துக்க மிலரே (2) 10.8.10 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1932 
புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த 
பூதனை மாள, இலங்கை 
ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த 
ஊக்க மதனை நினைந்தோ, 
கள்ளவிழ் கோதை காதலு மெங்கள் 
காரிகை மாதர் கருத்தும், 
பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப் 
பேசுவ தெந்தை பிரானே. (2) 10.9.1 

1933 
மன்றில் மலிந்து கூத்துவந் தாடி 
மால்விடை யேழும டர்த்து, ஆயர் 
அன்று நடுங்க ஆனிரை காத்த 
ஆண்மைகொ லோவறி யேன் நான், 
நின்ற பிரானே. நீள்கடல் வண்ணா. 
நீயிவள் தன்னை நின் கோயில், 
முன்றி லெழுந்த முருங்கையில் தேனா 
முன்கை வளைகவர்ந் தாயே. 10.9.2 

1934 
ஆர்மலி யாழி சங்கொடு பற்றி 
ஆற்றலை யாற்றல் மிகுத்துக், 
கார்முகில் வண்ணா. கன்சனை முன்னம் 
கடந்தநின் கடுந்திறல் தானோ, 
நேரிழை மாதை நித்திலத் தொத்தை 
நெடுங்கடல் அமுதனை யாளை, 
ஆரெழில் வண்ணா. அங்கையில் வட்டாம் 
இவளெனக் கருதுகின் றாயே. 10.9.3 

1935 
மல்கிய தோளும் மானுரி யதளும் 
உடையவர் தமக்குமோர் பாகம், 
நல்கிய நலமோ? நரகனை தொலைத்த 
கரதலத் தமைதியின் கருத்தோ? 
அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு 
வந்துமுன் னேநின்று போகாய், 
சொல்லியென் நம்பீ. இவளைநீ யுங்கள் 
தொண்டர்கைத் தண்டென்ற வாறே 10.9.4 

1936 
செருவழி யாத மன்னர்கள் மாளத் 
தேர்வலங் கொண்டவர் செல்லும், 
அருவழி வானம் அதர்படக் கண்ட 
ஆண்மைகொ லோவறி யேன்நான், 
திருமொழி யெங்கள் தேமலர்க் கோதை 
சீர்மையை நினைந்திலை யந்தோ, 
பெருவழி நாவற் கனியினு மெளியள் 
இவளெனப் பேசுகின் றாயே 10.9.5 

1937 
அரக்கிய ராகம் புல்லென வில்லால் 
அணிமதி ளிலங்கையர் கோனை, 
செருக்கழித் தமரர் பணியமுன் னின்ற 
சேவக மோசெய்த தின்று 
முருக்கிதழ் வாய்ச்சி முன்கைவெண் சங்கம் 
கொண்டுமுன் னேநின்று போகாய், 
எருக்கிலைக் காக எறிமழு வோச்சல் 
என்செய்வ தெந்தை பிரானே. 10.9.6 

1938 
ஆழியந் திண்டேர் அரசர்வந் திறைஞ்ச 
அலைகடல் உலகம்முன் ஆண்ட, 
பாழியந் தோளோ ராயிரம் வீழப் 
படைமழுப் பற்றிய வலியோ? 
மாழைமென் னோக்கி மணிநிறங் கொண்டு 
வந்துமுன் னேநின்று போகாய், 
கோழிவெண் முட்டைக் கென்செய்வ தெந்தாய். 
குறுந்தடி நெடுங்கடல் வண்ணா. 10.9.7 

1939 
பொருந்தலன் ஆகம் புள்ளுவந் தேற 
வள்ளுகி ரால்பிளந்து, அன்று 
பெருந்தகைக் கிரங்கி வாலியை முனிந்த 
பெருமைகொ லோசெய்த தின்று, 
பெருந்தடங் கண்ணி சுரும்புறு கோதை 
பெருமையை நினைந்திலை பேசில், 
கருங்கடல் வண்ணா. கவுள்கொண்ட நீராம் 
இவளெனக் கருதுகின் றாயே 10.9.8 

1940 
நீரழல் வானாய் நெடுநிலங் காலாய் 
நின்றநின் நீர்மையை நினைந்தோ? 
சீர்க்கெழு கோதை யென்னல திலளென் 
றன்னதோர் தேற்றன்மை தானோ? 
பார்க்கெழு பவ்வத் தாரமு தனைய 
பாவையைப் பாவம்செய் தேனுக்கு, 
ஆரழ லோம்பும் அந்தணன் தோட்ட 
மாகநின் மனத்துவைத் தாயே 10.9.9 

1941 
வேட்டத்தைக் கருதா தடியிணை வணங்கி 
மெய்ம்மைநின் றெம்பெரு மானை, 
வாட்டிறல் தானை மங்கையர் தலைவன் 
மானவேல் கலியன்வா யொலிகள், 
தோட்டலர் பைந்தார்ச் சுடர்முடி யானைப் 
பழமொழி யால்பணிந் துரைத்த, 
பாட்டிவை பாடப் பத்திமை பெருகிச் 
சித்தமும் திருவோடு மிகுமே (2) 10.9.10 
வெண்டுறை 

1942 
திருத்தாய் செம்போத்தே, 
திருமாமகள் தன்கணவன், 
மருத்தார் தொல்புகழ் மாதவ னைவரத் 
திருத்தாய் செம்போத்தே. 10.10.1 

1943 
கரையாய் காக்கைப்பிள்ளாய், 
கருமாமுகில் போல்நிறத்தன், 
உரையார் தொல்புக ழுத்தம னைவரக், 
கரையாய் காக்கைப்பிள்ளாய். 10.10.2 

1944 
கூவாய் பூங்குயிலே, 
குளிர்மாரி தடுத்துகந்த, 
மாவாய் கீண்ட மணிவண்ண னைவரக், 
கூவாய் பூங்குயிலே. 10.10.3 

1945 
கொட்டாய் பல்லிக்குட்டி, 
குடமாடி யுலகளந்த, 
மட்டார் பூங்குழல் மாதவ னைவரக், 
கொட்டாய் பல்லிக்குட்டி. 10.10.4 

1946 
சொல்லாய் பைங்கிளியே, 
சுடராழி வலனுயர்த்த, 
மல்லார் தோள்வட வேங்கட வன்வர, 
சொல்லாய் பைங்கிளியே. 10.10.5 

1947 
கோழி கூவென்னுமால், 
தோழி. நானென்செய்கேன், 
ஆழி வண்ணர் வரும்பொழு தாயிற்று 
கோழி கூவென்னுமால். 10.10.6 

1948 
காமற் கென்கடவேன், 
கருமாமுகில் வண்ணற்கல்லால், 
பூமே லைங்கணை கோத்துப் புகுந்தெய்யக், 
காமற் கென்கடவேன். 10.10.7 

1949 
இங்கே போதுங்கொலோ, 
இனவேல்நெடுங் கண்களிப்ப, 
கொங்கார் சோலைக் குடந்தைக் கிடந்தமால், 
இங்கே போதுங்கொலோ. 10.10.8 

1950 
இன்னா ரென்றறியேன், 
அன்னே. ஆழியொடும், 
பொன்னார் சார்ங்க முடைய அடிகளை, 
இன்னா ரென்றறியேன். 10.10.9 

1951 
தொண்டீர். பாடுமினோ, 
சுரும்பார்ப்பொழில் மங்கையர்கோன், 
ஒண்டார் வேல்கலி யனொலி மாலைகள், 
தொண்டீர். பாடுமினோ (2) 10.10.10 

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் 


ஸ்ரீ 
ஸ்ரீமதே ராமானுஜாய நம 
திருமங்கைஆழ்வார் அருளிசெய்த 
பெரிய திருமொழி 
பதினோராம் பத்து 
கலி விருத்தம் 

1952 
குன்ற மொன்றெடுத் தேந்தி, மாமழை 
அன்று காத்தவம் மான்,அ ரக்கரை 
வென்ற வில்லியார் வீர மேகொலோ, 
தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன். (2) 11.1.1 

1953 
காரும் வார்பனிக் கடலும் அன்னவன், 
தாரு மார்வமும் கண்ட தண்டமோ, 
சோரு மாமுகில் துளியி னூடுவந்து 
ஈர வாடைதான் ஈரு மென்னையே. 11.1.2 

1954 
சங்கு மாமையும் தளரு மேனிமேல், 
திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன், 
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார், 
கொங்க லார்ந்ததார் கூவு மென்னையே. 11.1.3 

1955 
அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று, 
அங்கொர் தாயுரு வாகி வந்தவள், 
கொங்கை நன்சுண்ட கோயின் மைகொலோ, 
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே 11.1.4 

1956 
அங்கொ ராளரி யாய்,அ வுணனைப் 
பங்க மாவிரு கூறு செய்தவன், 
மங்குல் மாமதி வாங்க வேகொலோ 
பொங்கு மாகடல் புலம்பு கின்றதே. 11.1.5 

1957 
சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை, 
வென்ற வில்லியார் வீர மேகொலோ, 
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து, 
அன்றி லின்குரல் அடரு மென்னையே. 11.1.6 

1958 
பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர, 
மேவி நின்றுநான் கண்ட தண்டமோ, 
வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து, 
ஆவி யேயிலக் காக எய்வதே. 11.1.7 

1959 
மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம், 
மாலின் அந்துழாய் வந்தென் னுள்புக, 
கோல வாடையும் கொண்டு வந்தது,ஓர் 
ஆலி வந்ததால் அரிது காவலே. 11.1.8 

1960 
கொண்டை யொண்கணும் துயிலும், என்நிறம் 
பண்டு பண்டுபோ லொக்கும், மிக்கசீர்த் 
தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே, 
வண்டு கொண்டுவந் தூது மாகிலே 11.1.9 

1961 
அன்று பாரதத் தைவர் தூதனாய், 
சென்ற மாயனைச் செங்கண் மாலினை, 
மன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி 
கன்றி, சொல்வல்லார்க் கல்ல லில்லையே (2) 11.1.10 
கலி நிலைத்துறை 

1962 
குன்ற மெடுத்து மழைத 
டுத்துஇளை யாரொடும் 
மன்றில் குரவை யிணைந்த 
மாலென்னை மால்செய்தான், 
முன்றில் தனிநின்ற பெண்ணை 
மேல்கிடந் தீர்கின்ற 
அன்றிலின் கூட்டைப் பிரிக்க 
கிற்பவ ரார்கொலோ. (2) 11.2.1 

1963 
பூங்கு ருந்தொசித்து ஆனை 
காய்ந்தரி மாச்செகுத்து, 
ஆங்கு வேழத்தின் கொம்பு 
கொண்டுவன் பேய்முலை 
வாங்கி யுண்ட,அவ் வாயன் 
நிற்கஇவ் வாயன்வாய், 
ஏங்கு வேய்ங்குழல் என்னோ 
டாடும் இளமையே. 11.2.2 

1964 
மல்லோடு கஞ்சனும் துஞ்ச 
வென்ற மணிவண்ணன், 
அல்லி மலர்த்தண் டுழாய்நி 
னைந்திருந் தேனையே, 
எல்லி யின்மா ருதம்வந் 
தடுமது வன்றியும், 
கொல்லைவல் லேற்றின் மணியும் 
கோயின்மை செய்யுமே. 11.2.3 

1965 
பொருந்து மாமர மேழு 
செய்த புனிதனார் 
திருந்து சேவடி யென்ம 
னத்து நினைதொறும், 
கருந்தண் மாகடல் மங்கு 
லார்க்கும் அதுவன்றியும், 
வருந்த வாடை வருமி 
தற்கினி யென்செய்கேன். 11.2.4 

1966 
அன்னை முனிவதும் அன்றி 
லின் குர லீர்வதும், 
மன்னு மறிகட லார்ப்ப 
தும்வளை சோர்வதும், 
பொன்னங் கலையல்கு லன்ன 
மென்னடைப் பூங்குழல், 
பின்னை மணாளர் திறத்த 
வாயின பின்னையே 11.2.5 

1967 
ஆழியும் சங்கு முடைய 
நங்கள் அடிகள்தாம், 
பாழிமை யான கனவில் 
நம்மைப் பகர்வித்தார், 
தோழியும் நானு மொழிய 
வையம் துயின்றது, 
கோழியும் கூகின்ற தில்லைக் 
கூரிரு ளாயிற்றே. 11.2.6 

1968 
காமன் றனக்கு முரையல் 
லேன்கடல் வண்ணனார், 
மாமண வாள ரெனக்குத் 
தானும் மகன்சொல்லில், 
யாமங்கள் தோறெரி வீசு 
மென்னிளங் கொங்கைகள், 
மாமணி வண்ணர் திறத்த 
வாய்வளர் கின்றவே. 11.2.7 

1969 
மன்சுறு மாலிருஞ் சோலை 
நின்ற மணாளனார், 
நெஞ்சம் நிறைகொண்டு போயி 
னார்நினை கின்றிலர், 
வெஞ்சுடர் போய்விடி யாமல் 
எவ்விடம் புக்கதோ, 
நஞ்சு உடலம் துயின்றால் 
நமக்கினி நல்லதே. 11.2.8 

1970 
காமன் கணைக்கோ ரிலக்க 
மாய்நலத் தில்மிகு, 
பூமரு கோலநம் பெண்மை 
சிந்தித்தி ராதுபோய் 
தூமலர் நீர்கொடு தோழி. 
நாம்தொழு தேத்தினால் 
கார்முகில் வண்ணரைக் கண்க 
ளால்காண லாங் கொலோ. 11.2.9 

1971 
வென்றி விடையுட னேழ 
டர்த்த அடிகளை, 
மன்றில் மலிபுகழ் மங்கை 
மன்கலி கன்றிசொல், 
ஒன்று நின்றவொன் பதுமு 
ரைப்பவர் தங்கள்மேல் 
என்றும் நில்லாவினை யொன்றும் 
சொல்லி லுலகிலே (2) 11.2.10 
தரவு கொச்சகக் கலிப்பா 

1972 
மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப் 
பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப் பொருகடல்சூழ் 
தென்னிலங்கை யீடழித்த தேவர்க் கிதுகாணீர் 
என்னிலங்கு சங்கோ டெழில்தோற் றிருந்தேனே. (2) 11.3.1 

1973 
இருந்தானெ னுள்ளத் திறைவன், கறைசேர் 
பருந்தாள் களிற்றுக் கருள்செய்த, செங்கண் 
பெருந்தோள் நெடுமாலைப் பேர்பாடி யாட 
வருந்தாதென் கொங்கை யொளிமன்னும் அன்னே. 11.3.2 

1974 
அன்னே. இவரை யறிவன், மறைநான்கும் 
முன்னே யுரைத்த முனிவ ரிவர்வந்து 
பொன்னேய் வளைகவர்ந்து போகார் மனம்புகுந்து 
என்னே யிவரெண்ணும் எண்ணம் அறியோமே. 11.3.3 

1975 
அறியோமே யென்றுரைக்க லாமே எமக்கு, 
வெறியார் பொழில்சூழ் வியன்குடந்தை மேவி, 
சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு 
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தார் தம்மையே? 11.3.4 

1976 
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு, 
தம்மையே யொக்க அருள்செய்வ ராதலால், 
தம்மையே நாளும் வணங்கித் தொழுதிறைஞ்சி, 
தம்மையே பற்றா மனத்தென்றும் வைத்தோமே. 11.3.5 

1977 
வைத்தா ரடியார் மனத்தினில் வைத்து, இன்பம் 
உற்றா ரொளிவிசும்பி லோரடிவைத்து, ஓரடிக்கும் 
எய்த்தாது மண்ணென் றிமையோர் தொழுதிறைஞ்சி, 
கைத்தா மரைகுவிக்கும் கண்ணனென் கண்ணனையே 11.3.6 

1978 
கண்ணன் மனத்துள்ளே நிற்கவும், கைவளைகள் 
என்னோ கழன்ற? இவையென்ன மாயங்கள்? 
பெண்ணானோம் பெண்மையோம் நிற்க, அவன்மேய, 
அண்ணல் மலையும் அரங்கமும் பாடோமே. 11.3.7 

1979 
பாடோமே யெந்தை பெருமானை? பாடிநின்று 
ஆடோமே யாயிரம் பேரானை? பேர்நினைந்து 
சூடோமே சூடும் துழாயலங்கல்? சூடி,நாம் 
கூடோமே கூடக் குறிப்பாகில்? நன்னெஞ்சே. 11.3.8 

1980 
நன்னெஞ்சே. நம்பெருமான் நாளும் இனிதமரும், 
அன்னம்சேர் கானல் அணியாலி கைதொழுது, 
முன்னம்சேர் வல்வினைகள் போக முகில்வண்ணன், 
பொன்னம்சேர் சேவடிமேல் போதணியப் பெற்றோமே. 11.3.9 

1981 
பெற்றாரார் ஆயிரம் பேரானைப், பேர்பாடப் 
பெற்றான் கலிய னொலிசெய் தமிழ்மாலை, 
கற்றாரோ முற்றுல காள்வ ரிவைகேட்க 
லுற்றார்க்கு, உறுதுய ரில்லை யுலகத்தே (2) 11.3.10 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 

1982 
நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் 
உம்பர் வளநாடு மூட இமையோர் 
தலையிட மற்றெ மக்கொர் சரணில்லை 
என்ன அரணாவ னென்னு மருளால் 
அலைகடல் நீர்க்கு ழம்ப அகடாட 
ஒடி யகல்வா னுரிஞ்ச, முதுகில் 
மலைகளை மீது கொண்டு வருமீனை 
மாலை மறவா திறைஞ்சென் மனனே. (2) 11.4.1 

1983 
செருமிகு வாளெ யிற்ற அரவொன்று 
சுற்றித் திசைமண்ணும் விண்ணு முடனே 
வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் 
குழம்ப இமையோர்கள் நின்று கடைய, 
பருவரை யொன்று நின்று முதுகிற் 
பரந்து சுழலக் கிடந்து துயிலும், 
அருவரை யன்ன தன்மை அடலாமை 
யான திருமால் நமக்கொ ரரணே. 11.4.2. 

1984 
தீதறு திங்கள் பொங்கு சுடரும்பர் 
உம்ப ருலகேழி னோடு முடனே, 
மாதிர மண்சு மந்து வடகுன்று 
நின்ற மலையாறும் ஏழு கடலும் 
பாதமர் சூழ்கு ளம்பி னகமண்ட 
லத்தி னொருபா லொடுங்க வளர்சேர், 
ஆதிமுன் ஏன மாகி அரணாய 
மூர்த்தி அதுனம்மை யாளு மரசே. 11.4.3. 

1985 
தளையவிழ் கோதை மாலை யிருபால் 
தயங்க எரிகான் றிரண்டு தறுகண், 
அளவெழ வெம்மை மிக்க அரியாகி 
அன்று பரியோன் சினங்க ளவிழ, 
வளையுகி ராளி மொய்ம்பில் மறவோன 
தாகம் மதியாது சென்றொ ருகிரால் 
பிளவெழ விட்ட குட்ட மதுவைய 
மூடு பெருநீரில் மும்மை பெரிதே. 11.4.4. 

1986 
வெந்திறல் வாணன் வேள்வி யிடமெய்தி 
அங்கோர் குறளாகி மெய்ம்மை யுணர 
செந்தொழில் வேத நாவின் முனியாகி 
வைய முடிமூன் றிரந்து பெறினும், 
மந்திர மீது போகி மதிநின்றி 
றைஞ்ச மலரோன் வணங்க வளர்சேர், 
அந்தர மேழி னூடு செலவுய்த்த 
பாதம் அதுநம்மை யாளு மரசே. 11.4.5. 

1987 
இருநில மன்னர் தம்மை யிருநாலும் 
எட்டு மொருநாலு மொன்று முடனே, 
செரு_த லூடு போகி யவராவி 
மங்க மழுவாளில் வென்ற திறலோன், 
பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை 
நாதர் புலமங்கை கேள்வர் புகழ்சேர், 
பெருநில முண்டு மிழ்ந்த பெருவாய 
ராகி யவர்நம்மை யாள்வர் பெரிதே. 11.4.6. 

1988 
இலைமலி பள்ளி யெய்தி யிதுமாயம் 
என்ன இனமாய மான்பின் எழில்சேர் 
அலைமலி வேல்க ணாளை யகல்விப்ப 
தற்கொ ருருவாய மானை யாமையா, 
கொலைமலி யெய்து வித்த கொடியோன் 
இலங்கை பொடியாக வென்றி யமருள், 
சிலைமலி செஞ்ச ரங்கள் செலவுய்த்த 
நங்கள் திருமால் நமக்கொ ரரணே. 11.4.7. 

1989 
முன்னுல கங்க ளேழும் இருள்மண்டி 
யுண்ண முதலோடு வீடு மறியாது, 
என்னிது வந்த தென்ன இமையோர் 
திகைப்ப எழில்வேத மின்றி மறைய, 
பின்னையும் வான வர்க்கும் முனிவர்க்கும் 
நல்கி யிருள்தீர்ந்திவ் வைய மகிழ, 
அன்னம தாயி ருந்தங் கற_ல் 
உரைத்த அதுநம்மை யாளு மரசே. 11.4.8. 

1990 
துணைநிலை மற்றெ மக்கொ ருளதென் 
றிராது தொழுமின்கள் தொண்டர் தொலைய 
உணமுலை முங்கொடு த்த வுரவோள 
தாவி யுகவுண்டு வெண்ணெய் மருவி, 
பணமுலை யாயர் மாத ருரலோடு 
கட்ட அதனோடு மோடி அடல்சேர், 
இணைமரு திற்று வீழ நடைகற்ற 
தெற்றல் வினைபற்ற றுக்கும் விதியே. 11.4.9. 

1991 
கொலைகெழு செம்மு கத்த களிறொன்று 
கொன்று கொடியோன் இலங்கை பொடியா 
சிலைகெழு செஞ்ச ரங்கள் செலவுய்த்த 
நங்கள் திருமாலை, வேலை புடைசூழ் 
கலிகெழு மாட வீதி வயல்மங்கை 
மன்னு கலிகன்றி சொன்ன பனுவல், 
ஒலிகெழு பாடல் பாடி யுழல்கின்ற 
தொண்ட ரவராள்வ ரும்ப ருலகே. 11.4.10 
தரவு கொச்சக் கலிப்பா 

1992 
மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா, 
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்தான் காணேடீ 
கானமரும் கல்லதர்ப்போய்க் காடுறைந்த பொன்னடிகள், 
வானவர்தம் சென்னி மலர்க்கண்டாய் சாழலே (2) 11.5.1 

1993 
தந்தை தளைகழல்த் தோன்றிப்போய், ஆய்ப்பாடி 
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் காணேடீ, 
நந்தன் குலமதலை யாய்வளர்ந்தான் நான்முகற்குத் 
தந்தைகாண், எந்தை பெருமான்காண் சாழலே 11.5.2 

1994 
ஆழ்கடல்சூழ் வையகத்தா ரேசப்போய், ஆய்ப்பாடித் 
தாழ்குழலார் வைத்த தயிருண்டான் காணேடீ, 
தாழ்குழலார் வைத்த தயிருண்ட பொன்வயிறு,இவ் 
வேழுலகு முண்டும் இடமுடைத்தால் சாழலே 11.5.3 

1995 
அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி 
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ 
உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு, 
எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே 11.5.4 

1996 
வண்ணக் கருங்குழ லாய்ச்சியால் மொத்துண்டு, 
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டான் காணேடீ, 
கண்ணிக் குறுங்கயிற்றால் கட்டுண்டா னாகிலும், 
எண்ணற் கரியன் இமையோர்க்கும் சாழலே 11.5.5 

1997 
கன்றப் பறைகறங்கக் கண்டவர்தம் கண்களிப்ப, 
மன்றில் மரக்கால்கூத் தாடினான் காணேடீ, 
மன்றில் மரக்கால்கூத் தாடினா னாகிலும், 
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே 11.5.6 

1998 
கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான், 
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ, 
தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும், 
ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே 11.5.7 

1999 
பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து, 
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ, 
தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும், 
தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே 11.5.8 

2000 
கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய், 
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ, 
வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும் 
விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே (2) 11.5.9 

2001 
கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான், 
வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ, 
வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும், கலிகன்றி 
உள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே (2) 11.5.10 
கலி நிலைத்துறை 

2002 
மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி 
வானவரும் யாமுமெல்லாம், 
நெய்ந்நின்ற சக்கரத்தன் திருவயிற்றில் 
நெடுங்காலம் கிடந்ததோரீர், 
எந்நன்றி செய்தாரா ஏதிலோர் 
தெய்வத்தை யேத்துகின்றீர்? 
செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள். 
அண்டனையே ஏத்தீர்களே (2) 11.6.1 

2003 
நில்லாத பெருவெள்ளம் நெடுவிசும்பின் 
மீதோடி நிமிர்ந்தகாலம், 
மல்லாண்ட தடக்கையால் பகிரண்ட 
மகப்படுத்த காலத்து, அன்று 
எல்லாரும் அறியாரோ எம்பெருமான் 
உண்டுமிழ்ந்த எச்சில்தேவர், 
அல்லாதார் தாமுளரே? அவனருளே 
உலகாவ தறியீர்களே? 11.6.2 

2004 
நெற்றிமேல் கண்ணானும் நிறைமொழிவாய் 
நான்முகனும் நீண்டநால்வாய், 
ஒற்றைக்கை வெண்பகட்டின் ஒருவனையும் 
உள்ளிட்ட அமரரோடும், 
வெற்றிப்போர்க் கடலரையன் விழுங்காமல் 
தான்விழுங்கி யுய்யக்கொண்ட, 
கொற்றப்போ ராழியான் குணம்பரவாச் 
சிறுதொண்டர் கொடியவாறே. 11.6.3 

2005 
பனிப்பரவைத் திரைததும்பப் பாரெல்லாம் 
நெடுங்கடலே யானகாலம், 
இனிக்களைகண் இவர்க்கில்லை என்றுலகம் 
ஏழினையும் ஊழில்வாங்கி 
முனித்தலைவன் முழங்கொளிசேர் திருவயிற்றில் 
வைத்தும்மை உய்யக்கொண்ட 
கனிகளவத் திருவுருவத் தொருவனையே 
கழல்தொழுமா கல்லீர்களே 11.6.4 

2006 
பாராரும் காணாமே பரவைமா 
நெடுங்கடலே யானகாலம், 
ஆரானும் அவனுடைய திருவயிற்றில் 
நெடுங்காலம் கிடந்தது,உள்ளத் 
தோராத வுணர்விலீர். உணருதிரேல் 
உலகளந்த வும்பர்கோமான், 
பேராளன் பேரான பேர்களா 
யிரங்களுமே பேசீர்களே 11.6.5 

2007 
பேயிருக்கு நெடுவெள்ளம் பெருவிசும்பின் 
மீதோடிப் பெருகுகாலம், 
தாயிருக்கும் வண்ணமே யும்மைத்தன் 
வயிற்றிருத்தி யுய்யக்கொண்டான், 
போயிருக்க மற்றிங்கோர் புதுத்தெய்வம் 
கொண்டாடும் தொண்டீர், பெற்ற 
தாயிருக்க மணைவெந்நீர் ஆட்டுதிரோ 
மாட்டாத தகவற்றீரே. 11.6.6 

2008 
மண்ணாடும் விண்ணாடும் வானவரும் 
தானவரும் மற்றுமெல்லாம் 
உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் 
தான்விழுங்கி யுய்யக்கொண்ட, 
கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் 
கழல்சூடி, அவனையுள்ளத் 
தெண்ணாத மானிடத்தை யெண்ணாத 
போதெல்லா மினியவாறே 11.6.7 

2009 
மறம்கிளர்ந்து கருங்கடல்நீ ருரம்துரந்து 
பரந்தேறி யண்டத்தப்பால், 
புறம்கிளர்ந்த காலத்துப் பொன்னுலகம் 
ஏழினையும் ஊழில்வாங்கி, 
அறம்கிளர்ந்த திருவயிற்றின் அகம்படியில் 
வைத்தும்மை யுய்யக்கொண்ட, 
நிறம்கிளர்ந்த கருஞ்சோதி நெடுந்தகையை 
நினையாதார் நீசர்தாமே. 11.6.8 

2 010 
அண்டத்தின் முகடழுந்த அலைமுநநீர்த் 
திரைததும்ப ஆவவென்று, 
தொண்டர்க்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் 
தானருளி, உலகமேழும் 
உண்டொத்த திருவயிற்றின் அகம்படியில் 
வைத்தும்மை யுய்யக்கொண்ட, 
கொண்டற்கை மணிவண்ணன் தண்குடந்தை 
நகர்ப்பாடி யாடீர்களே 11.6.9 

2011 
தேவரையும் அசுரரையும் திசைகளையும் 
கடல்களையும் மற்றும் முற்றும், 
யாவரையு மொழியாமே யெம்பெருமான் 
உண்டுமிழ்ந்த தறிந்துசொன்ன, 
காவளரும் பொழில்மங்கைக் கலிகன்றி 
ஒலிமாலை கற்று வல்லார், 
பூவளரும் திருமகளால் அருள்பெற்றுப் 
பொன்னுலகில் பொலிவர் தாமே (2) 11.6.10 
தரவு கொச்சக் கலிப்பா 

2012 
நீணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப் 
பேணான் கடைந்தமுதம் கொண்டுகந்த பெம்மானை, 
பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை, 
காணாதார் கண்ணென்றும் கண்ணல்ல கண்டாமே (2) 11.7.1 

2013 
நீள்வான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண், 
தாளால் அளவிட்ட தக்கணைக்கு மிக்கானை, 
தோளாத மாமணியைத் தொண்டர்க் கினியானை, 
கேளாச் செவிகள் செவியல்ல கேட்டாமே 11.7.2 

2014 
தூயானைத் தூய மறையானை, தென்னாலி 
மேயானை மேவா ளுயிருண் டமுதுண்ட 
வாயானை, மாலை வணங்கி யவன்பெருமை, 
பேசாதார் பேச்சென்றும் பேச்சல்ல கேட்டாமே 11.7.3 

2015 
கூடா இரணியனைக் கூருகிரால் மார்விடந்த, 
ஓடா அடலரியை உம்பரார் கோமனை, 
தோடார் நறுந்துழாய் மார்வனை, ஆர்வத்தால் 
பாடாதார் பாட்டென்றும் பாட்டல்ல கேட்டாமே 11.7.4 

2016 
மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும், 
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட 
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும் 
கையானை, கைதொழா கையல்ல கண்டாமே 11.7.5 

2017 
கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், 
முள்ளார் முளரியும் ஆம்பலுமுன் கண்டக்கால், 
புள்ளாயோர் ஏனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று, 
உள்ளாதா ருள்ளத்தை யுள்ளமாக் கொள்ளோமே 11.7.6 

2018 
கனையார் கடலும் கருவிளையும் காயாவும் 
அனையானை, அன்பினால் ஆர்வத்தால், என்றும் 
சுனையார் மலரிட்டுத் தொண்டராய் நின்று, 
நினையாதார் நெஞ்சென்றும் செஞ்சல்ல கண்டாமே 11.7.7 

2019 
வெறியார் கருங்கூந்தல் ஆய்ச்சியர் வைத்த 
உறியார் நறுவெண்ணெய் தானுகந் துண்ட 
சிறியானை, செங்க ணெடியானைச் சிந்தித் 
தறியாதார், என்றும் அறியாதார் கண்டாமே 11.7.8 

2020 
தேனோடு வண்டாலும் திருமா லிருஞ்சோலை, 
தானிடமாக் கொண்டான் தடமலர்க் கண்ணிக்காய், 
ஆன்விடையே ழன்றடர்த்தாற் காளானா ரல்லாதார், 
மானிடவர் அல்லரென் றென்மனத்தே வைத்தேனே (2) 11.7.9 

2021 
மெய்ந்நின்ற பாவம் அகல, திருமாலைக் 
கைந்நின்ற ஆழியான் சூழும் கழல்சூடி, 
கைந்நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை, 
ஐயொன்று மைந்தும் இவைபாடி யாடுமினே (2) 11.7.10 
கலிவிருத்தம் 

2022 
மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள் 
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றின்னம், 
ஆற்றங் கரைவாழ் மரம்போல அஞ்சுகின்றேன், 
நாற்றஞ் சுவையூ றொலியா கியநம்பீ. (2) 11.8.1 

2023 
சீற்றமுள வாகிலும் செப்புவன், மக்கள் 
தோற்றக் குழிதோற்று விப்பாய்கொ லென்றஞ்சி, 
காற்றத் திடைப்பட்ட கலவர் மனம்போல, 
ஆற்றத் துளங்கா நிற்பனா ழிவலவா. 11.8.2 

2024 
தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து, 
வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி, 
பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல், 
தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா. 11.8.3 

2025 
உருவார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து, 
திரிவாயென்று சிந்தித்தி யென்றதற் கஞ்சி, 
இருபா டெரிகொள் ளியினுள் எறும்பேபோல், 
உருகாநிற்கு மென்னுள்ளம் ஊழி முதல்வா. 11.8.4 

2026 
கொள்ளக் குறையாத இடும்பைக் குழியில், 
தள்ளி புகப்பெய்தி கொல்லென் றதற்கஞ்சி, 
வெள்ளத் திடைப்பட்ட நரியினம் போலே, 
உள்ளம் துளங்காநிற்பன் ஊழி முதல்வா. 11.8.5 

2027 
படைநின்ற பைந்தா மரையோடு அணிநீலம் 
மடைநின் றலரும் வயலாலி மணாளா, 
இடையன் எறிந்த மரமேயொத் திராமே, 
அடைய அருளா யெனக்குன்ற னருளே 11.8.6 

2028 
வேம்பின்புழு வேம்பின்றி யுண்ணாது, அடியேன் 
நான்பின்னு முன்சே வடியன்றி நயவேன், 
தேம்பலிளந் திங்கள் சிறைவிடுத்து, ஐவாய்ப் 
பாம்பின் அணைப்பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ. (2) 11.8.7 

2029 
அணியார் பொழில்சூழ் அரங்க நகரப்பா, 
துணியேன் இனிநின் அருளல்ல தெனக்கு, 
மணியே. மணிமா ணிக்கமே. மதுசூதா, 
பணியா யெனக்குய் யும்வகை, பரஞ்சோதீ. (2) 11.8.8 

2030 
நந்தா நரகத் தழுந்தா வகை, நாளும் 
எந்தாய். தொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய், 
சந்தோகா. தலைவனே. தாமரைக் கண்ணா, 
அந்தோ. அடியேற் கருளாயுன் னருளே (2) 11.8.9 

2031 
குன்ற மெடுத்தா நிரைகாத் தவன்றன்னை, 
மன்றில் புகழ்மங்கை மன்கலி கன்றிசொல், 
ஒன்று நின்றவொன் பதும்வல் லவர்த்தம்மேல், 
என்றும் வினையாயின சாரகில் லாவே (2) 11.8.10

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் 

————————————————————————-

 

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 
பெரிய திருமொழி 


திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம் 


திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 
திருக்குறுந்தாண்டகம் 



2032: 
நிதியினைப் பவளத் தூணை 
நெறிமையால் நினைய வல்லார், 
கதியினைக் கஞ்சன் மாளக் 
கண்டுமுன் ஆண்ட மாளும், 
மதியினை மாலை வாழ்த்தி 
வணங்கியென் மனத்து வந்த, 
விதியினைக் கண்டு கொண்ட 
தொண்டனேன் விடுகி லேனே (2) 1 

2033: 
காற்றினைப் புனலைத் தீயைக் 
கடிமதி ளிலங்கை செற்ற 
ஏற்றினை, இமயம் மேய 
எழில்மணித் திரளை, இன்ப 
ஆற்றினை அமுதந் தன்னை 
அவுணனா ருயிரை யுண்ட 
கூற்றினை, குணங்கொண் டுள்ளம் 
கூறுநீ கூறு மாறே. 2 

2034: 
பாயிரும் பரவை தன்னுள் 
பருவரை திரித்து, வானோர்க் 
காயிருந் தமுதங்க் கொண்ட 
அப்பனை எம்பி ரானை, 
வேயிருஞ்சோலை சூழ்ந்து 
விரிகதி ரிரிய நின்ற, 
மாயிருஞ்சோலை மேய 
மைந்தனை வணங்கி னேனே. 3 

2035: 
கேட்கயா னுற்ற துண்டு 
கேழலா யுலகங்க் கொண்ட, 
பூக்கெழு வண்ண நாரைப் 
போதரக் கனவில் கண்டு, 
வாக்கினால் கருமந் தன்னால் 
மனத்தினால் சிரத்தை தன்னால், 
விழுங்கினேற் கினிய வாறே. 4 

2036: 
இரும்பனன் றுண்ட நீர்போல் 
எம்பெரு மானுக்கு, என்றன் 
அரும்பெற லன்பு புக்கிட் 
டடிமைபூண் டுய்ந்து போனேன், 
வரும்புயல் வண்ண னாரை 
மருவியென் மனத்து வைத்து, 
கரும்பினின் சாறு போலப் 
பருகினேற் கினிய லாறே 5 

2037: 
மூவரில் முதல்வ நாய 
ஒருவனை யுலகங் கொண்ட, 
கோவினைக் குடந்தை மேய 
குருமணித் திரளை, இன்பப் 
பாவினைப் பச்சைத் தேனைப் 
பைம்பொன்னை யமரர் சென்னிப் 
பூவினை, புகழும் தொண்டர் 
எஞ்சொல்லிப் புகழ்வர் தாமே? 6 

2038: 
இம்மையை மறுமை தன்னை 
எமக்குவீ டாகி நின்ற, 
மெய்ம்மையை விரிந்த சோலை 
வியந்திரு வரங்கம் மேய, 
செம்மையைக் கருமை தன்னைத் 
திருமலை ஒருமை யானை, 
தன்மையை நினைவா ரென்றன் 
தலைமிசை மன்னு வாரே. 7 

2039: 
வானிடைப் புயலை மாலை 
வரையிடைப் பிரசம் ஈன்ற, 
தேனிடைக் கரும்பின் சாற்றைத் 
திருவினை மருவி வாழார், 
மானிடப் பிறவி யந்தோ. 
மதிக்கிலர் கொள்க, தந்தம் 
ஊனிடைக் குரம்பை வாழ்க்கைக் 
குறுதியே வேண்டி னாரே. 8 

2040: 
உள்ளமோ ஒன்றில் நில்லாது 
ஓசையி னெரிநின் றுண்ணும் 
கொள்ளிமே லெறும்பு போலக் 
குழையுமா லென்ற னுள்ளம், 
தெள்ளியீர். தேவர்க் கெல்லாம் 
தேவரா யுலகம் கொண்ட 
ஒள்ளியீர், உம்மை யல்லால் 
எழுமையும் துணையி லோமே. 9 

2041: 
சித்தமும் செவ்வை நில்லா 
தெஞ்செய்கேன் தீவி னையேன், 
பத்திமைக் கன்பு டையேன் 
ஆவதே பணியா யந்தாய், 
முத்தொளி மரத கம்மே. 
முழங்கொளி முகில்வண் ணா,என் 
அத்த.நின் னடிமை யல்லால் 
யாதுமொன் றறிகி லேனே. 10 

2042: 
தொண்டெல்லாம் பரவி நின்னைத் 
தொழுதடி பணியு மாறு 
கண்டு, தான் கவலை தீர்ப்பான் 
ஆவதே பணியா யெந்தாய், 
அண்டமா யெண்டி சைக்கும் 
ஆதியாய் நீதி யான, 
பண்டமாம் பரம சோதி. 
நின்னையே பரவு வேனே. 11 

2043: 
ஆவியயை யரங்க மாலை 
அழுக்குரம் பெச்சில் வாயால், 
தூய்மையில் தொண்ட னேன்நான் 
சொல்லினேன் தொல்லை நாமம், 
பாவியேன் பிழத்த வாறென் 
றஞ்சினேற் கஞ்ச லென்று 
காவிபோல் வண்ணர் வந்தென் 
கண்ணுளே தோன்றினாரே 12 

2044: 
இரும்பனன் றுண்ட நீரும் 
போதரும் கொள்க, என்றன் 
அரும்பிணி பாவ மெல்லாம் 
அகன்றன என்னை விட்டு, 
சுரும்பமர் சோலை சூழ்ந்த 
அரங்கமா கோயில் கொண்ட, 
கரும்பினைக் கண்டு கொண்டென் 
கண்ணிணை களிக்கு மாறே 13 

2045: 
காவியை வென்ற கண்ணார் 
கலவியே கருதி, நாளும் 
பாவியே னாக வெண்ணி 
அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன், 
தூவிசேர் அன்னம் மன்னும் 
சூழ்புனல் குடந்தை யானை, 
பாவியென் பாவி யாது 
பாவியே னாயி னேனே. 14 

2046: 
முன்பொலா இராவ ணன்றன் 
முதுமதி ளிலங்கை வேவித்து, 
அன்பினா லனுமன் வந்தாங் 
கடியிணை பணிய நின்றார்க்கு, 
என்பெலா முருகி யுக்கிட் 
டென்னுடை நெஞ்ச மென்னும், 
அன்பினால் ஞான நீர்கொண் 
டாட்டுவ னடிய னேனே. 15 

2047: 
மாயமான் மாயச் செற்று 
மருதிற நடந்து, வையம் 
தாயமா பரவை பொங்கத் 
தடவரை திரித்து, வானோர்க் 
கீயுமால் எம்பி ரானார்க் 
கென்னுடைச் சொற்க ளென்னும், 
தூயமா மாலை கொண்டு 
சூட்டுவன் தொண்ட னேனே 16 

2048: 
பேசினார் பிறவி நீத்தார் 
பேருளான் பெருமை பேசி, 
ஏச்னார் உய்ந்து போனார் 
என்பதிவ் வுலகின் வண்ணம், 
பேசினேன் ஏச மாட்டேன் 
பேதையேன் பிறவி நீத்தற்கு, 
ஆசையோ பெரிது கொள்க 
அலைகடல் வண்ணர் பாலே 17 

2049: 
இளைப்பினை யியக்கம் நீக்கி 
யிருந்துமுன் னிமையைக் கூட்டி, 
அளப்பிலைம் புலன டக்கி 
அன்பவர் கண்ணே வைத்து, 
துளக்கமில் சிந்தை செய்து 
தோன்றலும் சுடர்விட்டு, ஆங்கே 
விளக்கினை விதியில் காண்பார் 
மெய்ம்மையே காண்கிற் பாரே 18 

2050: 
பிண்டியார் மண்டை ஏந்திப் 
பிறர்மனை திரிதந் துண்ணும், 
உண்டியான் சாபம் தீர்த்த 
ஒருவனூர், உலக மேத்தும் 
கண்டியூர் அரங்கம் மெய்யம் 
கச்சிபேர் மல்லை என்று 
மண்டினார், உய்யல் அல்லால் 
மற்றையார்க் குய்ய லாமே? (2) 19 

2051: 
வானவர் தங்கள் கோனும் 
மலர்மிசை அயனும், நாளும் 
தேமலர் தூவி ஏத்தும் 
சேவடிச் செங்கண் மாலை, 
மானவேல் கலியன் சொன்ன 
வண்டமிழ் மாலை நாலைந்தும், 
ஊனம தின்றி வல்லார் 
ஒளிவிசும் பாள்வர் தாமே (2) 20 

திருமங்கைஆழ்வார் திருவடிகளே சரணம் 
ஸ்ரீ: 
ஸ்ரீமதே ராமா_ஜாயா நம: 
திருமங்கைஆழ்வார் அருளிச்செய்த 
திருநெடுந்தாண்டகம் 


2052: 
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் 
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய், 
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப் 
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும் 
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் 
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி, 
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை 
தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே. (2) 1 

2053: 
பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் 
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற, 
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, 
இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது, 
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ 
ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற, 
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி 
முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே. 2 

2054: 
திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும் 
திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும், 
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் 
பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை, 
ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா 
ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால், 
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் 
கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே? 3 

2055: 
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை 
இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய், 
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் 
திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி, 
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா 
அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த 
மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும் 
வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே. 4 

2056: 
ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப 
ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து, 
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி 
இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத் 
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் 
தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு, 
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை 
மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே. 5 

2057: 
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் 
அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும், 
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் 
தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி, 
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த 
நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி, 
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் 
பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 6 

2058: 
வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள 
வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு, 
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த 
வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய, 
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட 
கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி, 
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற 
பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே. 7 

2059: 
நீரகத்தாய். நெடுவரையி னுச்சி மேலாய். 
நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி 
ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய். 
உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும் 
காரகத்தாய். கார்வானத் துள்ளாய். கள்வா. 
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு 
பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய். 
பெருமான்உன் திருவடியே பேணி னேனே. (2) 8 

2060: 
வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் 
மல்லையாய். மதிள்கச்சி யூராய். பேராய், 
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் 
குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான், 
பங்கத்தாய். பாற்கடலாய். பாரின் மேலாய். 
பனிவரையி னுச்சியாய். பவள வண்ணா, 
எங்குற்றாய் எம்பெருமான். உன்னை நாடி 
ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே. 9 

2061: 
பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட 
புகழானாய். இகழ்வாய தொண்ட னேன்நான், 
என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் 
என்னறிவ னேழையேன், உலக மேத்தும் 
தென்னானாய் வடவானாய் குடபா லானாய் 
குணபால தாயினாய் இமையோர்க் கென்றும் 
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி. 
திருமூழிக் களத்தானாய் முதலா னாயே. 10 

2062: 
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் 
பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள், 
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் 
எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும் 
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் 
மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே 
கட்டுவிச்சி சொல் , என்னச் சொன்னாள் நங்காய். 
கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே? 11 

2063: 
நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் 
நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள், 
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ. என்னும் 
வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும், 
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் 
அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும், 
எஞ்சிறகின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் 
இருநிலத்துஓர் பழிபடைத்தேன் ஏபா வம்மே. 12 

2064: 
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய். என்றும் 
காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும், 
வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய். என்றும் 
வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே. என்றும், 
,அல்லடர்த்து மல்லரையன் றட்டாய். என்றும், 
மாகீண்ட கத்தலத்தென் மைந்தா. என்றும், 
சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று 
துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. 13 

2065: 
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா 
மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற, 
அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய 
அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை, 
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் 
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு 
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக. என்று 
மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே. 14 

2066: 
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய 
களிறென்றும் கடல்கிடந்த கனியே. என்றும், 
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி 
அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும், 
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் 
தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு, 
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே 
மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே. 15 

2067: 
கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், 
கடிபொழில்சூழ் கணபுரத்தென் கனியே. என்றும், 
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய். என்றும், 
வடதிருவேங் கடம்மேய மைந்தா. என்றும், 
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே. என்றும், 
விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய். என்றும், 
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் 
துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே. (2) 16 

2068: 
பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் 
பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று 
செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் 
சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே 
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் 
தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு, 
நங்காய்.நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன 
நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே. 17 

2069: 
கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் 
கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம், 
பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் 
பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன், 
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் 
எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும், 
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் 
இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே? 18 

2070: 
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் 
மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும் 
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் 
அணியரங்க மாடுதுமோ தோழீ. என்னும், 
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் 
பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி, 
பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள் 
பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே. 19 

2071: 
தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் 
தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி, 
பேராள னாயிரம் வாணன் மாளப் 
பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க 
பாராளன், பாரிடந்து பாரை யுண்டு 
பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட 
பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் 
பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே? 20 

2072: 
மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ 
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட, 
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே 
இருவராய் வந்தாரென் முன்னே நின்றார் 
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் 
கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே, 
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ. 
அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே. (2) 21 

2073: 
நைவளமொன் றாராயா நம்மை நோக்கா 
நாணினார் போலிறையே நயங்கள் பின்னும், 
செய்வளவி லென்மனமும் கண்ணு மோடி 
எம்பெருமான் திருவடிக்கீழ் அணைய, இப்பால் 
கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் 
கனமகரக் குழையிரண்டும் நான்கு தோளும், 
எவ்வளவுண் டெம்பெருமான் கோயில்? என்றேற்கு 
இதுவன்றோ எழிலாலி? என்றார் தாமே. 22 

2074: 
உள்ளூரும் சிந்தைநோய் எனக்கே தந்தென் 
ஒளிவளையும் மாநிறமும் கொண்டா ரிங்கே, 
தெள்ளூரு மிளந்தெங்கின் தேறல் மாந்திச் 
சேலுகளும் திருவரங்கம் நம்மூ ரென்னக் 
கள்ளூரும் பைந்துழாய் மாலை யானைக் 
கனவிடத்தில் யான்காண்பன் கண்ட போது, 
புள்ளூரும் கள்வாநீ போகேல், என்பன் 
என்றாலு மிதுநமக்கோர

TRS Iyengar

Born on Makara Uthiradam star, native of Mukkur and brought up in Ladavaram village near Arcot and now well settled in Mumbai for over five decades. Presently, at 70, trying to run this website without any commercial expectations or profit motive, just for the sake of our future generations to understand about Sanatana Dharma & Srivaishnavam sampradayam.Within my limited knowledge that I put it here, what I learnt from the world.

Leave a Comment